மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு றுப்பினர் தோழர் சீதாராம் எச்சூரி rediff இணைய இதழுக்கு aலித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்.

மொழியாக்கம்: இரா சிந்தன்.

1 வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மையமான பிரச்சனைகளாக எவை இருக்கும்?

இந்தியாவின் பொருளாதார நிலை. எப்போதும் அதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனாலும் உலக நெருக்கடி அதனை எதிர்பார்த்ததற்கு மேலாக அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனையாக மாற்றி விட்டது.

2 கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில நிதி நிலை அறிக்கைகளில் "ஊக்க தொகைகள்" (stimulus packages) அறிவிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் இடதுசாரிகள் சொல்ல வருவது என்ன?

நாங்கள் சொல்ல வருவது: அரசு தனது உள்கட்டமைப்பில் அதிக நிதியை முதலீடு செய்ய வலியுறுத்துவதே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி. அரசு முதலீட்டில் ஒரு பெரிய உயர்வு இருக்க வேண்டும். இப்போது சில முன்னேற்றங்கள் உள்ளன ஆனால் அவை போதுமானதல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ள சுமார் 40,000 கோடி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது தேவைக்கும் மிகக் குறைவான ஒதுக்கீடு. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ள தொகை அந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானது. அதாவட்டிது, நாங்கள் இதை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம், -- இதுதான் நாங்கள் சொல்லுகிற செய்தி. பெரிய நிறுவனங்களுக்கான காப்புத் தொகை (bail-out) ஒரு எல்லை வரைக்கும் ஒரு வேலை தேவையாக இருக்கலாம். ஆனால் அதில் பணம் மற்றும் பொருளாதாரம் பற்றிய கொள்கைகளின் நியாமான கலப்பு தேவைப்படுகிறது. பொது செலவுகளை அதிகரிப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதிலும் மற்றும் அதற்காக உள்நாட்டு தேவையை அதிகரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.


3 மற்ற வளரும் நாடுகள் எல்லாம் வீழ்ச்சியைப் பதிவு செய்யும்போது இந்தியா எழு சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக அரசு சொல்லுகிறதே!

இந்த ஏழு சதவீத வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றே நினைக்கிறேன். (வருங்காலத்தில்) இந்தியா 5.5 சதவீதம் வளர்சியையாவது பராமரிக்க முயல வேண்டும். ஆனால் நம்மால் ஏழு சதவீத வளர்ச்சியை எப்படி எட்ட முடிந்தது?. அதற்கு அவர்கள் தங்களின் எதிரிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இடதுசாரிகள் நான்கு முக்கிய விசயங்களை துவக்கத்திலேயே தடுத்ததன் மூலம் இந்த நாட்டை முழுமையான அழிவிலிருந்து காத்திருக்கிறோம்.
முதலாவது, முழுமையான நானைய மாற்றிற்கு ரூபாயை உட்படுத்தியதில் இருந்தும். இரண்டாவது, இந்திய தனியார் வங்கிகளில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவதையும், பங்குகளின் அளவிற்கு ஏற்றார்போல வெளிநாட்டு இயக்குனர்களை அனுமதிக்க ஏற்றுக்கொள்ளும் வகையிலான அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் தடுத்தோம். ஒருவேளை அது நடந்திருந்தால் பல அந்நிய நாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த போது, அவைகளோடு சேர்ந்து பெரும்பாலான இந்திய வங்கிகளும் வீதிக்கு வந்திருக்கும். மூன்றாவது, தொழிலாளிகளின் பென்சன் தொகையை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்தோம். மற்றும் இறுதியாக இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த முயற்சிகள் இந்திய பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் பெருமை இந்திரா காந்தியையே சாரும் என்று அவர்கள் (காங்கிரஸ்) கூறுகிறார்கள். ஆனால், வங்கிகள் மற்றும் நிலக்கரி தாதுக்கள் தேசிய மயமாக்கப்பட்டதும், முடி மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதும் 1969 இல் நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்ச்சொன்ன எல்லாமும் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரி யை ஆதரிப்பதற்காக இடதுசாரிகள் வைத்த நிபந்தனைகள். காங்கிரசில் இண்டிகேட்-சிண்டிகேட் யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுது இந்திரா காந்தி யின் அரசு சிறுபான்மை அரசாக இருந்தது, அப்போது இந்திரா அரசு நிலைத்திருக்க அவருக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போதுதான் மேற்ச்சொன்னவைகள் எல்லாம் நடைபெற்றன. எனவே வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டது எனில் அதுவும் இடதுசாரிகளால் நடந்தது.


4 கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே முக்கிய பாலமாக இருந்திருக்கிறீர்கள். காங்கிரசை கையாளுவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? தேர்தலுக்கு பிறகு ஒரு மீண்டும் ஒரு கூட்டணிக்கான தேவை ஏற்பட்டால் உங்களின் விருப்பம் என்னவாக இருக்கும்??

உங்கள கேள்வியின் இரண்டாம் பாகத்தைப் பொறுத்தமட்டில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். எனது விருப்பம் இந்த போரில் காங்கிரஸ் அல்லாத, வகுப்பு வாதிகள் அல்லாத மாற்றினை வெற்றிகொள்வதே. எனவே போருக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றிய கேள்விக்கே இப்போது இடமில்லை.

முதல் கேள்வியை பொறுத்த அளவில், ஆம், நாங்கள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசோடு இணைந்து செயல்பட்டோம். ஆனால் இந்த காலத்தில் முழுவதும் காங்கிரஸ் தனது புதிய-பொருளாதார சீர்திருத்தத்தை தொடர்வதற்கே விரும்பியது. நாங்கள் சில விசயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் போது, அவர்கள் தங்களின் திட்டத்தை பின் வாசல் வழியாக நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்கள்.

உதாரணத்திற்கு சிறு வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு. இதனை நாம் ஒரு முறை அனுமதித்தால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்கள் வேளையி இழப்பார்கள். எனவே வேலை வாய்ப்பை குறைக்கக்கூடிய அந்நிய நேரடி முதலீட்டை சிறு வணிகத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம். ஆனால் அரசு அதனை பின் வாசல் வழியாக் அனுமதிக்க முயற்சித்தது. முதலில் மொத்த வியாபாரத்தில் மட்டும் அனுமதிப்பதாக கூறினார்கள், பிறகு ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி என்றார்கள். பின்பு விளையாட்டு பொருட்கள விற்க அனுமதி தருவதாகக் கூறினார்கள். இவ்வாறு நேர்மையற்ற வழியில் அவர்கள் அந்நிய முதலீட்டை அனுமதித்தார்கள்.

கருத்துகள் இல்லை: