நாடாளுமன்ற தேர்தலும் உழைக்கும் வர்க்கமும்

ஆர்.சிங்காரவேலு

2004ல் 61 இடதுசாரி எம்.பிக்க ளின் ஆதரவுடன் அமைந்த ஐ.மு.கூ. அரசு, குறைந் தபட்ச பொதுத்திட்டத்தை அறிவித்தது. இதில் உழைப்பாளர் நலன் குறித்து என் னென்ன வாக்குறுதி அளிக் கப்பட்டது?

“அனைத்து தொழிலாளர்களின் குறிப்பாக முறைசாரா தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படும். சமூக பாதுகாப்பு, சுகாதார காப் பீடு திட்டம் விஸ்தரிக்கப்படும். முதலாளிகள் இஷ்டம்போல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும், துரத்துவதும் என்ற கொள்கை யை புறக்கணிக்கிறோம். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழிலாளர் சட்டங்களில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படும். இந்த மாறுதல்கள், தொழிற்சங்கங்களுடன் முழுமையாக கலந்தா லோசித்து கொண்டுவரப்படும். வேலை நிறுத்த உரிமை உட்பட அனைத்து உரிமை களும் பறிக்கப்படமாட்டாது. பொதுவாக லாப மீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டாது. கிராமப்புற, நகர்ப்புற ஏழை மற்றும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை உறுதிப்படுத்தப்படும்.

நடைமுறையில் மேற்கண்ட வாக் குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. கிரா மப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வறு மைக் கோட்டிற்கும் கீழுள்ளவர்க்கே வேலை என மசோதா இருந்தது. இடதுசாரிகள் நிர்ப் பந்தத்தால் இந்த ஷரத்து நீக்கப்பட்டது.

மத்திய அரசு மீது ஒரு குற்றப்பத்திரிகையே தொடுக்கலாம். உழைக்கும் மக்களின் நலன் கள் குறித்த, கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள்.

வேலை வாய்ப்பு பறிப்பு

கடந்த 5 ஆண்டுகளாக, வேலை நியமன தடைச்சட்டம் நீடிக்கிறது. ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகளில் ஏராளமான பணி யிடங்கள் நீக்கப்பட்டுவிட்டன. ரயில்வே துறையில் பல பணிகள் வெளியிடங்களுக்கு மாற்றப்படுகிறது; தனியார்களிடம் ஒப்படைக் கப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்களை நிறுத் திவிட்டு, அவர்களுக்கு பதிலாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்ற னர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகக்குறைவு.

தனியார்துறையில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தும் தொழில்களில் கூட காண்ட் ராக்ட் தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்ற னர். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி நிரந் தர வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியினால் கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் வேலைகள் இழக்கப் பட்டுள்ளன. தனியார்துறையில் நிலவும் உயர் சாதி ஆதிக்க மனோபாவத்தால், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்படவில்லை. இச்சட்டம் கொண்டுவரும் அரசியல் உறுதிப்பாடும் மைய அரசுக்கு இல்லை.

கோலோச்சும் அடிமைத்தனம்

தொழிலாளர் சட்டங்கள் எதுவும் அநேக மாக அமலாக்கப்படுவதில்லை. எதற்கெடுத் தாலும் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பு என் பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதேபோல் ஓவர்டைம் இரட்டிப்பு சம்பளம் இன்றி, 12 மணி நேர வேலை என்பது சாதாரணமாக அமலா கிறது. பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய ஆய்வாளர்கள் பணி நீக்கப்பட்டுவிட் டது. 30 கோடி உழைப்பாளிகள் தினசரி ரூ.50 கூட (ஒரு டாலர்) சம்பாதிக்க முடிவதில்லை என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கூறு கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர் உள்ள நிறுவனங்களில் பி.எப்., இஎஸ்ஐ, போன்ற சட்ட சலுகைகள் கொடுக்க வேண் டும் என்பதால், பல நிறுவனங்கள் 19 தொழி லாளரை பணியில் அமர்த்தியுள்ளதாக கணக்கு காட்டி, சட்ட சலுகைகளிலிருந்து தப்பித்துவிடுகின்றன. ஒரே காம்பவுண்டிற் குள், 2,3 நிறுவனம் செயல்படுவதாக ஜோடிக் கப்படுவதும் உண்டு.

முறைசாரா தொழிலாளர்க்கு பட்டை நாமம்

2008 டிசம்பரில் அகில இந்திய முறை சாரா தொழிலாளர் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தால் முறைசாரா தொழிலாளர்க்கு எந்த பயனுமில்லை. ‘அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’ என்பது போன்றதே இச்சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள், அர்ஜூன் சென் குப்தா தலை மையிலான கமிஷனின் பரிந்துரைகள், சமூக பாதுகாப்பு சட்டம் குறித்து தேசிய தொழிலாளர் நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கு இறுதிப் படுத்திய பரிந்துரைகள் அனைத்தும் புறக் கணிக்கப்பட்டன.

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் முழுமையாக அமலாக்கப்படும் என குறைந்தபட்ச பொதுத்திட்டம் கூறுகிறது. ஆனால் இதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்க ளுக்கு ஊட்டச்சத்து வழங்கிவரும் லட்சக் கணக்கான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், பென்சன் வழங்கப்படு வதில்லை.

கிராமப்புற சுகாதாரதிட்டம் அமலாக்கத் தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹளுழஹளு என்ற ஆயாக்களுக்கு மாதம் ரூ.600 ஊக்கத்தொகை என்று மட்டும் வழங்கப்படு கிறது. அலவன்ஸ், படிகள் எதுவும் இன்றி வஞ்சிக்கப்படுகின்றனர்.

சத்துணவு, மதிய உணவு ஊழியர் நிலை யும் துயரமாகவே உள்ளது.

பணியிடங்களில் பாலியல் பலாத்காரத் தை தடுப்பது குறித்து, சட்டம் இயற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் 12 ஆண்டு களுக்கு முன்பே வழிகாட்டியது. இத்தகைய சட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

தகவல் தொழில்நுட்ப துறையில் இரவு ஷிப்டில் பெண்கள் பணியாற்றும்போது பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் பாதுகாப்பு குறித்து சட்டம் இல்லை.

பி.எப்/பென்சன்

நாடு முழுவதும் 4 கோடி பி.எப் சந்தா தாரர்கள் உள்ளனர். பி.எப். சட்டம், 10 அல்லது அதற்குமேல் தொழிலாளர் உள்ள நிறுவனத் திற்கும் பொருந்தும் என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என அரசு அளித்த வாக் குறுதி, காகிதத்தில் உறங்குகிறது.

பி.எப். மீதான வட்டி 12 சதத்திலிருந்து 8.5 சதமாக குறைந்துவிட்டது. பி.எப் நிதி மற்றும் 1995 பென்சன் திட்டப்படி, நிறுவனங்களின் 8.33 சத ஊதிய பென்சன் பங்கு நிதி அரசின் ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டு அரசு கடந்த காலத்தில் 12 சத வட்டி வழங்கி வந்தது. பின்னர் இதை 8 சதமாக குறைத்துவிட்டது.

இடதுசாரிகள் மைய அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஆன பின்னர், பி.எப். நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற் காக, எச்எஸ்பிசி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ புருடன்சியல் ஆகிய தனியார் பி.எப் நிதி மேலாளர்களை அரசு நியமித்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில், மைய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகளின் சேவைகள்

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்திட எண்ணற்ற போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தியுள்ளன. இதனால் எந்த ஒரு நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமும் தனியார்மயமாக் கப்படவில்லை.

டில்லி, மும்பை விமான நிலையங்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பை மீறி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

பெல் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு மைய அரசு முயற்சித்தபோது, இடதுசாரிகள், ஐ.மு.கூ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிப்போம் என்ற முடிவை இடது சாரிகள் எடுத்ததால் பெல் பங்கு விற்பனை தடுக்கப்பட்டது.

நெய்வேலி, நேஷனல் அலுமினியம் கம் பெனிகளை, தனியார்மயமாக்க முயற்சிக்கப் பட்டதை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்டது.

வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் நேரடி அந்நிய முதலீடு அதிகரிக்க மைய அரசு எடுத்த முயற்சிகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அமெரிக்க நிதித்துறை நெருக்கடியினால், நமது நிதித்துறை பாதிக் கப்படாமல் பாதுகாக்க முடிந்தது.

‘வால்மார்ட்’ என்ற அமெரிக்க சில்லறை விற்பனை பகாசுர நிறுவனம் நம் நாட்டிற்குள் நுழை வதை இடதுசாரிகள் தடுத்து நிறுத் தினர்.

பென்சன் நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வகை செய்யும் சட்டம், இடதுசாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்தில், மூடிய ஆலை தொழிலாளர்க்கு மாத நிவா ரணம் ரூ.1000 அளிக்கப்படுகிறது. ரூ.5106 கோடி சிறப்பு திட்டத்தின் மூலம் கிலோ அரிசி ரூ.2, வீட்டு வசதி திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு 4 சத வட்டியில் கடன், 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நியமனம் ஆகியவை அமலாக்கப்படுகின்றன.

கேரளாவிலும், கிலோ அரிசி ரூ.2 திட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் உள்முக கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் திட்டம் அமலாக்கப் படுகிறது. வெளிநாடுகளில் வேலையிழந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்க்கு நிவாரணம் வழங்கும் நலத்திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மீட்கப்பட்டு, லாபமீட்டுபவையாக மாற்றப்பட்டன.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வும், பொதுத்துறைகளை பாதுகாக்கவும், முறைசாரா தொழிலாளர்க்கு உருப்படியான சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவும், இடதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆதர வுடன் போட்டியிடும் ஜனநாயக சக்திக ளுக்கு வாக்களிப்பதும், தேர்தல்களத்தில் முனைப்பாக தேனீக்கள் போல சுறுசுறுப்பாக ஈடுபடுவதும் தமிழக உழைப்பாளி மக்களின் கடமை.

கருத்துகள் இல்லை: