மே தின சிந்தனைக்கு

கட்டுரையாளர் - தோழர் செம்மலர் இரா சிந்தன்


"உழைப்பே உயர்வு தரும்"


உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்திகளில் தவறாமல் இடம் பெற்ற வாசகம் இது, இதிலிருந்தே தொடங்குவோம்

"உழைப்பே உயர்வு தரும்" - யாருக்கு?

உழைப்பாளர் தினம என்றதும், நண்பர் இப்படித் தான் ஆரம்பித்தார் "உழைப்பு தான் நாட்டை உயர்த்தும், பாருங்கள் ஜப்பானை, (அப்போது பார்த்து ஒரு பிச்சைக்காரர் எங்களை கடந்து சென்றார் அவ்வளவ்தான்) "இது கெல்லாம் இருக்கறப்ப எப்பிடி சார் நாடு முன்னேறும்" (புலம்பல்களை ஆரம்பித்துவிடுகிறார்)

ஆம் உழைப்புதான் உயர்வு தரும் , உழைப்பு தான் காடுகளை நகரம் ஆக்கும், கரைகளை செப்பனிடும், நதியை தடுத்து நிறுத்தும், அந்த பிரம்மாண்ட அணைக்கட்டுகள் , உழைப்பின் அசாத்திய சாதனைகள் .. ஆனாலும் 100 கோடிபேர் இருக்கிற இந்தியாவில் உழைப்புக்குதான் பஞ்சமா? இருந்தும் ஏன் வறுமை? பற்றாக்குறை? ஒருவேளை நண்பர் சொன்னது போல பிச்சைகாரதான் பிரச்சனையோ? ..

"கொழுத்தவன் வளர்கிறான் - வறியவன் தெய்கிறான் " நடப்பது இதுதான்

அப்போது, உழைக்கிற மனிதன் வாழ்வான் - சோம்பேறிகள் அழிவார் என்பது தான் உண்மையா? சத்தியமாய் இல்லை ! இன்றைய சமுதாயக் கட்டமைப்பு உழைப்பவனை விட அவனை எயப்பவனுக்குத்தான் சாதகமாய் இருக்கிறது. உடனே "அதுதான் தெரியுமே". புத்திசாலி வாழ்வான். "உழைச்சா பத்தாது புத்தி இருக்கணும்" என்பீர்களே .. ம்ம்ம் அதுதான் அவர்களின் வெற்றியும் கூட . நம்மைக் (தொழிலாளிகளை) கூட சுரண்டல் வாதியாக சிந்திக்க வைத்ததுதான் அவர்களின் (முதலாளி வர்க்கத்தின்) வெற்றி. எனவே "உழைப்பே உயர்வு தரும்" என்பது பொய்த்துப் போனது .திருட்டு புத்திசாலித் தனம் ஆனது.


உழைபாளர்களுக்கு தினம் வைத்து கொண்டாடுவது, சும்மா நடந்த நிகழ்வல்ல (முழு விபரங்களுக்கு வரலாற்றை திரும்பிப் பார்க்கவும்) , அது நம் போராட்டங்களின் மொத்த அடையாளம். நமக்காய் வாழ்ந்து மடிந்த தோழர்களின் தியாக வரலாறுகளை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம்,

உற்ப்பத்தி கருவிகள் நம்மிடம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காய், உழைப்பை சுரண்டிக் கொளுக்கிற கூட்டத்திடம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் விற்கிறோமே! .. அந்த உண்மையை புரிந்து - ஆர்த்தெளுக எம் இனமே - "உலக ப்பாட்டாளி வர்க்கமே ஒன்று சேர்வோம்" என பொதுவுடைமைப் புரட்சி காண நமக்கு நியாபகப் படுத்தும் நாள்.

இது மகிழ்ந்து களித்திருக்கவேண்டிய நாளல்ல - கிளர்ந்து கோசமிட வேண்டிய நாள்

நியாபகப் படுதிக்கொள்வோம்

"நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை சுரண்டல் வன்கொடுமை தவிர - அடைவதர்க்கோ ஒரு பொதுவுடைமை பொன்னுலகம் இருக்கிறது"

உழைப்பாளர் தினத்தில் உழைப்பை போற்றுவோம் - உழைப்பாளர் நிலை கண்டு கொதித்து எழுவோம் !

விலை உயர்வு இந்திய நடைமுறையும் - வெனிசுலா வழிமுறையும்

.................................................................................................................................................................

கட்டுரையாளர் - தோழர் டி.எம் ராஜாமணி

..................................................................................................................................................................

சமீபத்தில மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் நடந்து முடிந்துள்ளது. அம்மாநாட்டில் தேசத்தையும் தேச மக்களையும் பாதுகாத்திட காங்கிரஸ்-பாஜக கட்சகிளுக்கு மாற்றாக 3-வது அணி அமைத்திட வேண்டுமெனவும் அவ்வணி தேர்தலை மையமாகக் கொண்டதாக அல்லாமல் மக்கள் வாழ்க்கைப் பதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக அமைத்திடப்பட வேண்டுமெனவும் தீர்மானித்து அறவிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் முதல் நடவடிக்கையாக வரும ஏப்.16 - 21 வரை நாடு தழுவிய விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தை இடதுசாரி கட்சிகளும், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட ஜனநாயக கட்சிகளும் அறிவித்த, கூட்டாக களத்தில இறங்கிவிட்டனர்.

அரிசி,பருப்பு,இரும்பு,சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவிசய பொருட்களை தாருமாறாக விலை உயர்ந்து மாதமாகிவிட்டது. நாட்டுமக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் அரசோ அவசர அமைச்சரவைக கூட்டம் நடத்திய பின் விலைகளை உயர்த்தி, பெருமுதலாளிவர்கப் பேர்வழிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட ஏற்ப்பாடு செய்துள்ளதாம். சில வரிகளைக குறைத்தும் உள்ளார்களாம். உருப்படியாக இவ்விசயத்தில் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கு லத்தீன் அமெரிக்காவின் ஒரு குட்டி நாடான வெனிசுலாவின் சமீபத்திய நடவடிக்கையை நமது மாபெரும் ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கோடிட்டுக்காட்டுவோம்.

வெனிசுலாவில் சமீப காலமாக சிமெண்ட் விலைகள் தாருமாறாக உயர்த்தப்பட்டன. செயற்கையான சிமெண்ட் தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டது. உற்பத்தியில் பெரும்பகுதி நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டது. உஷாரான வெனிசுலா அரசு நிலைமையை கூர்ந்து கணக்கிட்டது, அங்கே முக்காலே 3வீதம் சிமெண்ட் உற்பத்தி 3 பெரும் அன்னியக் கம்பெனிகளிடம் இருந்தன.

  1. மெக்சிகோ நாட்டின் சிமெக்ஸ்
  2. சுவிட்சர் லாந்தின் ஹோல்கிம்
  3. ஃபிரான்ஸின் லாஃபார்க்

இதில் சிமெக்ஸ் வெனிசுலாவின் மிகப்பெரும் உற்பத்தி நிருவனமாகும். அது நாடுமுழுவதும் வலைப்பின்னல்கள் போல 33 உடனடி கலவை (சநயனல அiஒ) ஆலைகளை நிறுவி ஆண்டுக்கு 4.6 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்து வெனிசுலாவை சுரண்டிக்கொழுத்திருந்தது. இதன் சொத்து மதிப்பு 1.18 பில்லியன் பொலிவார்களாகும் (547 மில்லியன் டாலர்கள்). இந்த முலதனக்குவிப்பு வெனிசுலா மக்களின் உழைப்பே என்பதற்கு ஆதாரம் 2007ம் ஆண்டின் அதன் வளர்ச்சி 17 சதவீதம் ஆகும். அதோடு இக்கம்பெனியின் பனியாளர்களில் (தொழிலாளர் மற்றும் அலுவலர்கள்) 99 சதவீதம் வெனிசுலாநாட்டு மக்களே ஆவர். அந்நாட்டு முலவளத்தை அதன் மக்களைக்கொண்டே சுரண்டி தனது முதலீட்டை பெருக்கிக் கொண்டுள்ளது சிமெக்ஸ் கம்பெனி.

அடுத்து சுவிட்சர்லாந்தின் ஹோல்கிம் கம்பெனி, இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் சிமெண்ட் உற்பத்தி ஆலையாகும். இதன் உலக அளவிலான உற்பத்தியில் 1.5 சதவீதம் மட்டுமே வெனிசுலாவில் இது உற்பத்தி செய்கிறது. ஆனால் அந்த 1.5 சதவீதம் என்பது எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 3லட்சம் டன்கள். இந்த உற்பத்தி முழுவதும் அங்கு நிறுவியுள்ள இரண்டே இரண்டு ஆலைகளால் செய்து முடிக்கப்படுகிறது. இக்கம்பெனியின் பனியாளர்களும் வெனிசுலாநாட்டு மக்களே ஆவர்.

3-வதான ஃபிரான்ஸின் லாஃபார்க் கம்பெனி. இது 1.6 லட்சம் டன்கள் சிமெண்ட்டை உற்பத்தி செய்கிறது.

இம் 3 கம்பெனிகளுமே வெனிசுலா நாட்டின் சிமெண்ட் வளத்தை அந்த நாட்டுக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலேயே குறியாய் இருந்ததை கவனித்த சாவேஸ் அரசு சென்ற வருடமே இவற்றை எச்சரித்திருந்தது, "எங்கள் நாட்டின் தேவைகளை முதலில் நிறைவேற்றுங்கள் அடுத்ததாகவே ஏற்றுமதி இருக்க வேண்டும்" ஆனால் அதை அந்தக் கம்பெனிகள் காதில் போட்டுக்கொள்ளவில்லை, விளைவு சிமெண்ட் தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டு சிமெண்ட் விலையும் கூட்டப்பட்டது. கடந்த 3.04.08 வியாழன் அன்று இம் 3 கம்பெனிகளையும் நாட்டுடைமையாக்கி அறிவித்தார்.

அவர் கூறினார், "இந்நிறுவனங்கள் சிமெண்ட் -க்கு மிக அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றன, மேலும் உற்பத்தியையும் மிக மெதுவாகவே செய்கின்றன. மேலும் மாசுக்களை அதிகப்படுத்துகின்றன, அவற்றைக் குறைக்கும் நவீன தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்ய மறுக்கின்றன. எனவே சிமெண்ட் உற்பத்தியை துரிதப்படுத்திடவும் அதிகப்படுத்திடவும் உள்நாட்டின் தேவைகளை நிறைவேற்றவும் இந்த ஆலைகளை நாங்களே எடுத்துக்கொள்கிறோம்.

இந்த நாட்டுடைமை அறிவிப்பு வந்தவுடனே ஃபிரான்ஸின் பிரதமர் கிரிஸ்டின் லகார்டி "இந்த விசயத்தை முழுமையாய் கையிலெடுத்துக்கொண்டு வெனிசுலாவிடம் விளக்கம் கேட்போம்" என்றார். அதன் பொருள் 2001-ல் பிரான்ஸ்-வெனிசுலா செய்துகொண்ட - இன்வஸ்மென்ட் புரடக்ஸன் அக்கார்ட்ஸ் - ஒப்பந்தப்படி "பரஸ்பரம் எந்தப்பொருளை அபகரித்துக்கொண்டாலும் அதன் முழு மதிப்பை அளித்திட வேண்டும்" என்ற சரத்தை வழியுருத்துவதாகும். சாவேஸ் தமது அறிவிப்பில் இது குறித்தும் தெளிவாகவே கூறியிருந்தார் "இந்த நிறுவனங்கள் எவ்வளவு மதிப்புபக் கொண்டவையாக இருந்தாலும், அந்த விலையை அரசு கொடுக்கும்"


கொள்ளை லாபமே நோக்கமாகக் கொண்டு உற்பத்தி பொருட்களை பதுக்கிவைத்து விலையேற்றுவதுஇ ஏற்றுமதி செய்து உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தி விலை ஏற்றிவிடுவது போன்றவற்றிற்கெல்லாம் எத்தகைய நடவடிக்கைகள் முலம் பதில் சொல்வது என்பதற்கு சின்னஞ்சிறு வெனிசுலா வழிகாட்டிவிட்டது. இந்திய நாட்டு பிரதமரும் அமைச்சரவையும் எஞ்சியுள்ள ஒருவருட ஆட்சியில் என்ன செய்யப்போகிறார்கள்? யாரைப் பாதுகாத்திடப் போகிறார்கள்? தேச மக்களையா இல்லை பெருமுதலாளிகள் - வர்த்தகசுதாடிகளையா?

நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது!!!

ஆதாரம் - www.blomberg.com

www.bbc.com

பகத்சிங் சுகதெவுக்கு எழுதிய கடிதங்கள்

..................................................................................................................................................

தகவல் திரட்டு தோழர்.சக்தி தமிழ்நாடு
...........................................................................................................................



காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன புரட்சியாளர்கள் எனப்படுவோர் 'உணர்ச்சியற்ற எந்திரங்கள்' என்ற அவதூறையும், 'உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்' என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகிவிட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:


அன்புள்ள சகோதரருக்கு,

இந்தக் கடிதம் கைக்குக் கிடைப்பதற்குள் நான் எனது இலட்சியம் நோக்கிய திசையிலே வெகுதூரம் சென்றிருப்பேன்। என்னை நம்பு; இப்பொழுதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்குத் தயாராகிவிட்டேன்..... நானும் வாழ்க்கையின் ஆசைகளும் அபிலாஷைகளும் நிறைந்தவன் தான் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்; இருந்தாலும் வேண்டி வந்தால் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். மெய்யாகவே தியாகம் செய்வேன். மனிதன் உண்மையான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இவை இடையூறாக இருக்கவே முடியாது. இதற்கான சான்று உனக்கு விரைவிலேயே கிடைக்கும்.
ஒரு மனிதனின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயம் காதல் ஒரு மனிதனுக்கு, எங்காவது உதவியாக இருந்திருக்கிறதா என்பதுதான்। இதற்கான பதில் -- ஆம், இருந்திருக்கிறது என்பதுதான். ஆம், அவர்தான் மாஜினி. தமது முதல் புரட்சியின் தோல்வியையும், தமது கடுமையான தோல்வியின் வேதனையையும், இறந்துவிட்ட தமது சகாக்களின் நெஞ்சைப் பிழியவைக்கும் நினைவுகளையும், அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தன என்று படித்திருப்பாய். ஆனால், அவருடைய அன்புக் காதலியிடமிருந்தான ஒரு கடிதம் மட்டும் வராமல் இருந்தால், அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்கலாம்; அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இந்தக் கடிதம்தான், அவரை மற்றவர்களைப் போலவே வலிமையுள்ளவராக ஆக்கியது. சொல்லப்போனால் மற்றவைகளைவிட மிக வலிமையானவராகச் செய்தது.

காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிள்ர்ச்சி। அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல் காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூறமுடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே - அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில் தான் விளையாடுகிறார்கள்.
மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது। எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.
இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம்। காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காமவெறிகளுக்கு உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசுபடாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்....
கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு மனநிலையாக அமையும்

ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனி நபரின்பால் ஏற்படும் காதலை, அதுவும் கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன்। ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனி மனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல், உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்

அன்புள்ள சகோதரா,

உன் கடித்தத்தை, நான் மிகுந்த கவனத்துடன் திரும்பத் திரும்பப் படித்தேன்। மாறியுள்ள சூழ்நிலைகள் நம்மை வெவ்வேறான விதத்தில் ஈர்த்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். நீ சிறைக்கு வெளியே இருந்த காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விசயங்கள் இப்பொழுது உனக்கு இன்றியமையாதவை ஆகியுள்ளன.அதுபோல, நான் சிறைக்கு வெளியே இருந்தபோது ஆதரித்துவந்த விசயங்கள் இப்பொழுது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. உதாரணமாக, இதற்கு முன்னர், தனிமனிதரின் காதலுக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தேன்; ஆனால் இப்போதோ, அந்த காதலுக்கு, என் இதயத்திலும் மனதிலும் குறிப்பிட்ட இடம் எதுவுமே இல்லை.
வெளியில், நீ அதை வன்மையாக எதிர்த்தாய், ஆனால் இப்போதோ, இதுபற்றிய உன் கருத்துக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன; மானுட வாழ்க்கையில், காதல் இன்றியமையாத பகுதி என்றும் இப்போது நீ கருதுகிறாய்। இந்த அனுபவம் உனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது
தற்கொலையைப்பற்றி நான் ஒருநாள் உன்னிடம் பேசியது, உனக்கு நினைவிருக்கலாம்। குறிப்பிட்ட ஒருசில சந்தர்ப்பச் சூழ்நிலைகளில், அது சரியாகவே இருந்திருக்கலாம் என்று நான் அப்போது கூறினேன். ஆனால், நீ எனது கருத்துக்களை எதிர்த்தாய்
இத்தகைய கோழைத்தனமான செயலை, நியாயமானது என்று கருதவே முடியாது என்று நீ பரிகாசமாக கூறினாய்। ஆனால், இந்த விஷயத்தைப் பற்றியதான உன் கருத்துக்களும்கூட, இப்பொழுது முழுக்க முழுக்க மாறிவிட்டன என்பதை நான் உணருகிறேன். இப்போது, குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கீழ், அது நியாயமானது மட்டுமல்ல இன்றியமையாதது என்றும் நீ கருதுகிறாய்
ஆனால், தற்கொலை என்பது முற்றிலும் கோழைத்தனமான, வெறுக்கத்தக்க குற்றம் என்றும் நீ முன்னர் கூறிய அதே கருத்துக்களை ஒத்தவையாகவே எனது கருத்துகளும் இன்று அமைந்துள்ளன। எந்த ஒரு மனிதனுமே, அதனை நியாயமானதாகக் கருதமுடியாது. அப்படியிருக்க, புரட்சியாளர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?....இதுதவிர, தங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றே நம்மில் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் விசயத்தில், மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர், மரண தண்டனையும் நிறைவேற்றப்படும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அது ஒரு அழகான இனிய சாவாகவும் இருக்கும்
ஆனால், தற்கொலை செய்து கொள்வது என்பது, குறிப்பிட்ட சில இன்னல்களையும் துன்பங்களையும் விட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை விடும் கோழைத்தனம்। இன்னல்கள், ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்பதை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நானோ- நீயோ - நம்மில் யாருமே இன்னும் இன்னல்களை அனுபவிக்கவில்லை; நமது வாழ்க்கைகளின் இந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்குகிறது....
புரட்சியாளர்களாக" இருந்து வருவதில், பெருமைகொள்ளும் நம் போன்ற மக்கள், தாங்களாகவே தொடங்கியுள்ள போராட்டங்கள் வாயிலாக வரவழைத்துக் கொண்டிருக்கும், இன்னல்களையும் இடர்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக் கொள்வத்ற்குத் தயாராகவே இருக்க வேண்டும்....
சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் வரை துன்பங்களை அனுபவித்த ஒரு மனிதர், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் கொண்டிருந்த அதே கருத்துக்களையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்று நீ எழுதுகிறாய்। சிறைச்சாலைச் சூழ்நிலைகள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் நொறுக்கி பொடியாக்கிவிடும் என்றும் காரணம் காட்டுகிறாய்.
சிறைக்கு வெளியே நிலவும் சூழ்நிலை, நமது கருத்துக்களுக்கு இசைவானதாக இருக்கிறதா என்று நான் கேட்கட்டுமா? தோல்விகளின் காரணமாக, நாம் அவற்றைக் கைவிட்டிருக்க முடிந்திருக்குமா? இந்தத் துறையில் நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்!
கம்யூனிசத்தின் படைப்பாளியான கார்ல் மார்க்ஸ், இந்தச் சிந்தனையை உருவாக்கிடவில்லை என்றும் நான் கூறுவேன்। குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களை உருவாக்கியதே ஐரோப்பாவில் தோன்றிய தொழில்துறைப் புரட்சிதான்! அவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவராக இருந்தார். காலச்சக்கரத்துக்கு, ஓரளவிற்கு, குறிப்பிட்ட ஒரு உந்துதலை அளிப்பதில் கார்ல் மார்க்ஸ் தம் சொந்த முறையிலே மிகவும் உதவியாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நாட்டில், கம்யூனிசம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு, நான் (ஏன் நீயும் கூட) உயிர் கொடுக்கவில்லை। மாறாக, நமது காலங்கள் மற்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள், நம்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் அது. இந்தக் கருத்துக்களை எங்கும் பரப்பிடச் செய்வதில் நாமும் எளிமையான அளவில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்தப் பொறுப்பான பணியின் சுமையை நாம் நம்மீது சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதால், அப்பணியைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறுகிறேன். கஷ்டங்களைத் தவிர்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது மக்களுக்கு நல்வழி காட்டாது; மாறாக, அது ஒரு பிற்போக்குச் செயலாகவே அமையும்....

வாழ்வு, மரணம் போன்ற விசயங்களிலும் நாம் முற்றிலும் உலகாயத முறையிலேயே சிந்திக்க வேண்டும்। ஒருமுறை, நான் தில்லியிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்ட போது, உணவு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், இந்த விசயத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட நான் தயாராக இல்லாத்தாலும், என் உயிரைக் காப்பதில் நாட்டம் காட்டாததாலும், நான் வாழ்க்கையில்விரக்தி அடைந்து விட்டேன் என்பதை அது நிரூபித்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். என் மரணம் ஒரு தற்கொலைக்கு ஒப்பாகவே இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம்.
அதற்கு நான் சொன்ன பதில்: "என் போன்று திடமான நம்பிக்கையும் எண்ணங்களும் கொண்ட ஒருவன், வீணாக இறந்துபோவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டான்। வாழ்க்கையை அதிக அளவு பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். முடிந்தவரை மானுட நல்ன்களுக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம். குறிப்பாக, துயரமோ கவலையோ இன்றி வாழும் மனிதன், தற்கொலையைப் பற்றி சிந்திப்பதே முறையற்றது என்றுதான் கருதுவான். அப்படியிருக்க, அச்செயலில் எப்படி இறங்குவான்?" அவர்களுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன்
உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறாயா? எனக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை; இதுவிசயத்தில், தண்டனைக் குறைப்போ அல்லது முழு அளவிற்கான மன்னிப்போ அளிக்கப்படும் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை। அப்படியே பூரண மன்னிப்பு அளிக்கப்பட்டாலும்கூட, அது அனைவருக்கும் அளிக்கப்படமாட்டாது. அதிலும் எனக்கு மன்னிப்பு கிடைக்காது; இருந்தும்கூட நமக்கு விடுதலையளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
மக்கள் கிளர்ச்சியாக நமது இயக்கம் மலர்ந்து உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்வது என்பது விருப்பம்

படுகேஸ்வர் தத்திற்கு எழுதிய கடிதம்

அன்புள்ள சகோதரருக்கு,
எனக்கு தண்டனை விதிக்கப்பட்டு விட்டது- தூக்குத் தண்டனை। என்னைத்தவிர, தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் பல குற்றவாளிகள் உள்ளனர். தூக்கு மேடையிலிருந்து எப்படியாவது தப்புவதற்காக அவர்கள் இறைவனிடம் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்களிடையே நான் ஒருவந்தான் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தூக்குமரத்தில் தொங்கும் பாக்கியத்திற்காக, அந்த நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒரு புரட்சியாளர், தன் உயிரை தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடையேறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக் காட்டுவேன்.
எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் உனக்கோ ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது। புரட்சியாளர்கள், தங்களின் இலட்சியங்களுக்காகச் சாவது மட்டுமல்ல; அவர்கள் உயிருடன் இருக்கும் போது பல கஷ்டங்களையும் எதிர்த்திட முடியும் என்பதை, நீ உயிருடன் இருந்து உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
மரணம் என்பது உலகப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாக ஆகிவிடக்கூடாது; மாறாக, தற்செயலாகத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய புரட்சியாளர்கள் தூக்கு மேடை ஏறவும் அஞ்சாமல் இருப்பது மட்டுமின்றி, சிறைச்சாலையின் குறுகிய இருண்ட அறைகளில் அடைக்கப்பட்ட நிலையிலும், படுகேவலமான அநியாயங்களையும் அட்டூழியங்களையும் பொறுத்துக் கொள்ள முடியும் என்பதையும், உன் சொந்த வாழ்க்கை மூலமாகவே உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்।

உன்
பகத்சிங்

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது। கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார்.

தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே। நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.
என்னுடைய பெயர்। இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது। புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை। தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்

ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது। இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை। ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.


இந்திய பட்ஜெட்டில் முதலாளிக்கு 3,80,655 கோடி தள்ளுபடி

சமீபத்தில் நண்பர் வீட்டுக்கு சென்ற போது அங்கு குப்பை தொட்டியில் போட்டுவதற்காக வைத்திருந்த துக்ளக் புத்தகத்தை படிக்க நேர்த்து. அதில் சோ விவசாய கடன் தள்ளுபடி பற்றி தனது கவலையை தெரிவித்து இருந்தார். அதில், இப்படிக் கடன் தள்ளுபடி ஆவது, பொருளாதாரத்திற்கு நல்லதல்ல; கடன் வாங்கினால், நாளை அது தள்ளுபடி என்ற வழக்கம், ஊதாரிதனத்தையும், நேர்மையின்மையும் வளர்க்கும்; பொருளாதாரத்தையும் நசுக்கும். என எழுதிருக்கிறார். ஆனால், இந்த சோவும் மற்ற பத்திரிகைகளும் அரசாங்கத்தின் மற்றொரு புறத்தில் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிக்கு அரசாங்கம் தரும் சலுகைகளும், கடன் தள்ளுபடி பற்றி எழுத துப்பு இல்லை.

கடந்த (2007-) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அள்ளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மட்டும் 58,655 கோடி ரூபாய்.
பங்கு நிறுவங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச் சலுகை ரூபாய். 4,000 கோடி.
தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகை ரூபாய். 38,000 கோடி.
தொழில் நிறுவங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச்சலுகை ரூபாய் 88,000 கோடி
சுங்க வரி விதிப்பில் கோடுக்கப்பட்ட சலுகை ரூபாய் 1,48,000 கோடி
பெரு முதலாளிகள் இந்திய அரசு வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மத்திய அரசால் வாராக்கடன் என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 44,000 கோடி
ஆக, மொத்தம் மத்திய அரசால் (2007-8) பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 3,80,655 கோடி.

இந்தியாவின் ஓட்டு மொத்த பட்ஜெட்டில் 3,80,655 கோடி தள்ளுபடி என்ற பெயரால் இந்திய மக்களின் வரி பணத்தை முதலாளிக்கு வரி வழங்கும் சிதம்பரம், விவசாயிக்கு 66,000 கோடி (இதுவே ஒரு பிராடு) தள்ளுபடி செய்ததை பெரிதாக பீற்றிக் கொள்கிறார்.


..................................................................................................................................................

கட்டுரையாளர் - தோழர்.சக்தி தமிழ்நாடு

..................................................................................................................................................


மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம்

அந்த காலத்தில் பிரபலமானவர்கள் அல்லது தமக்கு பிடித்தவர்களிடம் வாழ்வியல் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் வழக்கம் இருத்தது. அவ்வாறு தந்த தான் கீழே உள்ளது.. இதையும், இன்று உள்ள தலைவர்களும், நடிகர்களும், ஒப்புதல் வாக்குமூலங்களை ஒப்பிட்டு பாருங்கள்.





மார்க்ஸ் வாக்குமூலம்

பிடித்த குணம்: எளிமை
உங்களது முக்கிய குணாதிசியம்: குறிக்கோளில் விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி: போராடுவது
வருத்தம்: சரணடைவது
மன்னிக்கும் தவறு: ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு: அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு: புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள்: ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர்: டைட்ரோட்
பிடித்த கதாநாயகன்: ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி: கிரெட்ஸ்சன்

பிடித்த நிறம்: சிவப்பு
பிடித்த பெயர்: லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு: மீன்
பிடித்த மலர்: டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர் )


பிடித்த கூற்று: மனித குலத்திற்கு பொருந்துகின்ற எதுவும் அந்நியமானது அல்ல
பிடித்த முழக்கம்
:ஓவ்வொன்றையும் சந்தேகப்படுடெஸ்கார்ட்டஸ

.....................................................................................................................................

Content taken from Comrade.Sakthi – from TamilNadu
.....................................................................................................................................