சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம்- மக்களின் வாழ்வாதரம் கருத்தில் கொள்ளுமா? தினமணி

(சில தினங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் அராபத் ஏரி பகுதியில், பயன்படாத நிலத்தில் இருந்த குடியிருப்புகளை வருவாய்துறை அகற்றியது. இதனை அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. இந்த பகுதியை தொடர்ந்து வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை முயற்சித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாட்டால், நடத்திய போராட்டத்தினால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினமணியில் வந்துள்ள செய்திக்கு விளக்கம் என்ற வகையில்.............)

மே-21 நாளிதழில் ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?’ என்று தலைப்பிட்ட செய்தி ஒன்றை தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது.“நீர் நிலை புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின்னணி கொண்ட ரியல் எகுடேட் அதிபர்களே, கட்சித் தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக...” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த ரியல் எகுடேட் அதிபர் எந்த தலைவரை அழைத்து வந்தார் என்பதை கூற வேண்டியதுதானே? அந்த இடங்களை வளைத்து, விற்ற ரியல் எகுடேட் அதிபர்கள், அதற்கு துணைபோன வருவாய், பத்திரப்பதிவு, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினமணி வலியுறுத்த மறுப்பது ஏன்?

“மக்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணியை பாதிப்பதாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்” என்று கூறும் தினமணி, இவ்வளவு பாதிப்புக்கும் காரணம் இந்த வருவாய் துறையினர்தான் என்பதை எங்கும் குறிப்பிடாதது வர்க்கப் பாசத்தைதான் காட்டுகிறது.

மேலும் அந்த பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் விந்தை தினமணிக்கு தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் வராது.

ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடிய திருமுல்லைவாயல் அராபத் ஏரி, அம்பத்தூர் கொரட்டுர் ஏரி, திருவேற்காடு அயனம்பாக்கம் ஏரி, பல்லாவரம் ஏரி ஆகியவை இதுவரை குடிநீருக்காக பயன்படுத்தாத பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளை மண் பரிசோதனை செய்த அதிகாரிகள், இந்த நீர்நிலைகளை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்று கூறியதை எப்படி தினமணி மறந்ததோ தெரியவில்லை.

ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களில் நீர்நிலை என்று குறிப்பிட்டுள்ளவைகளில், பெரும்பாலானவை தனது பயன்பாட்டை இழந்துள்ளன பல காலங்கள் ஆகின்றன. அந்த இடங்களில் 30-40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களிடமிருந்து அனைத்து வகையான வரிகளையும் வசூல் செய்து, அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது சென்ற காலி செய் என்றால் எங்கு செல்வது? மாற்று இடம் என்ற பெயரில் இருக்கும் இடத்தை விட்டு 75 கிலோமீட்டர் தூரம் செல்லச் சொன்னால் வாழ்வாதரம் பாதிக்காதா?

சென்னை நகரில் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதில் உள்ள சிரமங்களை புரிந்து கொண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதேபோல் 5ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு குடியிருப்புகளை இடிப்பது மனிதாபிமான செயலா?

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும், பயன்படாத நீர்நிலைப் பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

ஏதோ அரசுக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்) இடையே உள்ள பிரச்சனை என்பதுபோல் செய்தி உள்ளது. இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனையல்ல: மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதை தினமணி நாளேடு உணர வேண்டு

1 கருத்து:

Sindhan R சொன்னது…

varuka tholar - thodarndhu eluthungkal