கூட்டலும் கழித்தலும்

செம்மலர் இரா சிந்தன

நெஞ்சம் கனத்து அழுகும்
விவசாயியின் கண்ணீர் கண்டு

"அவன் நிலைக்கு அவனே காரணம்"
என்று பரிகசிப்பாய் நீ

"பாவம்" என்பார் சிலர்

"சுயநலக் கூட்டத்தின்
சுந்தர லீலை இது"
என்பேன் நான்

உனக்கும் எனக்கும்

கேள்விகள் ஒன்றுதான்

பதில்கள் தான் வேறு

பதில்களில்தான் ஒளிந்திருக்கின்றன சூட்சுமங்கள்



வாரம் எழுனாலும்
வயலில் உழுது உழுது
'வக்கற்றுப் போன' அவர்
வரலாறு தெரியுமெனக்கு

அவர் கண்ணீர் கடலில் கரிக்கும்

உட்கார்ந்த இடத்திலிருந்து
'ஊக வணிகம்' செய்து
கோடிகளை கொள்ளையடிக்கும்
கும்பலையும் தெரியுமெனக்கு

அவன் வாழ்க்கை கோடியில் கொழிக்கும்

நெஞ்சில் ஈரமில்லா
நீச மேதைகளோ
இதற்க்கு இட்ட பெயர்
அறமான "smart work"

உருவாக்கும் கரங்களுக்கு
உண்டாகும் துரோகத்துக்கு
நாங்கள் வைக்கும் பெயர்
அற்பமான "fraud work"

"போர்" அடித்து கால் வலித்து
இளைப்பாறித் திரும்புகையில்
அப்படியே இருக்கும் கதிர்

பொத்தானை அழுத்தியதும்
பாதியாய்க் குறையும்

கூட்டிக் கழித்துப் பார்க்க
'உலக்கையும்' அடகு போகும்

உழவா ..

உன் கணக்கை கூட்டி
உனக்கான போர் தொடங்கு

உன்தலைக்கு விலை பேசும்
அரசியல் கூட்டோடு
கால்களில் கடித்துரிஞ்சும்
அந்த 'அட்டை'களைக்
கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும் ...
செங்கொடி உன் கூட வரும் ...

கருத்துகள் இல்லை: