403.3 டன் தங்கம் விற்பனைக்கு

........................................................................................................ கட்டுரையாளர் - தோழர் சக்தி

சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். (IMF) தன் வசமுள்ள தங்கத்தில் 12 சதத்தை விற்பதென முடிவு செய்துள்ளது. 1994ம் ஆண்டு பிரட்டன்வுட்ஸ் நகரில் துவங்கப்பட்ட ஐஎம்எப்-ன் நோக்கம் நாடுகளின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியை அதாவது வர்த்தக பற்றாக் குறையை (TRADE DEFICIT) ஈடுசெய்வதே என்று சொல்லப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளை தங்கள் கடன் வலையில் வீழ்த்தி அந்நாடுகள் மீது கடும் நிபந்தனைகளை சுமத்தி, நாடுகளின் இறையாண்மையை பறிமுதல் செய்யும் ஏகத்திபத்திய கருவியாக உலக வங்கியும் ஐஎம்எப்பும் நடை முறையில்செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐஎம்எப் தன் வசமுள்ள தங்கத்தில் ஒரு கணிசமான பகுதியை விற்பதென முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 403.3 டன் எடையுள்ள தங்கத்தை ஐஎம்எப் விற்க இருக்கிறது.

இதன் மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1000 அமெரிக்க டாலர்களை தண்டிவிட்டது. ( ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 28 கிராம், அதாவது முன்றரை பவுன்), ஆனால் ஒரு அவுன்ஸ் 850 டாலர் விலையில் விற்கலாம் என்ற மதிப்பிட்டிலே 11 பில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடாத ஒரு ஐஎம்எப் அதிகாரி கூறிஇருக்கிறார்.

இந்த நிதியைக் கொண்டு நிதியத்தின் நிதியதரத்தை மேம்படுத்தவும், பலவிதமான புதிய முதலிடுகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட முறையில் வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டுருப்பதாக ஐஎம்எப்-ன் நிர்வாக இயக்குநர் டாம்னிக் ஸ்ட்ராஸ் கான் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த அளவிற்கு ஐஎம்எப் இறங்கிவர முக்கிய காரணம், வெனிசுலா அதிபர் சாவேஸ் உலக வங்கிக்கு மாற்றாக 'தென்புல நாடுகளின் வங்கி' என்ற அமைப்பு தோற்றுவித்தது தான். இந்த வங்கி நிபந்தனையற்ற கடன்களை மூன்றாம் உலக நாடுகள் பெற வழிவகுக்கும் யோசனையை முன் வைத்திருப்பதும், தென் அமெரிக்க கண்டத்தில் அர்ஜென்டினா, ஈக்வடார் போன்ற நாடுகள் ஐஎம்எப்பிலிருந்து வெளியேறியது இன்னொரு முக்கியமான காரணம்.

ஐஎம்எப் தனது தங்கத்தை விற்பனை செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனுமதி வழங்க வேண்டும். அப்படியே அனுமதி கிடைத்தாலும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் இல்லாமல் தனது தங்கத்தை விற்க முடியாது.

சரி, சுமார் 403.3 டன் தங்கம் சந்தையில் திடீரென்று குவிந்தால், தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பும் நியமானது தான். ஆனால் இன்றைய சர்வதேச பொருளாதாரச் சூழலை உற்று நோக்கினால், தங்கத்தின் விலையில் பெரும் வீழ்ச்சி நிகழாது என்றே தோன்றுகிறது. 403 டன் தங்கத்தையும் ஒரே நாளில் ஐஎம்எப் விற்கப் போவதில்லை. அதை ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு நீடித்த வகையில் தான் செய்யப்போகிறது என்பது ஒரு காரணம்.

இன்னொன்று நீதி மூலதனத்தின் லாபத் தேவைகளை பங்கு சந்தை தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். அதனால் மேலும் தங்கத்தை வெளியிடுவதன் மூலம் தங்கம் விலை உயரத்தான் வாய்ப்பு உள்ளதே தவிர குறைய வாய்ப்பு இல்லை.

கருத்துகள் இல்லை: