கம்யூனிஸ்ட் புரட்சியும் - நாடாளுமன்றமும்

"தொழிலாளி வர்க்கத்திற்கும் - முதலாளி வகத்திர்க்கும் இடையில் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து நடை பெற்று வரும் போராட்டம் தான் மார்க்சிசத்தின் உயிர் "

இந்தப் போராட்டங்கள் மறை முகமாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும், மோதலாகவும் நடைபெறும்.

சம்பள உயர்வு, விலை ஏற்றம், அரசு அதிகாரிகள் - கம்பனி முதலாளிகளின் எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம்; ஜனநாயக உரிமைகளை நசுக்குகிற அரசுக்கு எதிரான ஜனநாயக போராட்டம், தொடர்ந்த தேர்தல் போராட்டங்கள் - கலாம் , காலம் - சூழ்நிலை மாறுதல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு தேர்தல் களையும் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் புறக்கணிக்கவேண்டிய இடத்தில் புறக்கணிப்பது. சூழ்நிலை பக்குவமடைகிறபோது மொத்த முதலாளித்துவ அமைப்பினை எதிர்க்கிற புரட்சிப் போராட்டம் - இவைகளை உள்ளடக்கியதுதான் பொதுவுடைமை வாதிகளின் யுத்த தந்திரங்கள்.

எனவே தந்திரமும் போர்முரையும் எப்போதும் ஒரே மாதிரியானது அல்ல.

தொழிலாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடுகளின் நாடாளுமன்ற அரசியலில் செயல்படுவது. "தன்னுடைய வர்க்க இலட்சியத்தையும் திட்டத்தையும் விளக்குவதற்க்கே". "ஆளும் வர்கத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் காட்சிகளுக்கு கிடைக்கும் உரிமைகள் தொழிலாளி வர்க்கத்திற்கு(அவர்களை பிரடிநிதித் துவப்படுத்தும் பொதுவுடைமை வாதிகளுக்கு) கிடைக்காது" என்பதை புரிய வைக்க இந்த அனுபவம் பயன் படும். இன்று இடதுசாரிகள் ஆட்சிபுரியும் மூன்று மாநிலங்களின் மக்களிடம் நாங்கள் அதையே செய்து வருகிறோம் - முதலாளித்துவத்திற்கு உ பட்டு செய்த சில சீர்திருத்தங்கள் தொழிலாளி வர்க்க மக்களை பொதுவுடைமையின் பக்கம் தொழிலாளி வர்க்கத்தை ஈர்க்க உபயோகப் படுத்தப் படுகிறது. அங்கெல்லாம் இடதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பதே தவறான வாதம் அதிகார மையமான எல்லா அடக்குமுறை கருவிகளும் நடுவண் அரசிடம் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

நாடாளுமன்ற அமைப்ப்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ஜெர்மாநியர்களிடம் லெனின் வைத்த வாதம் இன்னும் உபயோகமானது

"ஆளைத் தொழிலாளர்களில் ஓர் சிறுபான்மையோர் முதலாளித்துவ நிலபிரத்துவ வாதிகளை பின்பர்றுவார்கலானால் அதன் பொருள் இன்னும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு காலாவதியாக வில்லை என்பது தான் தன்னுடைய வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினருக்கு போதிக்கவும், அறியாமையிலும், வறுமையிலும் ஆழ்ந்துள்ள மக்களை தட்டி எழுப்பவும் - தொழிலாளி வர்க்கம் நாடாளுமன்ற அமைப்புகளில் போராட வேண்டும். முதலாளித்துவத்தின் அமைப்புகளை உடைக்கும் வலிமை தங்களுக்கு வராதவரை நீங்கள் இப்படித்தான் செயல் படவேண்டும். ஏன்? முதலாளித்துவ அமைப்பின் மீது மயக்கப் பட்ட - கிராம நிலப் பிரபுத்துவ சூழலில் கரட்தட்டி போன தொழிலாளி மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதாலே தான். இத்தனை செய்யா விட்டால் நீங்கள் வெறும் வாயாடிகலாகவே இருப்பீர்கள். புரட்சிகரப் பாதையில் அதிகாரத்தை கைப் பற்ற நினைக்கும் தொழிலாளி வர்க்கம் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் அதன் பின்னணியில் நிற்க வேண்டிய தொழிலாளிகளுக்கு உயர்ந்த வர்க்க உணர்வு வேண்டும். அதனை ஏற்படுத்த நாடாளுமன்ற நடைமுறை அனுபவத்தை நாம் பெறவேண்டும்"

கருத்துகள் இல்லை: