மாற்றத்திற்கு இதுவே சரியான நேரம்!

-பிரபாத் பட்நாயக்


(நவீன தாராளவாதம் தோற்றுப் போய் பின்வாங்கிச் செல்லும் இந்த நேரத்தில், அதை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு மாற்று வளர்ச்சிப் பாதையில் தேசம் செல்வதற்கு, 2009 நாடாளுமன்றத் தேர் தல் ஒரு சரியான வாய்ப்பாகும் என்று பிரபாத் பட்நாயக் கூறுகிறார். பிரண்ட் லைன் (10.4.2009) இதழில் பிரபாத் பட் நாயக் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம் இங்கு தரப்பட்டுள்ளது)

நவீன தாராளவாதம் இந்தியாவில் இன் னும் முழுமையாக வெற்றியடைந்து விட வில்லை. இன்றைக்கும், நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளும், கேந்திரமான பொதுத் துறைத் தொழில்களும் தனியார்மயமாக்கப்பட் டுவிடவில்லை. பென்சன் நிதி ஊகமூல தனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட வில்லை. இந்தியக் கரன்சியும், முழு மாற் றுக்கு உட்படுத்தப்படவில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு தவிர, இந்திய நிதித் துறைக்கு பெருமளவில் அந்நிய நிதிச் சொத் துக்கள் எதுவுமில்லை. பொதுத்துறையை ஒழிப்பதும், உலக நிதி அமைப்புடன் இறுக் கமாக இணைப்பதும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமல்லாமல், ஒன்றை யொன்று வலுப்படுத்துவதுமாகும். நவீன தாராளவாதத்தின் அடிப்படையான இந்த இரண்டு அம்சங்களும் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றன. நிதித்துறை தொழிற்சங்கங் களும், இடதுசாரிக் கட்சிகளும் இதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதன் காரணமாகத் தான் இது சாத்தியமானது. எனவே, நவீன தாராளவாதம் இதில் பாதி வெற்றியைத்தான் அடைய முடிந்தது. ஆனால், இந்திய சமூகத் திற்குள் நிலவும் இடைவெளியை மேலும் பெரிதாக்குவதற்கும், நவீன இந்திய சமூகத் தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்ப்பதற் கும் இந்தப் பாதி வெற்றியே போதுமானதாக இருக்கிறது.

சமூக ஒப்பந்தம்

சாதிகள், வர்க்கங்கள், பாலினம் மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, அதனால் பெருமளவு பிளவுபட்டிருந்த கோடிக்கணக்கான மக்கள் ஒரு நவீன இந்திய சமூகமாக மாறியது வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அற்புதமாகும். விடுதலைப் போராட்டக் காலத்தில், குறிப்பாக, 1931 கராச்சி காங்கிரஸ் தீர்மானம் அதற்கு வழி கோலியது. உள்ளடக்கத்தில் ஒரு “சமூக ஒப்பந்தமாக”க் கருதப்பட்ட அதன் அம்சங் கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாச னத்தில் இடம் பெற்றன. அனைவருக்கும் வாக்குரிமை, மதச்சார்பின்மை, சிவில் உரி மைகள், சாதி மற்றும் பாலின அடிப்படை யிலான ஒடுக்குமுறைகள் ஒழிப்பு என்ற சமத் துவ சமுதாயத்தை உருவாக்குவது என்பதே அந்த அம்சங்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? ஒருபுறம், உலகத்தின் மிகப்பெரும் செல்வந்தர்களாக இந்தியர்கள், மறுபுறம் ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகளின் தற்கொலை, அப்படியெனில், அந்த சமூக ஒப் பந்தத்தினை ஒழித்துக்கட்டும் வேலை தானே இது? மட்டுமல்லாமல், நவீன இந்திய தேசத்தின் அஸ்திவாரத்தையே அது அபா யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறதே?

விவசாய நெருக்கடி

விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியா ளர்களுக்கு ஆதரவான அரசின் தலையீட் டினை ஒழித்தது நவீன தாராளவாதமே. விவ சாய மானியங்களை வெட்டியதன் விளை வாக, வேளாண் இடுபொருள் செலவு அதிக ரித்தது. சமூக வங்கிக் கலாச்சாரம் மாறிப் போய், விவசாயிகளுக்கு நிறுவனக் கடன்கள் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் கொள்ளை வட்டிக்காரர்கள் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய விரிவாக்கப் பணி களிலிருந்து அரசு வெளியேறி விட்டதால், விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி நிற்கும் நிலை ஏற்பட்டது. வர்த்தகத் தாராள மயம், இறக்குமதிச் சந்தையில் செயற்கையாக குறைத்து விற்கப்பட்ட தானிய விலைகளு டன் போட்டி போட முடியாத துயரத்திற்கு இந்திய விவசாயிகளை உள்ளாக்கியது. உள்நாட்டுக் கொள்முதல் தொடர்ந்து குறைக்கப்பட்ட நிலையில், விவசாய விளை பொருள் ஆணை யம் மூலம் கிடைத்து வந்த குறைந்தபட்ச பாது காப்பும் கூட பறிபோனது. கிராமப்புறங்களில் அரசின் பொதுச் செலவினங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டதன் காரணமாக, கிராமப்புற மக் களின் வாங்கும் சக்தியும் பெருமளவு குறைந் தது. இதன் காரணமாக விவசாயத்துறையில் தேக்கமும், உணவு உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. மறுபுறத்தில், தனிநபர் சராசரி நுகர்வும் சரிந்தது. மலிவான இறக்குமதி ஒருபுறமும், உற்பத்திச் செலவு உயர்வு மறு புறமும் என்ற நிலையில் விவசாயிகள் வறு மைக்கு ஆளாயினர். குறைந்தபட்சக் கூலி யை விட அவர்களது வருமானம் குறைவாகிப் போனது. சிறு உற்பத்தியாளர்களின் நிலை யும் இதுவே. சீர்திருத்தங்கள் ஏற்கெனவே இவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கியிருக் கிறதென்றால், இன்றைய நெருக்கடி, நிலை மையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

அரசின் தலையீடு தேவை!

முதலாளித்துவத்தின் தாக்குதல்களிலி ருந்து விவசாயிகளையும், சிறு உற்பத்தி யாளர்களையும் காப்பாற்ற வேண்டுமென் றால், நம்போன்ற சமூகங்களில் அரசின் தலையீடு மிகவும் அவசியம். ஒருபுறம் சிறு உற்பத்தித் தொழில்கள் மறைந்து, மறுபுறம் முதலாளித்துவம் விரிவடையும் காலத்தில் இது போன்ற சிரமங்கள் தோன்றுகிறதோ என்று கூட சிலர் நினைக்கக் கூடும். எதார்த் தத்தில் என்ன நடக்கிறது என்றால், விவசாய மும், சிறு தொழில்களும் அழிவதால் அந்தத் துறையில் வேலைகள் பறிபோகின்றன; மறு புறம், வளர்ந்து வரும் முதலாளித்துவம் உரு வாக்கும் புதிய வேலைகள், பறிபோன வேலைகளுக்கு ஈடுகட்டும் இணையான எண்ணிக்கையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவத் துறை வளர்ச்சி அதிகமாக அதிகமாக, வேலை வாய்ப்பு குறைவதும், வறுமை பெருகுவதும் தவிர்க்க இயலாதது.

சிறு தொழில்கள் முதலாளித்துவ வளர்ச் சியினால் அழியாமல் இருக்க வேண்டுமென் றால், அரசு தலையிட வேண்டும். அது பெரிய தொழில்களிலும், சிறிய தொழில்களிலும் உழைக்கும் மக்களின் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக தலையிட வேண் டும். அதற்காக பெருந்தொகையினைச் செல வழிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் ஒரு நவீன தாராளவாத அரசு செய்யாது. அதற்கு நேரெதிராகவே செயல்படும். ஏனெ னில், இது அரசுத் தலையீட்டுக் கொள்கை, நவீன தாராளவாதக் கொள்கை என எதிரெதி ரான இரு கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷ யம் மட்டுமல்ல. அரசின் குணாம்சம் சம் பந்தப்பட்ட விஷயம். ஜவகர்லால் நேருவின் காலத்தில் இருந்ததும் முதலாளித்துவ சார்பு அரசுதான். முதலாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், அது வர்க்கங் களுக்கு இடையிலான பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காணும் அரசாக இருந்தது. எனவே, அது சிறு உற்பத்தியாளர்களை பாது காப்பதையும் தனது கடமையாக ஏற்றுக் கொண்டது. ஆனால், இன்றைய அரசு நவீன தாராளவாத அரசாக மாறிவிட்டதால் அதைச் செய்யாது. நிதி உலகமயமாக்கல் பின் னணியில், உலகம் முழுவதுமுள்ள முதலா ளித்துவ அரசுகள் மாறியுள்ளன. அதன் ஒரு பகுதிதான் இந்திய அரசின் குணமாற்றமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தீர்வு என்ன?

மக்களின், குறிப்பாக, விவசாயத்திலும், சிறுதொழில்களிலும் ஈடுபட்டுள்ள மக்களின் வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தான் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்கான திட்டங்களை முன்வைக் கும்போது கூட இன்றைய அரசு, அரசு - தனி யார் கூட்டுப் பங்கேற்பு எனக் கூறுகிறது. கண்டிப்பாக, இதில் தனியார் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யப் போவதில்லை. அப்படியானால், இந்தத் தீர்வில் கூட முத லாளிகள் பயனடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடி யும்? இந்த முன்மொழிவு இரண்டு வகையில் ஜனநாயக விரோதமானது. எடுத்துக்காட்டாக, கட்டமைப்பு என்பது ஒரு பொதுவான பெயர். அதில் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் சாலைகளும் அடங்கும்; ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும். தனியார் துறை எதற்கு முன்னுரிமை கொடுக்கும் எனத் தெரியாதா? இது ஒன்று. இரண்டாவதாக, இதில் ஈடுபடுத்தப்படும் பணம் ஏன் தனியார் கைகளுக்கு செல்ல வேண்டும்? அரசாங்கம் ஏன் நேரடியாக செலவழிக்கக் கூடாது? இவையே நாம் எழுப்பும் கேள்விகள்.

விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர் களுக்கும் பயனும் பாதுகாப்பும் அளிக்கும் வகையில், பெரியஅளவில் நிதி ஒதுக்கீடு செய்து மீட்டுயிர்ப்புத் திட்டங்களை உரு வாக்க வேண்டும். சுகாதாரம், கல்வி, தூய் மையான சுற்றுச் சூழல், குடிநீர், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட கிராமப்புற கட்ட மைப்பு, விவசாய மேம்பாடு, உணவுப் பாது காப்பு, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தி யாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு விலை ஆகிய அனைத்தையும் அத்த கைய திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும்போது, நமது நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறா மல் அதற்கு கடிவாளமிடுவதும் அவசியம்.

குழிதோண்டி புதைக்க வேண்டும்!

தாராளவாதத்திலிருந்து விடுபடுவது என்ற பெயரில், தற்காலிகமாக ஒரு மாற்றுப் பாதைக்குச் செல்வதில் பயனில்லை. விவ சாயிகளை மையப்படுத்திய விவசாயமும், அதன் அடிப்படையிலான வளர்ச்சியுமே தீர்வு எனும்போது அதற்கு இசைவான பொரு ளாதாரக்கொள்கைகளும் அவசியமாகிறது. அப்படியானால், நவீன தாராளவாதத்தை முற் றிலும் தோற்கடிக்க வேண்டும். சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினையும் முறி யடிக்க வேண்டும். அதற்கு எதிராக நாம் நடத் திய போராட்டத்தின் விளைவாக, நவீன தாரா ளவாதம் பாதி அளவில்தான் வெற்றி பெற முடிந்தது. உலக அளவில் அது தோல்வி யைத் தழுவி பின்வாங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அதை மேலும் பின் னுக்குத் தள்ளி, குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அரசியல் சாசனம் உள்ளடக்கி யிருக்கும் சமூக ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியான ஜனநாயகத் தேர்தல்கள் அதற்கு இன்று மிகப்பெரும் வாய்ப்பாக அமைந் துள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது அனைவரின் கடமையுமாகும்.

(கட்டுரை சுருக்கம் : இ.எம்.ஜோசப்)

இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கை - தமிழகத்தில் அறிமுகம்

(News: Special reporter - photos by Gavaskar) 



சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டு பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இப்படி குறிப்பிட்டார்.

" ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி அரசு க‌‌‌ல்‌வி, வேலைவா‌‌ய்‌ப்பு, பெ‌ண்களு‌க்கான இடஒது‌க்‌கீடு போ‌ன்ற அனை‌த்து துறைக‌ளிலு‌ம் கொடு‌த்த வா‌க்குறு‌தியை ‌நிறைவே‌ற்ற‌வி‌ல்லை. எனவேதா‌ன் நா‌‌ங்க‌ள் 9 க‌ட்‌சிக‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து 3வது அ‌ணியை உருவா‌க்‌கியு‌ள்ளோ‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் அ.‌தி.மு.க, பா.ம.க போ‌ன்ற க‌ட்‌சிக‌ள் எ‌ங்களு‌ட‌ன் இணை‌ந்து‌‌ள்ளன. இது எ‌ங்க‌ள் ந‌ம்‌பி‌க்கையை மேலு‌ம் அ‌திக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் இதுவரை கா‌‌‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க ஆ‌கிய இரு க‌ட்‌சிக‌ள் ம‌ட்டுமே இரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது வலுவான 3வது அ‌ணி உருவ‌ா‌கியு‌ள்ளது உ‌த்தர‌‌பிரதேச‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வை தோ‌ற்கடி‌க்க பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி ‌தீ‌விர நடவடி‌க்கை எடு‌த்து வரு‌கிறா‌ர்.

தே‌‌சிய அள‌விலு‌ம் அ‌ந்த க‌‌ட்‌சிகளை தோ‌ற்கடி‌‌ப்பதி‌ல் மாயாவ‌தி மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்றுவா‌ர். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌ல் த‌‌ற்போது 9 க‌ட்‌சிக‌‌ள் உ‌ள்ளன. இது 15 க‌ட்‌சிக‌ள் வரை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள ‌க‌‌ட்‌சி‌க‌ள் வெ‌‌வ்வேறான கொ‌ள்கைக‌ள் கொ‌‌ண்டிரு‌ந்த போ‌திலு‌ம் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வு‌க்கு மா‌ற்றாக ஓ‌ர் மா‌ற்று அ‌ணி அமைய வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ந‌ா‌ங்க‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து‌ள்ளோ‌ம்.

இந்த அணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றி படைக்கும். அவரின் உறுதியைக் கண்டு அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் ஆச்சரியத்தில் அதிசயித்தனர்.

இன்றைய நிலையில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிருக்கு இடதுசாரிகளுக்கு உற்சாகம் கூடியுள்ளது. ஊடகங்கள் எல்லாம் "தேர்தல் முடிவுகள் குழப்பமானதாக இருக்கும்" என்று கூறிவருகின்றன. ஆனால் நடப்பது என்ன? இடதுசாரிகள் சொல்லுகிற மாற்று அணியின் பக்கம் மக்கள் உறுதியாக நிற்ப்பார்கள் என்பதைத்தான்.

வேலை இழந்து, சொந்த வாழ்க்கைக்கான அச்சாணியை தொலைத்து நிற்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்பவர்கள் இடதுசாரிகள். கடந்து நான்கரை ஆண்டுகளில் அவர்கள் அரசிற்கு ஆதரவளித்த போது, மக்களுக்கான கொள்கைகளை வலியுறுத்தினார்கள், அவர்களால் நிறைய சாதிக்க முடிந்திருக்கிறது. இப்போதைய தேர்தல் அறிக்கையை படித்தால் இது புலப்படுகிறது.

இதுவரை நாடாளுமன்றத்தில் "வலியுறுத்துவோம்", "போராடுவோம்" என்று அறிக்கை வெளியிட்டு வந்த இடதுசாரிகள், நாங்கள் கோரிக்கைகளை "நிறைவேற்றுவோம்" என்று இப்போதைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆம், அவர்கள் வரப்போகிற ஆட்சியில் பங்கேற்ப்பார்கள் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.

ஒருவேளை அப்படி முக்கிய மாற்றம் நடைபெற்றால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எந்த விசயங்களை அவர்கள் மையப்படுத்துவார்கள்? என்பதற்கான பதில்கள் இந்த அறிக்கையில் அடங்கியிருக்கிறது. அதுபோக ஒவ்வொரு துறையினையும் மையப்படுத்தியும் தனித்தனி கையடக்க பிரசுரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அவை நமது தளத்திலேயே ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. இந்த அறிக்கை மற்றும் பிரசுரங்களை படிக்கும் எவரும் இடதுசாரிகளின் அகண்ட பார்வையைக் கண்டு, அவர்களின் தீர்க்கமான அணுகுமுறை குறித்து அதிசயிக்காமல் இருக்க முடியாது.

இனி வரப்போகிற தேர்தலில் வெற்றி நிச்சயம் . . ஆனால் முதலாளித்துவ ஊடகங்களின் பொய் பித்தலாட்டங்களை மீறி, மக்கள் நல கொள்கைகளை மக்களின் மத்தியில் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆம் இவர்களின் கொள்கைகள் மக்களை அடைந்து, அவற்றை ஓட்டாக மாற்றவேண்டிய கடமை நம் ஒவொருவரின் கைகளிலும் இருக்கிறது.






அறிக்கை விரைவில் நமது தளத்தில் வெளியிடப்படும் - காத்திருங்கள் ... !!

அத்வானியின் ஐ.டி. வாக்குறுதியும் என்.டி.ஏ-வின் கொள்கையும்

-எஸ்.ஏ. மாணிக்கம்

  • · கிராமப்புறங்களில் ஐடி துறையில் ஒருகோடியே 20 லட்சம் வேலை வாய்ப்பு.
  • · ஒருகோடி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விலையில் இண்டர் நெட் இணைப்புடன் லேப் டாப்கள். 
  • · அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இண்டர்நெட் சேவையுடன் செயல் படுத்தப்படும். 

மேற்கண்டவை பில்கேட்ஸ்ஸின் அறிவிப்பல்ல. பாஜகவின் 30 பக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கை அறிக்கையில் உள்ளவை. இன்னும் இது போன்ற வாக்குறுதி பட்டியல் நீளுகின்றன. 

அத்வானி தேர்தலுக்கு புதியவர் அல்ல. அவருடைய பாஜகவும் புதிய கட் சியல்ல. அவருடைய கூட்டணியும் புதி யது அல்ல. இவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டு காலம் மத்திய அரசில் இருந்த வர்கள் என்பதை (மக்களை) மறந்து விட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். 

அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வசதி செய்வது இருக்கட்டும், இவர்கள் ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந் தது என்பதை அத்வானியின் சகாக்க ளுக்கும், நாட்டு மக்களுக்கும் மீண்டும் நினைவூட்டுவது நல்லது. 

  • · முரளி மனோகர் ஜோசியை அமைச்ச ராக கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 

கல்வித்துறையை காவி மயமாக்கும் திருப்பணியைத் தான் ஐந்தாண்டு காலம் செய்து வந்தது. 

  • · மூடநம்பிக்கைக்கு அடிகோலும் ஜோதிடத்தை பல்கலைக்கழக பாட மாக்க முயற்சித்தார்கள் என்பதை மறந்து விட முடியுமா? 

  • · தேசத்தின் வரலாற்றையே திருத்தி எழுதிய கூட்டம். 

இன்றைய அத்வானியின் ஐடி யுகப் பேச்சு, இளைஞர்களின் ஓட்டுக்களை கவரத்தானே தவிர வேறு எதுவும் இல்லை. காவி மயமாக்கும் அவர்களின் திருப்பணியே மீண்டும் தொடரும். 

ஒரு கோடி மாணவர்களுக்கு லேப் டாப். பார்த்தால் பிரமாதமாக தோன்றும். ஆனால் இவர்களின் விஷமத்தனமான கொள்கைகள் ஏழை மாணவர்களின் கல்வியை சூறையாடுவதே. 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசின் புள்ளி விபரப்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் பள்ளியை விட்டு வெளி யேறியவர்கள் எண்ணிக்கை 4.7 கோடி யிலிருந்து 5 கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டது. ஆனால் பாஜகவோ தங் களது ஆட்சிக் காலத்தில் 16ஆயிரம் கோடி செலவு செய்து 3 கோடி குழந்தை களை பள்ளியில் மீண்டும் சேர்க்க செய் தோம் என்றார்கள். அவர்கள் சொல்லும் படியே இருந்திருந்தாலும் மீதியுள்ள இரண்டு கோடி குழந்தைகளின் கதி.... 

இது ஒரு பக்கம். மறுபுறம் 16ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக 2004 தேர்தலின்போது இதுபோன்ற தம்பட்டம் அடித்தார். மத்திய அரசு நியமித்த தபஸ் மஜூம்தார் கமிட்டி அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியளிக் கும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பத்தாண்டுகளில் ஒரு லட்சத்து 36ஆயி ரத்து 922 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிட்டது. குறிப்பாக பாஜகவின் ஆட் சிக்காலத்தில் ரூ.47ஆயிரத்து 100 கோடி இதற்காக செலவிட்டிருக்க வேண்டும். அவர்கள் தெரிவித்த விளம்பரப்படி ஒதுக் கியது 16ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. மொத்த தொகையில் 34 சதவீதம் மட்டுமே. ஆனால் உண்மையில் எஸ்எஸ்ஏ திட் டத்திற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியது 5ஆயிரத்து 810 கோடி மட்டுமே. உண்மை இவ்வாறு இருக்க 2004 தேர்தலி லேயே நாட்டு மக்களை முட்டாளாக்க பொய் யான விபரங்களை அளித்தவர்கள் என் பதை மறந்து விட வேண்டாம். 

உயர் கல்விக்கும் வேட்டு 

குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை மறுத்தவர்கள், உயர் கல்வியை விட்டு வைத்திருப்பார்களா? 1998-99 முதல் 2003 -04 வரையிலான காலத்தில் மிகக் குறைவான தொகையினையே உயர் கல் விக்கு ஒதுக்கினார்கள். தனியார் கல்லூ ரிகள் புற்றீசல் போல பல்கி பெருகியதும் இவர்கள் ஆட்சியில் தான். தனியார் பொறியியற் கல்லுாரிகளின் எண்ணிக் கை 1998-99ல் 571 ஆக இருந்தது 2003-04ல் 1059 ஆக உயர்ந்தது. அசேமயம் அரசுபொறியியற் கல்லூரிகளின் எண் ணிக்கை 161லிருந்து 175ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. அதாவது அரசு கல்லூரி கள் 8.7 சதவீதமும், தனியார் கல்லுாரிகள் 85.5 சதவீதமாகவும் உயர்ந்தது. இது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை படிப்படி யாக வெட்ட வேண்டும் என்று கொள்கை வகுத்தவர்களும் அத்வானியின் கூட்டம் தான். 

ஆறு ஆண்டு காலம் கல்வித்துறை யை காவிமயமாக்கியும், தனியார்மயப்படுத் தியும், நிதிகளை வெட்டி ஏழைக்குழந் தைகளுக்கு கல்வியை மறுத்தவர்கள். இதற்காகவே இந்திய மக்கள் 2004ல் பாடம் புகட்டினார்கள். இறந்த காலத்தை மறந்து மீண்டும் அத்வானியை நாற் காலியில் அமர்த்துவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்கள்

பாஜக-காங். சுருதி இறக்கம்

கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவத்தால் மாற்றத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியும், அத்வானியைப் பிர தமராக ஏற்றுக்கொண்டால் யாருடனும் சேர்ந்து கொள்வோம் என்று பாஜகவும் கூறி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று இல்லை என்ற இவர்கள், தங்கள் சுருதியை மாற்றி யுள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று கொண்டு விட்டதால்தான் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரசுக்கு, திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் தான் துணையாக உள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு பெரிய மாநிலங்களில் கூட் டாளிகளாக இருந்த சமாஜ்வாதி மற்றும் ராஷ் டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் காங் கிரஸ் தனிமரமாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத் தவரை, பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதால், தென் இந்தியா விலும் காங்கிரசுக்கு இழப்புதான் மிஞ்சும்.

பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது 26 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட் டணி இருந்தது. தற்போது ஆறு கட்சிகள்தான் பாஜகவுடன் இணைந்து நிற்கின்றன. அதிலும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் முரண்பட்டு நிற்கிறது. அண்மையில் வருண் காந்தியின் வன்முறையைத் தூண்டும் பேச் சுக்கு நிதிஷ் குமார் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பெரிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தை நீட்டிக்கொண்டே செல்ல விரும்புகின்றன. அத்வானியோ ஒருபடி மேலே போய் மன்மோகன்சிங்குடன் நேரடியாக விவா திக்கத் தயார் என்று அறைகூவல் விடுக்கிறார். தங்களின் ஆட்சியின் போது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு மதிப்பளிக்காத இரு கட்சிகளுமே இவ்வாறு பேசிக்கொள்வது ஆச்சரியமளிக்க வில்லை. ஆனாலும் இருவரும் பேசிக்கொள் வோம் என்ற அத்வானியின் கூற்று மாற்று அணியின் மீதான அச்சத்தையே காட்டுகிறது.

இந்த அணிகள் தகர்ந்துவரும் வேளையில், அதற்கு மாறாக, மூன்றாவது அணி என்று பொது வாக அழைக்கப்படும் மாற்று அணியின் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத் தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த அணி யைச் சேர்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாவதாகத் தான் வரும் என்றெல்லாம் கிண்டலாகப் பேசிய வர்கள், இந்த அணி வெற்றி பெற்றால் யாரைப் பிர தமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற விவாதத்திற்குத் தாவியுள்ளனர். மாற்று அணி வெற்றிபெறப்போவ தை இத்தகைய விவாதங்கள் உறுதி செய்கின்றன.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, உ.பி., கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இடங்களையும், மற்ற மாநிலங் களில் கணிசமான இடங்களையும் கைப்பற்றப் போகும் மாற்று அணியை மூன்றாவது அணி என்று அழைப்பதை விட முதலாவது அணி என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக் கும். பெரிய மாநிலங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை கரணங்கள் போட்டாலும் பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதே தற்போதைய நிலை மையாகும்

காங். தேர்தல் அறிக்கை-காற்றில் கரையும் கற்பூரம்

-மதுக்கூர் இராமலிங்கம்

“துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந் தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே” 

என்பது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தங்கப்பதுமை படத்திற்காக எழுதிய பாடலில் வரும் வரிகளாகும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப் பதை பார்க்கும்போது மக்கள் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் நடப்பது அதிபர் ஆட்சி முறை அல்ல. எனவே தனிஒரு மனிதரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தவேண்டிய அவசியமும் இல்லை. பிரதமர் யார் என் பது தேர்தல் முடிவுக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் ஓராண்டுக்கு முன்னாலேயே அத்வானி தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்தது. அத்வானியும் அன்று துவங்கி பிரதமர் போலவே தனக்குத் தானே பேசத்துவங்கிவிட்டார். ஆனால் அந்த கட்சிக்குள்ளேயே பைரோன் சிங் ஷெகாவத், நரேந்திர மோடி என அத்வா னிக்கு ஆப்பு வைக்கும்வகையில் உள் குத்து குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை பின்பற்றி, இதுவரை கிராமப் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் கூட நேரடி யாக போட்டியிடாத மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளர் என்று பட்டையைக் கட்டி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. 

அதிலும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங்கால் மட்டுமே ஸ்திரத்தன்மையை தரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அடிமை சாசனத்தில் கையெழுத்திட ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்துவந்த ஆதர வை விலக்கிக்கொள்வதாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் கண்டு நாடே தலைகுனிந்தது. மக்கள வையின் மைய மண்டபத்தில் கொட்டப் பட்ட கரன்சி நோட்டுகளில் அச்சிடப்பட் டிருந்த காந்தி படம்கூட கண்ணீர் சிந்தியது. இத்தகைய ஸ்திரத்தன்மையை தந்தவர் தான் மன்மோகன் சிங். இதுதான் காங்கி ரஸ் கட்சி தரப்போகும் ஸ்திரத்தன்மை என்றால் விழிப்போடு இருக்க வேண்டி யது நாட்டு மக்கள்தான்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக் கையில் வழக்கம் போலவே ஏராளமான வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தல் துவங்கி 2009 தேர்தல்வரை காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை யும், தேர்தல் அறிக்கைகளையும் ஒருசேர அடுக்கி வைத்தால் இமயமலையைவிட உயரமான பெரும் பொய்மலையாக அது உயர்ந்து நிற்கும். 

வறுமையே வெளியேறு என்றார்கள், எருமைமாடு கூட அதைக் கண்டுகொள் ளவில்லை. வேலையின்மையே வெளியே போ என்றார்கள், இதன் பொருள் வேலை யில் உள்ளவர்களை வெளியே அனுப்பு வதுதான் என்பது பிறகுதான் புரிந்தது. 

கடந்த 2004 மக்களவை தேர்த லின்போதும் காங்கிரஸ் கட்சி வண்டி வண்டியாக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித்தந்தது. அந்த வாக்குறுதிகளில் ஒன்று- குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என்பது. இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குடும்பங்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்கத் தயாரா? மன்மோகன் சிங் குடும்பத்தில் ஒருவருக்கு பிரதமர் வேலை கிடைத்தது, ஒருசில குடும்பங்களுக்கு மந்திரி வேலை கிடைத்தது என்பது மட்டும்தான் உண் மை. மறுபுறத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியை தாராளமய பாதையிலேயே சென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு சமாளிக்க முயன்றதால் கோடிக் கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வீதிக்கு வந்துள்ளன என்பதுதான் உறுத் தும் உண்மை.

ஆண்டுக்கு ஒருகோடி புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் காங் கிரஸ் கட்சி 2004 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. கடந்த ஐந்தாண்டு களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படவில்லை என்பது மட்டுமின்றி இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம் பாட்டுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறி யது. ஆனால் மூன்று வயதுக்கும் கீழான குழந்தைகளில் 40 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் குறைவான எடையை கொண்டுள்ளனர் என்பது புள்ளி விவரம் கூறும் உண்மை. பாதுகாப் பான குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை என்று கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூறி யது ஆனால் 2 லட்சத்து 19 ஆயிரம் குடும் பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்ப தில்லை என்பதுதான் உண்மை.

காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர் தல் அறிக்கையில் கூறியுள்ள பல வாக் குறுதிகள் கடந்த தேர்தல் அறிக்கையி லிருந்து அப்படியே எடுத்தாளப்பட் டுள்ளன. அன்றைக்கு ஒரு பேச்சு இன் றைக்கு ஒரு பேச்சு என்பது எங்கள் அகரா தியில் இல்லை என்று வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் பீற்றிக்கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்க ளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சத வீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தேர் தல் அறிக்கையில் கூறியபடி நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அந்த கட்சி தலைமையிலான அரசு, எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாட்டில் பெண்களுக்கு 33 சத வீத இடஒதுக்கீடு வழங்க வக்கற்றவர்கள் தற்போது, வீட்டில் உள்ள பெண்களுக்கு அரசு வேலையில் 33 சதவீதம் வழங்கு வோம் என்று கொஞ்சம் கூட கூச்சமில் லாமல் வாக்குறுதி தருகின்றனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்ற கிராமத்து பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

நாட்டு நலனுக்கேற்ற சுயேட்சையான வெளியுறவுக்கொள்கை தொடரும் என் றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந் தியாவின் சுயேட்சையான அயல்துறை கொள்கையை காலில் போட்டு மிதித்து அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டா ளியாக நமது இந்திய திருநாட்டை மாற் றும் வகையில் அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா வின் கேந்திர ராணுவ கூட்டாளி நாடு களில் ஒன்றாக இந்தியா அவமானகர மான முறையில் மாற்றப்பட்டது. இஸ் ரேல், பாலஸ்தீனத்தின் மீது கொடூரத் தாக் குதல் தொடுத்தபோதும் மத்திய அரசு மவு னம் சாதித்தது. அமெரிக்காவுக்கு கூஜா தூக்க ஈரானுக்கு எதிராக ஐ.நா. சபையில் செயல்பட்டதோடு ஈரானிலிருந்து பைப் லைன் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தையும் கிடப்பில் போட்டது. 

இவர்களது ஆட்சியில்தான் உலகிற்கு உணவு படைக்கும் விவசாயிகள் வாழ வழியின்றி பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போதைய தேர்தல் அறிக் கை, விவசாயம் என்றாலே லாபம் இல் லாத தொழில் என்ற நிலை மாற்றப்பட்டு அனைவரும் விரும்பி ஏற்கும் தொழிலாக விவசாயம் மாற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளது. விவசாயிகளின் வீட்டிற்கே சென்று அரசு சார்பில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் எனப் படும் முன்பேர வர்த்தக மோசடி முறை யை கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை தரிசாக்கியது இவர்கள் தான். இடதுசாரி கட்சிகளும் நாடாளு மன்ற நிலைக்குழுவும் கடுமையாக வற் புறுத்தியபோதும் அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விற்பனையிலும் முன்பேர வர்த்தகமுறையை ரத்து செய்ய மறுத்தவர்கள்தான் இவர்கள். இன் றைக்கு வீட்டுக்கே வந்து விளைபொரு ளை வாங்கிக்கொள்கிறோம் என்று சின்ன குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் காட்டுவது போல ஏமாற்ற முயல்கிறார்கள். வேண்டு மானால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து பிணத்தை எடுத்து அடக்கம் செய்கிறோம் என்று இவர்கள் வாக்குறுதி தரலாம்.

மத்திய அரசின் உணவுக்கிடங்குகளில் தேங்கி வீணாகும் உணவு தானியங்களை மாநிலங்களில் பொது விநியோக முறைக்கு தர மறுத்த காங்கிரஸ் அரசு, உணவு பாது காப்பு குறித்து பேசுவது வெட்கக்கேடா னது. மின்வாரியங்களை மூன்றாக பிரித்து தனியாருக்கு தர ஆணைமேல் ஆணை யாக வெளியிட்டு மாநிலங்களை மிரட்டும் இவர்கள், மின்கட்டணத்தை குறைப்பார் களாம். கேட்பவன் கேணையாக இருந் தால் கேழ்வரகில் நெய் வடியுமாம். இவர் கள் கூறுவதையெல்லாம் இந்திய மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நினைப்பு.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்க கூட்டணி ஆட்சிக்கா லத்தில் உருப்படியான ஒருசில வேலை கள் நடந்தன என்றால் அதற்கெல்லாம் முழுமுதல் காரணம் இடதுசாரி கட்சி களின் நிர்பந்தமே. மறுபுறத்தில் இந்திய மக்களுக்கு எதிரான அனைத்து நட வடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்றாக வேண்டும். 

பெரும்பாலான மாநிலங்களில் காங் கிரசை அதன் கூட்டாளிகளே கழற்றி விட்ட நிலையில் தேர்தல் அறிக்கை எனும் காகிதப்படகில் ஏறி தப்பித்துவிட லாம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. மக்களின் கோபாவேச அலையில் இந்த படகு கவிழ்வது நிச்சயம். அதைப்பிடித் துக் கொண்டு தொங்குபவர்களும் பரிதா பமான நிலையையே அடைவார்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு றுப்பினர் தோழர் சீதாராம் எச்சூரி rediff இணைய இதழுக்கு aலித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்.

மொழியாக்கம்: இரா சிந்தன்.

1 வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மையமான பிரச்சனைகளாக எவை இருக்கும்?

இந்தியாவின் பொருளாதார நிலை. எப்போதும் அதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனாலும் உலக நெருக்கடி அதனை எதிர்பார்த்ததற்கு மேலாக அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனையாக மாற்றி விட்டது.

2 கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில நிதி நிலை அறிக்கைகளில் "ஊக்க தொகைகள்" (stimulus packages) அறிவிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் இடதுசாரிகள் சொல்ல வருவது என்ன?

நாங்கள் சொல்ல வருவது: அரசு தனது உள்கட்டமைப்பில் அதிக நிதியை முதலீடு செய்ய வலியுறுத்துவதே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி. அரசு முதலீட்டில் ஒரு பெரிய உயர்வு இருக்க வேண்டும். இப்போது சில முன்னேற்றங்கள் உள்ளன ஆனால் அவை போதுமானதல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ள சுமார் 40,000 கோடி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது தேவைக்கும் மிகக் குறைவான ஒதுக்கீடு. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ள தொகை அந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானது. அதாவட்டிது, நாங்கள் இதை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம், -- இதுதான் நாங்கள் சொல்லுகிற செய்தி. பெரிய நிறுவனங்களுக்கான காப்புத் தொகை (bail-out) ஒரு எல்லை வரைக்கும் ஒரு வேலை தேவையாக இருக்கலாம். ஆனால் அதில் பணம் மற்றும் பொருளாதாரம் பற்றிய கொள்கைகளின் நியாமான கலப்பு தேவைப்படுகிறது. பொது செலவுகளை அதிகரிப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதிலும் மற்றும் அதற்காக உள்நாட்டு தேவையை அதிகரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.


3 மற்ற வளரும் நாடுகள் எல்லாம் வீழ்ச்சியைப் பதிவு செய்யும்போது இந்தியா எழு சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக அரசு சொல்லுகிறதே!

இந்த ஏழு சதவீத வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றே நினைக்கிறேன். (வருங்காலத்தில்) இந்தியா 5.5 சதவீதம் வளர்சியையாவது பராமரிக்க முயல வேண்டும். ஆனால் நம்மால் ஏழு சதவீத வளர்ச்சியை எப்படி எட்ட முடிந்தது?. அதற்கு அவர்கள் தங்களின் எதிரிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இடதுசாரிகள் நான்கு முக்கிய விசயங்களை துவக்கத்திலேயே தடுத்ததன் மூலம் இந்த நாட்டை முழுமையான அழிவிலிருந்து காத்திருக்கிறோம்.
முதலாவது, முழுமையான நானைய மாற்றிற்கு ரூபாயை உட்படுத்தியதில் இருந்தும். இரண்டாவது, இந்திய தனியார் வங்கிகளில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவதையும், பங்குகளின் அளவிற்கு ஏற்றார்போல வெளிநாட்டு இயக்குனர்களை அனுமதிக்க ஏற்றுக்கொள்ளும் வகையிலான அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் தடுத்தோம். ஒருவேளை அது நடந்திருந்தால் பல அந்நிய நாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த போது, அவைகளோடு சேர்ந்து பெரும்பாலான இந்திய வங்கிகளும் வீதிக்கு வந்திருக்கும். மூன்றாவது, தொழிலாளிகளின் பென்சன் தொகையை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்தோம். மற்றும் இறுதியாக இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த முயற்சிகள் இந்திய பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் பெருமை இந்திரா காந்தியையே சாரும் என்று அவர்கள் (காங்கிரஸ்) கூறுகிறார்கள். ஆனால், வங்கிகள் மற்றும் நிலக்கரி தாதுக்கள் தேசிய மயமாக்கப்பட்டதும், முடி மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதும் 1969 இல் நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்ச்சொன்ன எல்லாமும் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரி யை ஆதரிப்பதற்காக இடதுசாரிகள் வைத்த நிபந்தனைகள். காங்கிரசில் இண்டிகேட்-சிண்டிகேட் யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுது இந்திரா காந்தி யின் அரசு சிறுபான்மை அரசாக இருந்தது, அப்போது இந்திரா அரசு நிலைத்திருக்க அவருக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போதுதான் மேற்ச்சொன்னவைகள் எல்லாம் நடைபெற்றன. எனவே வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டது எனில் அதுவும் இடதுசாரிகளால் நடந்தது.


4 கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே முக்கிய பாலமாக இருந்திருக்கிறீர்கள். காங்கிரசை கையாளுவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? தேர்தலுக்கு பிறகு ஒரு மீண்டும் ஒரு கூட்டணிக்கான தேவை ஏற்பட்டால் உங்களின் விருப்பம் என்னவாக இருக்கும்??

உங்கள கேள்வியின் இரண்டாம் பாகத்தைப் பொறுத்தமட்டில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். எனது விருப்பம் இந்த போரில் காங்கிரஸ் அல்லாத, வகுப்பு வாதிகள் அல்லாத மாற்றினை வெற்றிகொள்வதே. எனவே போருக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றிய கேள்விக்கே இப்போது இடமில்லை.

முதல் கேள்வியை பொறுத்த அளவில், ஆம், நாங்கள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசோடு இணைந்து செயல்பட்டோம். ஆனால் இந்த காலத்தில் முழுவதும் காங்கிரஸ் தனது புதிய-பொருளாதார சீர்திருத்தத்தை தொடர்வதற்கே விரும்பியது. நாங்கள் சில விசயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் போது, அவர்கள் தங்களின் திட்டத்தை பின் வாசல் வழியாக நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்கள்.

உதாரணத்திற்கு சிறு வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு. இதனை நாம் ஒரு முறை அனுமதித்தால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்கள் வேளையி இழப்பார்கள். எனவே வேலை வாய்ப்பை குறைக்கக்கூடிய அந்நிய நேரடி முதலீட்டை சிறு வணிகத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம். ஆனால் அரசு அதனை பின் வாசல் வழியாக் அனுமதிக்க முயற்சித்தது. முதலில் மொத்த வியாபாரத்தில் மட்டும் அனுமதிப்பதாக கூறினார்கள், பிறகு ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி என்றார்கள். பின்பு விளையாட்டு பொருட்கள விற்க அனுமதி தருவதாகக் கூறினார்கள். இவ்வாறு நேர்மையற்ற வழியில் அவர்கள் அந்நிய முதலீட்டை அனுமதித்தார்கள்.