பொருளாதாரம்

கச்சாஎண்ணை-விலைஉயர்வு-மாற்று தீர்வு

(இடதுசாரிகள் விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல. மாற்று திட்டத்தை முன்வைப்பவர்கள்)

பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட் ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். டீசல் விலையில் 1 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.360 கோடி கிடைக்கும். கேஸ், சிலிண்டர் விலையில் 10 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.58 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஆனால், தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப் போகும் வருமானம் ரூ.1380 கோடி என்பது கவனிக்கத்தக்கது. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஓராண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும்.

கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும். இதே போல பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் சுங்க வரி தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் மிகப்பெரும் அளவிற்கு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.


தற்போது விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரியை குறைத்தாலே விலை உயர்வு தானாக தவிர்க்கப்பட்டு விடும்.

மக்களை மறந்த மத்திய அரசு இதனை கண்டு கொள்ள மறுக்கிறது. மக்களை திரட்டுவோம்-வெற்றிபெறுவோம்.

கருத்துகள் இல்லை: