அத்வானியின் ஐ.டி. வாக்குறுதியும் என்.டி.ஏ-வின் கொள்கையும்

-எஸ்.ஏ. மாணிக்கம்

  • · கிராமப்புறங்களில் ஐடி துறையில் ஒருகோடியே 20 லட்சம் வேலை வாய்ப்பு.
  • · ஒருகோடி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விலையில் இண்டர் நெட் இணைப்புடன் லேப் டாப்கள். 
  • · அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இண்டர்நெட் சேவையுடன் செயல் படுத்தப்படும். 

மேற்கண்டவை பில்கேட்ஸ்ஸின் அறிவிப்பல்ல. பாஜகவின் 30 பக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கை அறிக்கையில் உள்ளவை. இன்னும் இது போன்ற வாக்குறுதி பட்டியல் நீளுகின்றன. 

அத்வானி தேர்தலுக்கு புதியவர் அல்ல. அவருடைய பாஜகவும் புதிய கட் சியல்ல. அவருடைய கூட்டணியும் புதி யது அல்ல. இவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டு காலம் மத்திய அரசில் இருந்த வர்கள் என்பதை (மக்களை) மறந்து விட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். 

அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வசதி செய்வது இருக்கட்டும், இவர்கள் ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந் தது என்பதை அத்வானியின் சகாக்க ளுக்கும், நாட்டு மக்களுக்கும் மீண்டும் நினைவூட்டுவது நல்லது. 

  • · முரளி மனோகர் ஜோசியை அமைச்ச ராக கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 

கல்வித்துறையை காவி மயமாக்கும் திருப்பணியைத் தான் ஐந்தாண்டு காலம் செய்து வந்தது. 

  • · மூடநம்பிக்கைக்கு அடிகோலும் ஜோதிடத்தை பல்கலைக்கழக பாட மாக்க முயற்சித்தார்கள் என்பதை மறந்து விட முடியுமா? 

  • · தேசத்தின் வரலாற்றையே திருத்தி எழுதிய கூட்டம். 

இன்றைய அத்வானியின் ஐடி யுகப் பேச்சு, இளைஞர்களின் ஓட்டுக்களை கவரத்தானே தவிர வேறு எதுவும் இல்லை. காவி மயமாக்கும் அவர்களின் திருப்பணியே மீண்டும் தொடரும். 

ஒரு கோடி மாணவர்களுக்கு லேப் டாப். பார்த்தால் பிரமாதமாக தோன்றும். ஆனால் இவர்களின் விஷமத்தனமான கொள்கைகள் ஏழை மாணவர்களின் கல்வியை சூறையாடுவதே. 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசின் புள்ளி விபரப்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் பள்ளியை விட்டு வெளி யேறியவர்கள் எண்ணிக்கை 4.7 கோடி யிலிருந்து 5 கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டது. ஆனால் பாஜகவோ தங் களது ஆட்சிக் காலத்தில் 16ஆயிரம் கோடி செலவு செய்து 3 கோடி குழந்தை களை பள்ளியில் மீண்டும் சேர்க்க செய் தோம் என்றார்கள். அவர்கள் சொல்லும் படியே இருந்திருந்தாலும் மீதியுள்ள இரண்டு கோடி குழந்தைகளின் கதி.... 

இது ஒரு பக்கம். மறுபுறம் 16ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக 2004 தேர்தலின்போது இதுபோன்ற தம்பட்டம் அடித்தார். மத்திய அரசு நியமித்த தபஸ் மஜூம்தார் கமிட்டி அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியளிக் கும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பத்தாண்டுகளில் ஒரு லட்சத்து 36ஆயி ரத்து 922 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிட்டது. குறிப்பாக பாஜகவின் ஆட் சிக்காலத்தில் ரூ.47ஆயிரத்து 100 கோடி இதற்காக செலவிட்டிருக்க வேண்டும். அவர்கள் தெரிவித்த விளம்பரப்படி ஒதுக் கியது 16ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. மொத்த தொகையில் 34 சதவீதம் மட்டுமே. ஆனால் உண்மையில் எஸ்எஸ்ஏ திட் டத்திற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியது 5ஆயிரத்து 810 கோடி மட்டுமே. உண்மை இவ்வாறு இருக்க 2004 தேர்தலி லேயே நாட்டு மக்களை முட்டாளாக்க பொய் யான விபரங்களை அளித்தவர்கள் என் பதை மறந்து விட வேண்டாம். 

உயர் கல்விக்கும் வேட்டு 

குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை மறுத்தவர்கள், உயர் கல்வியை விட்டு வைத்திருப்பார்களா? 1998-99 முதல் 2003 -04 வரையிலான காலத்தில் மிகக் குறைவான தொகையினையே உயர் கல் விக்கு ஒதுக்கினார்கள். தனியார் கல்லூ ரிகள் புற்றீசல் போல பல்கி பெருகியதும் இவர்கள் ஆட்சியில் தான். தனியார் பொறியியற் கல்லுாரிகளின் எண்ணிக் கை 1998-99ல் 571 ஆக இருந்தது 2003-04ல் 1059 ஆக உயர்ந்தது. அசேமயம் அரசுபொறியியற் கல்லூரிகளின் எண் ணிக்கை 161லிருந்து 175ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. அதாவது அரசு கல்லூரி கள் 8.7 சதவீதமும், தனியார் கல்லுாரிகள் 85.5 சதவீதமாகவும் உயர்ந்தது. இது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை படிப்படி யாக வெட்ட வேண்டும் என்று கொள்கை வகுத்தவர்களும் அத்வானியின் கூட்டம் தான். 

ஆறு ஆண்டு காலம் கல்வித்துறை யை காவிமயமாக்கியும், தனியார்மயப்படுத் தியும், நிதிகளை வெட்டி ஏழைக்குழந் தைகளுக்கு கல்வியை மறுத்தவர்கள். இதற்காகவே இந்திய மக்கள் 2004ல் பாடம் புகட்டினார்கள். இறந்த காலத்தை மறந்து மீண்டும் அத்வானியை நாற் காலியில் அமர்த்துவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்கள்

கருத்துகள் இல்லை: