பாஜக-காங். சுருதி இறக்கம்

கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவத்தால் மாற்றத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியும், அத்வானியைப் பிர தமராக ஏற்றுக்கொண்டால் யாருடனும் சேர்ந்து கொள்வோம் என்று பாஜகவும் கூறி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று இல்லை என்ற இவர்கள், தங்கள் சுருதியை மாற்றி யுள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று கொண்டு விட்டதால்தான் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரசுக்கு, திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் தான் துணையாக உள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு பெரிய மாநிலங்களில் கூட் டாளிகளாக இருந்த சமாஜ்வாதி மற்றும் ராஷ் டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் காங் கிரஸ் தனிமரமாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத் தவரை, பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதால், தென் இந்தியா விலும் காங்கிரசுக்கு இழப்புதான் மிஞ்சும்.

பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது 26 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட் டணி இருந்தது. தற்போது ஆறு கட்சிகள்தான் பாஜகவுடன் இணைந்து நிற்கின்றன. அதிலும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் முரண்பட்டு நிற்கிறது. அண்மையில் வருண் காந்தியின் வன்முறையைத் தூண்டும் பேச் சுக்கு நிதிஷ் குமார் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பெரிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தை நீட்டிக்கொண்டே செல்ல விரும்புகின்றன. அத்வானியோ ஒருபடி மேலே போய் மன்மோகன்சிங்குடன் நேரடியாக விவா திக்கத் தயார் என்று அறைகூவல் விடுக்கிறார். தங்களின் ஆட்சியின் போது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு மதிப்பளிக்காத இரு கட்சிகளுமே இவ்வாறு பேசிக்கொள்வது ஆச்சரியமளிக்க வில்லை. ஆனாலும் இருவரும் பேசிக்கொள் வோம் என்ற அத்வானியின் கூற்று மாற்று அணியின் மீதான அச்சத்தையே காட்டுகிறது.

இந்த அணிகள் தகர்ந்துவரும் வேளையில், அதற்கு மாறாக, மூன்றாவது அணி என்று பொது வாக அழைக்கப்படும் மாற்று அணியின் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத் தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த அணி யைச் சேர்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாவதாகத் தான் வரும் என்றெல்லாம் கிண்டலாகப் பேசிய வர்கள், இந்த அணி வெற்றி பெற்றால் யாரைப் பிர தமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற விவாதத்திற்குத் தாவியுள்ளனர். மாற்று அணி வெற்றிபெறப்போவ தை இத்தகைய விவாதங்கள் உறுதி செய்கின்றன.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, உ.பி., கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இடங்களையும், மற்ற மாநிலங் களில் கணிசமான இடங்களையும் கைப்பற்றப் போகும் மாற்று அணியை மூன்றாவது அணி என்று அழைப்பதை விட முதலாவது அணி என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக் கும். பெரிய மாநிலங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை கரணங்கள் போட்டாலும் பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதே தற்போதைய நிலை மையாகும்

கருத்துகள் இல்லை: