‘பொற்காலம்’: நேற்றும் இல்லை, இன்றும் இல்லை


சு.பொ.அகத்தியலிங்கம்

"காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" என அடிக்கடி ‘ஜோக்’ அடிப்பது காங்கிராஸாரின் வாடிக்கையாகி விட்டது. "நடப்பதே காமராஜர் ஆட்சிதானே" என தனக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்வதும் நமக்குப் பழகிப் போன ஒன்றே! "காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்", "அண்ணா ஆட்சியைக் கொண்டு வருவோம்", "எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்றெல்லாம் அவரவர் தேவைக்கு ஏற்ப முழக்கமிடுவதைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

Anna அந்த வரிசையில் "பக்தவச்சலம் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்று யாரும் கூறுவதில்லை. ஏனெனில் ‘புழுத்த அரிசியும்’, ‘துப்பாக்கிச் சூடும்’ மாறாத வடுவாய் அவர்மீது படிந்து விட்டதால் அவரும் தப்பித்தார், நாமும் தப்பித்தோம். காமராஜர் ஆட்சியாகட்டும், அண்ணா ஆட்சியாகட்டும், எம்ஜிஆர் ஆட்சியாகட்டும் எதுவும் பொற்காலம் இல்லை. இவர்கள் ஆட்சியில் சில நல்ல அம்சங்கள் உண்டு. பல மோசமான அம்சங்களும் உண்டு. எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கிற ஞானம் நமக்கு வந்தால் மட்டுமே விமோச்சனம் பிறக்கும்.

ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமை காமராஜர் ஆட்சிக்கு மகுடமெனில் முதுகுளத்தூர் கலவரம் கறைபடிந்த அத்தியாயமாகும். சீர்திருத்த திருமணம் செல்லும் என சட்டமாக்கியது, தமிழ்நாடு என பெயர் சூட்டியது போன்ற சாதனைக் கனிகள் அண்ணாவின் பெயர் சொல்லுமெனில், வெண்மணியில் 44பேர் உயிரோடு எரிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டும். சத்துணவுத் திட்டம் எம்ஜிஆர் புகழை உரக்கப் பேசும், அதேசமயம் கல்வி வியாபாரத்துக்கு கால்கோள் நடத்தியது அவரது ஆட்சியின் கரும் பக்கம் ஆகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவர்கள் மாறிய போதும், கோஷங்கள் மாறிய போதும் சமூகத்தில் அடிப்படையான அவலக் காட்சிகள் அப்படியே தொடர்கின்றன. வசதி படைத்தவர்களுக்கும், வறியவர்களுக்குமான இடைவெளி ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வளர்ச்சியின் இனிய கனிகளை ஒரு சிறு கூட்டம் தின்று கொழுக்க பெரும்பான்மையோர் சருகாய் வாடி வதங்குகின்றனர். உணவு, உடை, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, ஏன் வழிபாட்டு இடத்தில் கூட பணக்காரனுக்கு ஒன்று ஏழைக்கு இன்னொன்று என இந்தியா "இரட்டை இந்தியாவாகவே" தொடர்கிறது.

‘உணவு, நிலம், வேலை’ என்பது விடுதலைப் போராட்ட கனவாகவே இருந்தது; இன்றும் அதுவே பெரும்பாலான மக்களின் வாழ்வின் இலக்காகவே மாறிப் போயுள்ளது. இதில் யாருடைய ஆட்சியை ‘பொற்காலம்’ என்று புளங்காகிதம் அடைவது? மாநில ஆட்சிகள் மட்டுமல்ல மத்தியிலும் இதே நிலைதான். நேரு, லால்பகதூர், இந்திரா, மொரார்ஜி, ராஜீவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் என யாருடைய ஆட்சியும் அடித்தள மக்களின் அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்கவில்லையே!

‘சோஷலிச மாதிரி சமுதாயம்’, ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’, ‘வறுமையே வெளியேறு’, ‘வேலையின்மையே வெளியேறு’, ‘21ம் நூற்றாண்டுக்கு போவோம்’, ‘வித்தியாசமான கட்சி, வித்தியாசமான ஆட்சி’ எத்தனை எத்தனை முழக்கங்கள். யாருடைய ஆட்சி பொற்காலம்?

விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா ‘ராமராஜ்ய’ கனவு கண்டு கொண்டிருந்தார்; நேருவோ ‘அசோக ராஜ்ஜியம்’ என அறிவித்துக் கொண்டிருந்தார். எந்த ராஜ்ஜியமும் வரவில்லை. யாருடைய வாக்குறுதியும் ஏழைகளுக்கு வாழ்க்கையைத் தரவில்லை. இனியும் ‘இவர் ஆட்சி’, ‘அவர் ஆட்சி’ என்ற கற்பனைக் கனவுகளை துடைத்தெறியுங்கள். "சென்ற தினி மீளாது மூடரே!" என்று பாரதி சொன்னது போல பழைய வரலாறு மீண்டும் அப்படியே நிகழாது. நிகழவும் கூடாது. தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் தேசம் பற்றிய கவலையோடு இளைய தலைமுறை எதிர்காலம் குறித்து அக்கறை காட்ட வேண்டும்.

நேற்றும், இன்றும் தமிழக, அகில இந்திய அரசியல் தனிநபர்களையே மையமாக வைத்து சுழற்றப்படுவதால் அது சுரண்டும் வர்க்கத்திற்கு அது துணையாக இருக்கிறது. இவருக்குp பதில் அவர். அவருக்குp பதில் இவர் என சீட்டுக்கட்டை மாற்றுவது போல் சில மயக்க மாயாஜாலம் செய்துவிட்டு கொள்கை வகுப்பதிலிருந்து மக்களை தள்ளி வைத்து விடுகிறது. இந்த நிலை மாறாமல் இத்தேசத்திற்கு விடிவு இல்லை.

"என்னை முதல்வராக்குங்கள் சகல நோய்களும் தீரும்" என மோடிமஸ்தான் பாணியில் ஒரு புறம் பிரச்சாரம்; எனக்கென்று கொள்கையேதுமில்லை. மோடியையும் வரவேற்பேன், அவசரக்காலத்தையும் போற்றுவேன் என்பவர்களாலோ ரியஸ் எஸ்டேட் கொள்ளையர்கள் மற்றும் கள்ளச் சாராய ஃமாபியாக்களின் பணப்பெட்டியை நிரப்ப ‘மகாத்மா வேடம்’யிடுபவர்களாலோ விடியலைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதும் பேதமையே.

யார் முதல்வர்? யார் பிரதமர்? என்பதல்ல தேசத்தின் கவலை. இனி எந்தக் கொள்கை திசை வழியில் தேசம் செல்லப்போகிறது என்பதுதான் கவலை. யார் யார் என்னென்ன வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்பதல்ல இனி நம் கவலை. நோய் நாடி அதன் முதல் நாடி வாய் நாடி அதற்கு சரியான வைத்தியத்தை முன்மொழியும் மாற்றுதிட்டம்தான் தேவை. அதையார் முன்மொழிகிறார்கள் என்பதுதான் கேள்வி.

‘சாதனை பிதற்றல்களும்’, ‘சாகச வாக்குறுதிகளும்’ நம்மை சறுக்கல் பாதையில்தான் மீண்டும் மீண்டும் தள்ளும்; மாறாக, உண்மையை உரக்கப் பேசும் மன உறுதியும் நேர்மையும் இலட்சிய உறுதியும் கொண்ட தலைமையே நமக்குத் தேவை.

ஜோதிபாசு நேர்மையாக தன் சுய சரிதையில் கூறுகிறார்; "கடந்த ஆண்டுகளில் நல்லதாகவும், கெட்டதாகவும் பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இப்போது என்னால் காண முடிகிறது. எனினும் உண்மையான பிரச்சனை என்பது இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நம் நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் இருக்கிறது."

35ஆண்டுகாலம் நிலச்சீர்திருத்தம்; பஞ்சாயத்து ஆட்சி என பல அடிப்படை மாறுதல்களை கொண்டு வந்து ஆட்சி நடத்திய கட்சியின் தலைவர் முதல்வர் அடக்கமாகவும் உண்மையாகவும் கூறும் வார்த்தைகள் பலரின் ‘பொற்கால’ பொய்மையை தவிடுபொடியாக்கி விடுகிறது. ஜோதிபாசு கூறினாரே அந்த சாதாரண மக்கள் ஆட்சி கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது. ஆனால், அதை எட்டும் வழி சுலபமல்ல. அதை நோக்கி "மூன்றாவது மாற்றை" உருவாக்குவது காலத்தின் தேவை.

மீண்டும் ஜோதிபாசு சொல்வதோடு நிறைவு செய்வோம் "மூன்றாவது அணி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நீடித்த இயக்கங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாகத்தான் இதை உருவாக்க முடியும். முன்னெப்போதையும் விட இடதுசாரிகள் பொறுப்பு என்பது மேலும் முக்கியமானதாக மாறியுள்ளது."

ஆம்! போராட்ட களத்தில்தான் மூன்றாவது அணி வார்க்கப்பட வேண்டும்! தலைவர்களின் கைகுலுக்கல்களில் அல்ல.


- சு.பொ.அகத்தியலிங்கம் (agathee2007@gmail.com)

இடதுசாரிகளின் நிலை சரியென நிரூபிக்கப்படும்

 நாட்டை ஆள்வோரின் அல்லது ஆட்சி செய்ய ‘ஆசைப்’படுவோரின் திசைவழி என்ன என்பதைக் கணிப்பதும் அதற்கேற்பத் தனது நிலைபாட்டை வகுப்பதும்தான் அரசியல் கட்சிக்கு அழகு. தமிழகத்தில் அஇஅதிமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள அரசியல் முடிவு தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

பாரதிய ஜனதா கட்சியை அரசியல் அரங்கி லிருந்து அகற்றுவதுதான் மதவாத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற நிலைபாடு கொண்ட பாஜக, நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை பாழ்படுத்தி விடும் என்பதற்கு கடந்தகாலத்தில் ஏராளமான சான்றுகள் உண்டு. தமிழகத்திலும் அது தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த மனுவாதி கட்சியை ஆரத்தழுவி திருத்திவிடலாம் என்று உறவாடிய திமுக ஒன்றும் நடவாதத் தோல்வியோடு திரும்பி வந்தது. புலி தன் கோடுகளை எக்காலத்திலும் உதிர்த்து விடாது என்பதன் அடையாளமாகத்தான் பாஜக வின் அனைத்து முடிவுகளும் அமைந்துள்ளன. இன்றுவரை அந்தக் கட்சி தனது மதவெறி அஜெண்டாவைக் கைவிடவில்லை. மக்கள் இந்தக் கட்சியை 2004 தேர்தலில் நிராகரித்து ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். இதற்கான பணியில் இடதுசாரி கட்சிகளின் பங்கு மகத்தானது.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடும் வேறு சில கட்சிகளின் கூட்டணியோடும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், நாசகர பொரு ளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதில் மாற்றம் செய்யவில்லை. இன்றைக்கு உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது இந்தியா ஓரளவு தப்பித்திருக்கிறதென் றால் அதற்கு காரணம் இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பே என்பதை நாடறியும்.

எனினும் மன்மோகன் சிங் தனது அமெ ரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. நாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக் காவுடன் செய்து கொண்டார். உலக அடாவடிக் குக் கையாளாக இந்தியாவை மாற்றும் மத்திய அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும், வசதி படைத்தவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள்; வாழ்க்கையில் அடிபட்ட வர்களுக்கு மேலும் மேலும் வறுமை, வேதனை என்ற மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டிய கட்டாயக் கடமை இன்று இடது சாரிகளுக்கு இருக்கிறது.

இந்தக் கடமையை நிறைவேற்ற தேசிய அள விலும், மாநில அளவிலும் இடதுசாரிகள் மேற் கொண்டிருக்கும் அணி சேர்க்கை பாஜக-காங்கிரஸ் கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டும். இந்த கட்சிகளோடு கை கோர்த்து நிற்பவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. பாஜக அணியைத் தோற்கடியுங்கள். காங்கிரஸ் அணி யை நிராகரியுங்கள் என்ற இடதுசாரி கட்சிகளின் முழக்கம் சரிதான் என்பதும் நிரூபிக்கப்படும்.

இந்த பின்னணியில் அதிமுகவுடன் இணைந்து இடதுசாரி கட்சிகள் தேர்தலை சந்திப்பதன் மூலம் மதவெறி பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்ற நிலை உருவாக்கப்படும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளி கட்சிக ளுக்கு உரிய பாடம் புகட்ட ஏதுவாகும். நாடாளு மன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் பலம் அதி கரிக்கும். இதன்மூலம் அமையப் போகும் நாடாளுமன்றத்தின் முகவரி மாற்றியமைக்கப் படும். அதன்மூலம் உழைக்கும் மக்களின் நலன் பேணும் மாற்றுக்கொள்கைகளை 

அமெரிக்கா - இது கனவுகளை காவுவாங்கும் தேசம்

கட்டுரையாளர்:

பூமிநாதன்

TCS Consultent

Lehman brothers

"Lehman brothers" என்ற பெயரை சமீப காலமாக நீங்கள் அதிகமாக கேட்டிருப்பீர்கள். அமரிக்காவின் Wall Street-ல் தொடங்கி நம்ம ஊர் டீக்கடை வரை " Lehman brothers " திவாலான கதையைப் பேசுகிறார்கள். அமெரிக்கா தனது வரலாற்றில் பல நிதி நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது ஆனாலும் இவ்வளவு பெரிய பாரம்பரிய நிறுவனம் வீழ்ச்சியடைவது இதுவே முதல்முறை. 158 வருட பாரம்பரியமிக்க அந்த வங்கி தன் வாழ்நாளின் கடைசிக்கட்டத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது. இப்போது நானும் இந்த நிதி நிறுவனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறேன்.

எங்கோ இருக்கும் அமெரிக்க நிதி நிறுவனம் அறிவித்த திவால் அறிக்கை, உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது (முக்கியமாக பங்குச் சந்தைகளை). அடுத்த திவால் வரிசையில் AIG (American International Group) வர தயாராக உள்ளது. இன்னும் பல நிதி நிறுவனங்களின் காலாண்டு அறிக்ககைகளை கவனிக்கும்பொழுது அவைகளும் விரைவில் வீழ்ச்சியை சந்திக்க இருப்பதைக் காட்டுகிறது. எனவே அமெரிக்காவின் வரலாற்றில் மற்றுமொரு மோசமான காலகட்டம் தயார் நிலையில் இருக்கிறது.

அமெரிக்காதானே அதுகிடக்கட்டும் என்று நாம் விட்டுவிட முடியாது ஏன் என்றால்? அது உலகப் பொருளாதாரத்தின் முதுகில் ஏறியிருக்கும் சாத்தான்.

இப்போது " Lehman brothers " வெளியிட்டுள்ள இந்த திவால் அறிக்கை சுமார் 25000 பேரை வேலை இழக்கச் செய்யும். இதில் இந்திய Lehman brothers- ல் வேலை செய்யும் 2500 பேரும் அடக்கம். இது தவிர என்போல மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ள சுமார் 3000 இந்தியர்களின் நிலையும் கேள்விக்குறி தான். இதனை உன்னிப்பாக கவனித்தால் வேலை இழப்போரில் ஐந்தில ஒருபங்கு இந்தியர்கள் என்பது புலப்படும். அமெரிக்க கனவுகளோடு, இங்கே வேலைக்கு சேரவும், எப்படியாவது Green Card வாங்கிவிடவும் துடிக்கும் இந்திய இளைஞர்கள், இங்கு வந்த பின்பே உண்மை நிலைமையை புரிந்துகொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிலை இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வேலை இல்லாமல் ஒரு இந்தியன், அமெரிக்காவில் ஒரு மாதத்தை ஓட்டுவது, முள்மேல் நடக்கும் வித்தைதான். சம்பாதிக்கும் பணத்தைக் கெண்டு சொகுசான வாழ்க்கை வாழப் பழக்கும் அமெரிக்க சூழலிருந்து ஒரே நாளில் கீழே இறங்கவேண்டிய நிலை கொஞ்சம் கடினம். இன்றைய நிதி நிலைமையின் காரணத்தால் பணரீதியான பாதிப்புகள் மட்டுமல்லாமல் உளரீதியான பாதிப்புகள் வேறு நம்மை பாதிக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்புகள், எதிர்காலத திட்டங்கள் எல்லாம் ஒரு நாளில் தவிடுபொடியாகும் போது, நம்மை நம்பி இருக்கும் குடும்பம் மற்றும் உறவினர்கள் ஆகியோரைப் பற்றிய எண்ணம் மனதை அழுத்துகிறது. இவற்றைஎல்லாம் தாண்டியே ஒரு அமெரிக்கா வாழும் இந்தியன் நாட்களை ஒட்டவேண்டிய நிலை.

நமக்காவது இது பிழைக்கவந்த நாடு, இதனை விட்டுசென்றால் சொந்த நாடு இருக்கிறது, சொந்தங்கள் உண்டு (எதிர்பார்ப்புகள் அடுத்த விஷயம்), ஆனால் இந்த நாட்டிலே பிறந்து இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். வேலை இல்லாத ஒவ்வொருநாள் வாழ்க்கையும் அவர்களுககு இனி அரளி விதை தான். திவால் அறிக்கையைக் கேட்டு 55 வயதான என்னுடைய மேளாளர் கலங்கிப் போய்விட்டார். கிட்டத்தட்ட 20 வருடாங்களாக இங்கே வேலை செய்துகொண்டிருக்கும் அவரால் இனிமேல் புதிதாக வேலை தேடி மீண்டும் தன்னை நிரூபித்து வாழ்க்கையை தொடர்வது மிகக் கடினமான சோதனை.

அமெரிக்க அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு இழப்பீட்டு பென்ஷன் வழங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆட்குறைப்பிற்கு ஆளான தொழிலாளர்கள் இதனைப் பெற்றார்கள். ஆனால் திவாலாகி வெளியேறும் இந்தத் தொழிளார்களுக்கு அதுகூட கிடைக்காத நிலை அந்த 401$ க்காக நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்.

என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு ஏஜென்சி துணையோடு இங்கு H1 Visa மூலம் வந்து வேலை செய்து வருகிறான். வந்து 8 மாதத்தில் கிடைத்த வேலை பறிபோய்விட்டது. இப்போது அவன் ஒரு மாதத்திற்குள் வேலை தேடியாக வேண்டும், அதற்குள் அவனிடம் இருக்கும் பணமும் கரைந்துவிடும். அதற்குமேல் வேலை தேட அவனது ஏஜென்சியும் அனுமதிக்காது. நேரடியாக வேலை தேடி இங்கு வந்த இந்திய நண்பனின் கதையோ இன்னமும் பரிதாபம். அவனும் H1 Visa மூலம் வேலை செய்து வருகிறான். குடும்பம், குழந்தை வேறு. வேலை இழந்த உடன் அவனது தகவல்கள் தொழிலார்கள் துறைக்கு (immigrant office) போய்விடும். உடனடியாக வேறு வேலை தேடியாக வேண்டும். 15 நாட்களுக்கு மேல் வேலையின்றி H1 Visa வில் இருப்பது இங்கு சட்டப்படி குற்றம். அல்லது அவன் தன் சொந்த ஊருக்கு போக வேண்டும். விழி பிதுங்கி இருக்கிறான் அவன்.

இப்போது நெருக்கடி மிக்கதொரு மோசமான சூழல் எழும்பி வருகிறது. உழைப்பு சந்தையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக அதிக வேலையாட்கள் சேர்ந்துவிட்டார்கள். ஏற்கனவே அமெரிக்கா 9.4 மில்லியன் வேலையில்லா மக்களைக் கொண்டுள்ளது. அந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரித்துவருகிறது. இப்போது மற்ற நிறுவனங்களில் வேலை தேடுவது கொஞ்சம் கடினமான காரியம். நேரடி அமெரிக்க வேலையாட்களுக்கே வேலை கிடைக்காத சூழலில், மறைமுகமாக அதாவது ஏஜென்சிக்கள் மூலம் வேலை தேடும் நம் நாட்டு இளைஞர்கள் நிலை என்னவாகும்?

எந்த கேள்விகளும் கேட்காமல் சொல்வதை கேட்டுக்கொள்ளும் மனப்பான்மைதான் நாகரீகம் என்று பழகியிருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் கூட இல்லாத நிலையில் எல்லா வாழ்வாதார பிரச்சனைகளையும் நாங்கள் தனிமனிதர்களாகவே தாங்கிவருகிறோம். இப்படி அமெரிக்க கனவுகளோடு வந்திருந்து வசிக்கும் தொழிலாளர்களின் மனக்குமுறல்கள், வேதனைகள் எண்ணிலடங்காது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் வந்து இப்படி மாட்டிக்கொள்ளும் எங்களுக்கும் 'விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சிகளுக்கும்' அதிக வித்தியாசம் இல்லை. சூழல்கள் கடினமாகிக் கொண்டிருக்கும் இப்போதுதான் புரிகிறது ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியதின் அவசியம். அமரிக்க கனவு தேசம் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போதுதான் புரிந்திருக்கிறது இது கனவுகளை காவுவாங்கும் தேசம்.

தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்... எனது அன்புக்குரிய வீரத் தாத்தா

தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்... எனது அன்புக்குரிய வீரத் தாத்தா


இந்திய தேசத்திற்கு தியாகம் கற்றுத்தந்த சிவப்பு சரிதங்களில் மற்றும் ஒன்று மறைந்தது. அவர் வாழ்ந்தது தொன்னூற்று மூன்று ஆண்டுகள் - அரசியலில் உழைத்தது 75 ஆண்டுகள் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்திற்க்கும் ேலான அரசியல் வாழ்க்கை கொண்டவர் , வயது பதினாறில் பகத்சிங் பாதம் பற்றி இந்திய சுதந்திரத்தை மணம் முடித்த , அவரை மரணம் பற்றும் வரை மாறி நிற்கவில்லை.

பத்து ஆண்டு சிறை வாழ்வு, எட்டு ஆண்டு தலை மறைவு நினைக்கமுடியாத சாகசம் பல புரிந்த உண்மை நாயகன் அவர் . இந்திய தேசத்தின் சுதந்திரம் ஏழை மக்கள் வாழ்வின் விடியலில் இருக்கிறது என்று இடையறாது போராடியவர்.

அகாலி, காங்கிரஸ், கிலாபத் இயக்கங்களோடு இணைந்து போராடி சிறை சென்ற தந்தை, மனம் தளராத தாய் அந்த வீர மகனைப் பெற்றது 1916 இல், அகாலி,கீர்த்தி, சங்கீத் ஆகிய பத்திரிக்கை வாயிலாக சுதந்திர உணர்வு அவனுக்குள் சூழ் கொண்டது. பள்ளி வயதில் பகத்சிங் "நவஜவான் பாரத் சபா" வில் பற்றியது அவனது சுதந்திர வேள்வி.


பகத் சிங்க்-இன் முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்கு, ஆங்கிலேயக் கலக்டர்க்கு முன்னாள் கலக்டர் அலுவலகத்தில் இருக்கும் ஆங்கிலேயக் கோடி அகற்றி இந்திய கோடி ஏற்றினான், துப்பாக்கி துளைக்கப் பறந்தது அவனை, குண்டுகளை ஏமாற்றி பறந்தான் அவன். நீதிமன்றம் அவனுக்கு தண்டனை கொடுத்தது, நீதிபதியுடன் துணிச்சலாக வாதாடி பின் சிறை சென்றான்.

1934 இல் கம்யூனிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் விடுதலைக்காக போராடியவர், இந்தியப் பிரிவினையின் போது பஞ்சாப்பின் எல்லைப் பகுதிகளில் கலவரங்களைத் தடுப்பதில் பெருமளவில் முனைந்து செயலாற்றினார்.

பிறகு - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவ, செயல்பாட்டு வழிகாட்டியாக. இந்திய தேசத்தின் இக்கட்டான சூழல்களை கடக்க உதவும் கண்ணியத் தலைவனாக, உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வழிகாட்டியாக கட்சியை வழிநடத்தி சென்றார். மொத்தம் பதின் மூன்று ஆண்டுகள் அவர் தலைமையில் பயணித்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். சோவியத் வீழ்ந்த போதும் உலக நாடுகளின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்று நிலை எடுத்த போதும், இந்திய கம்யூனிச இயக்கம் தன் நிலை பிறழாமல் இருக்க வைத்து வழிகாட்டிய தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்.

மரணமடைந்தார், தியாக ஜோதியானார்.

இந்திய - உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மாபெரும் இழப்பு இது

அவர் வழி தொடர நமக்கு சிவப்புக் கம்பலங்களில்லை - முள்ளும் கல்லும் நிறைந்த நீண்ட பாதையுண்டு,

சுதந்திர
கனவுகளோடு - தொடரட்டும் நம் பயணம்.

கூட்டலும் கழித்தலும்

செம்மலர் இரா சிந்தன

நெஞ்சம் கனத்து அழுகும்
விவசாயியின் கண்ணீர் கண்டு

"அவன் நிலைக்கு அவனே காரணம்"
என்று பரிகசிப்பாய் நீ

"பாவம்" என்பார் சிலர்

"சுயநலக் கூட்டத்தின்
சுந்தர லீலை இது"
என்பேன் நான்

உனக்கும் எனக்கும்

கேள்விகள் ஒன்றுதான்

பதில்கள் தான் வேறு

பதில்களில்தான் ஒளிந்திருக்கின்றன சூட்சுமங்கள்



வாரம் எழுனாலும்
வயலில் உழுது உழுது
'வக்கற்றுப் போன' அவர்
வரலாறு தெரியுமெனக்கு

அவர் கண்ணீர் கடலில் கரிக்கும்

உட்கார்ந்த இடத்திலிருந்து
'ஊக வணிகம்' செய்து
கோடிகளை கொள்ளையடிக்கும்
கும்பலையும் தெரியுமெனக்கு

அவன் வாழ்க்கை கோடியில் கொழிக்கும்

நெஞ்சில் ஈரமில்லா
நீச மேதைகளோ
இதற்க்கு இட்ட பெயர்
அறமான "smart work"

உருவாக்கும் கரங்களுக்கு
உண்டாகும் துரோகத்துக்கு
நாங்கள் வைக்கும் பெயர்
அற்பமான "fraud work"

"போர்" அடித்து கால் வலித்து
இளைப்பாறித் திரும்புகையில்
அப்படியே இருக்கும் கதிர்

பொத்தானை அழுத்தியதும்
பாதியாய்க் குறையும்

கூட்டிக் கழித்துப் பார்க்க
'உலக்கையும்' அடகு போகும்

உழவா ..

உன் கணக்கை கூட்டி
உனக்கான போர் தொடங்கு

உன்தலைக்கு விலை பேசும்
அரசியல் கூட்டோடு
கால்களில் கடித்துரிஞ்சும்
அந்த 'அட்டை'களைக்
கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும் ...
செங்கொடி உன் கூட வரும் ...

Global Warming

ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

 

மோனிகா

 

முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடார்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர். இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் விசேஷ குழுவின் முன் “இருபதாண்டுகளுக்குப்பின் புவி வெப்பமடைதல்: கவிழ் புள்ளிகளின் (Tipping Points) அருகாமையில்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டுகிறது.

http://www.columbia.edu/~jeh1/2008/TwentyYearsLater_20080623.pdf அவரது உரையிலிருந்து: “மீண்டும் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு தொடர்புடைய அறிவியல் சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்கள்-பொதுமக்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்று போலவே இன்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எட்டப்படும் முடிவுகள், அரசியல் சமூகத்திற்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. இன்றும் இந்த முடிவுகள் 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக உறுதியானவை என்று என்னால் சான்று பகர முடியும் …பண்பாடுகள் தோன்றி வளர்ந்த இவ்வுலகென்ற படைப்பை காப்பாற்றுவதற்கு தேவையான மாற்றங்கள் என்னவென்பது தெளிவு. ஆனால் குறுகிய லாப நோக்கங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகள் வாஷிங்டனிலும், பிற தலைநகரங்களிலும் கோலோச்சுவதால் இம்மாற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து வருகின்றன… எரிபொருள் கம்பெனிகளின் தலைவர்கள் (CEOS) தங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் நீண்ட கால விளைவுகளை நன்கறிந்துள்ளனர்.

என் பார்வையில் இவர்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டிலேற்றப்படவேண்டும்.” கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று Democracy Now என்ற செய்தி நிறுவனம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியது. ஜேம்ஸ் ஹான்ஸனின் பத்திரிகைக் குறிப்புகளை வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்ததும், அவரை ஊடகங்களில் உரையாட அனுமதிக்காததையும் குறித்த விவரங்களை ஹான்சனும், Censoring Science: Inside the Political Attack on Dr.James Hansen and the Truth of Global Warming என்ற நூலை எழுதியுள்ள மார்க் போவனும் (Mark Bowen) அந்த நேர்காணலில் விரிவாக பதிவு செய்துள்ளனர். www.democracynow.org/2008/3/21/ எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என விட்டுவிட முடியாது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டதோ என்றுதான் அறிவியலாளர்கள் சிந்திக்கின்றனர். ஜான் ஹோல்ட்ரன் (John Holdren) என்ற விஞ்ஞானி புவி வெப்பமடைதல் என்று கூறுவதைவிட புவியை ஊறுசெய்தல் (Global Disruption) எனக்கூறுவதே பொருந்தும் என சென்ற வாரம் கூறியுள்ளார். ஜேம்ஸ் ஹான்சனின் உரை மற்றும் வேறு சில பதிவுகளிலிருந்து திரட்டிய சில தகவல்களை இங்கே தருகிறேன். அடிப்படை தகவல்களாக இருந்தாலும் என் போன்று இப்பிரச்சனைக்கு அறிமுகம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஹான்ஸன் 2006ம் ஆண்டு மக்களின் கவனத்தை கவரும் வகையில் ஒரு அறிக்கையை முன் வைக்க வேண்டி, “விலங்கினங்கள் குறைந்து வருகின்றன: தாவரங்கள் இடம் பெயர்கின்றன” என்ற வாக்கியத்தை தனது ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

மனிதர்கள் வசதியாக வாழ்கின்ற காரணத்தால் (மேலைநாடுகளில்!) தினசரி ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை அவர்கள் சரிவரக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையை நம்பி மட்டுமே வாழக்கூடிய தாவரங்களும் விலங்கினங்களும் தற்போது பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. இப்புவி வெப்பமடைதல் எப்படி ஏற்படுகிறது? பூமி சூரிய கதிர்கள் மூலம் வெப்பமடைவதும் சமநிலையை பராமரிக்கும் வகையில் அதே அளவு வெப்பம் பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதும் இயற்
கை.
சூரிய ஓளி அதிகமாதல், எரிமலைக் குமுறல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஓரளவுக்கு வளிமண்டலத்துக்கு செல்லும் வெப்பத்தை அதிகரிக்கலாம். ஆனால், பெருமளவில் இந்த அதிகரிப்பு துருவப் பிரதேசங்களுக்குள் ஊடுவிச் செல்லும் வளிமண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன்- டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதனால்தான் ஏற்படுகிறதென்று பண்டைய நிலவியல் தட்பவெப்ப (paleo climatic/ past geolithical climatic) ஆய்வுகள் கூறுகின்றன. பூமியும் கடலும் அதிவெப்பமடைய இவையே காரணமென அந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கிட்டத்தட்ட 943 வகை விலங்கினங்கள் தம் தகவமைப்பை மாற்றிக் கொண்டுள்ளன. துருவப்பிரதேசமான அண்டார்டிகாவில் அடிலி, எம்பரர் பென்குயின் போன்ற விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகள் சீல்களை வேட்டையாட முடியாமல் போகவே இருபது சதவிகிததுக்கு மேல் குறைந்துவிட்டன. இவ்வுயிரனங்களின் இருப்பு மானுட இருப்புடன் தொடர்புடையது. இம்மாற்றங்களுக்கு மூல காரணமாகிய கார்பன்- டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவிர இனத்தையும் நம்மில் இலட்சக் கணக்கானவர்களையும் இழக்க நேரிடும்.

உலகெங்கும் வியாபித்துள்ள தொழில்மயமாதல் என்னும் பேய் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டமையால் லண்டன் நகரமே படிவத் திரவங்களின் புகையால் உழன்றது, அமெரிக்காவில் ஒரு ஆற்றையே தீக்கிரையாக்கியது, காடுகளை அமில மழையால் ஆழ்த்தியது. வெப்பமடைதல் பிரச்சினை நம்மை முற்றும் முழுவதும் பீதியிலாழ்த்தும் வரை நாம் இதற்கு விடை தேடப்போவதில்லை. ஆனால் நின்று, நிதானித்து சரிசெய்துவிடலாம் என்று நம்புவதற்கு இடமில்லாத ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். காரணம் 350ppm க்கு குறைவாக இருக்க வேண்டிய கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு ஏற்கனவே 385ppm ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால் அது வருடத்திற்கு 2ppm அதிகரித்துக் கொண்டேபோய் தற்போது எஞ்சியுள்ள படிவத் திரவங்கள் (fossil fluids), எண்ணெய், கரி, கச்சாப் பொருட்களான தார்மணல், மீத்தேன் ஹைட்ரேட், கடின எண்னெய்கள் போன்ற எரிபொருள் முழுவதும் எரிவதால் எட்டக்கூடிய 450ppm அளவை விரைவில் அடைந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3.6 fahrenheit குறைப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் உடனடி நாசத்தை தவிர்க்கலாமே தவிர தீர்வை சென்றடைந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வை நிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை தொழில் நிறுவன அதிபர்களின் கைக்கூலிகளாக இருக்கும் நமது அரசாங்கங்கள்தான். அதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு அளவிலடங்காதது. துந்திரப் பிரதேச தட்பவெப்ப மண்டலங்கள் ஏற்கனவே துருவங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்
டன.
இது கிட்டத்தட்ட 250 மைல்களை தாண்டிவிட்டது. தெற்கு அமெரிக்கா, பூமத்திய ரேகைப் பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளன. கார்பன்- டை ஆக்ஸைடு வளர்ச்சியை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வராவிட்டால் காட்டுத்தீயும், ஏரிகள் வரண்டு போவதும் வழமையாகிவிடும். பனிமலைகளிலிருந்து வரும் நல்ல தண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இமயமலை, ஆண்டஸ், ராக்கி மலைத்தொடர்களின் நீராதாரங்கள் வற்றிக் கொண்டு வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எழும் ஹைட்ராலஜிக் சுழலால் வெள்ளங்களும் பஞ்சங்களும் அதிகரிக்கும். ஆழ்கடலிலுள்ள பவழப்பாறைகளும், மழைக்காடுகளும் மூன்றிலொரு பங்கு கடல் வாழ் விலங்கினங்களின் உரைவிடமாக விளங்குகின்றன. கார்பன்- டை ஆக்ஸைடு அதிகரிப்பால் கடல் நீருடன் அமில மழைக்கலப்பு ஏற்பட்டு இவை பழுதடைந்து வருகின்றன. எங்கெல்லாம் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் கார்பனை தக்கவைத்து பூமிக்குள் திருப்பி அனுப்புவதன் மூலம் புவி வெப்பமடைவதை தவிர்க்கலா
ம்.
வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய்களிலிருந்து கார்பனை பிரித்தெடுப்பது கடினம். அதுமட்டுமல்லாது எண்ணெய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து எரிபொருள் சக்தியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் இனி அது நிலக்கரியிலிருந்து எண்ணையை பிழிந்து எடுப்பதன் மூலமோ, படிவத் திரவங்களின் மூலமோ சாத்தியம் இல்லை. அவற்றின் முடிவை நாம் மிக விரைவில் சென்றடைய இருக்கிறோம். எண்ணெயின் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம். மறு உற்பத்திக்குப் பயன்படக்கூடிய எரிபொருள் சக்தி மூலங்களை கண்டடைவதை விட்டு விட்டு எண்ணெய் நிறுவன ஜாம்பவான்கள் புவி வெப்பமடைவதைப் பற்றின ஐயப்பாட்டினை உண்டாக்குவது “புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என்று நமது சிகரட் பெட்டிகளின் மீது விளம்பரப்படுத்துவதை போன்ற
து.
அரசியல் வாதிகளை அவர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்ட நிலையில் மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். கடைசி சொட்டு வரை நிலத்திலிருந்தும், கடலுக்குள்ளுமிருந்து படிவத் திரவத்தைப் பிழிந்தெடுக்கத் துடிக்கும் சுய நலம் பிடித்த இந்த வர்த்தக நிறுவங்களை குடிமக்களாகிய நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். நமக்கு அருகிலேயே நாம் உண்பதற்குத் தேவையான பயிர் விளையும்போதிலும் உலகின் மற்றொரு மூலையிலிருந்து அது கொண்டுவரப்படுகிறது. ரயில் வண்டியைவிடவும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிவிட்டது. விமான தளங்கள் நம் வெளியூர் பேருந்து நிலையங்களைக் காட்டிலும் அதிக வாகன நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இது பெரு முதலாளிகளுக்கு எளிதில், மலிவான விலையில் படிவத்திரவங்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான். கார்பன் வரியென்றும் கார்பனுக்கு 100% டிவிடெண்டும் விதிப்போமேயானால் அவர்கள் இப்போதையிலிருந்து தெளிவடைய வாய்ப்புண்டு. அதே நேரம் பொது மக்களாகிய நமக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் நாசத்திற்கும் அவர்களை எவ்வாறு ஈடு செய்ய வைப்பதெப்படி என்று தெரியவில்லை. ஹான்சனின் எச்சரிக்கைகள் இப்படியிருக்க இதனிடையில் கடந்த ஜூன் 22ம் தேதி ஜெடாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தியாளர் (Organisation of petroleum exporting companies)- வாடிக்கையாளர் கூட்டத்தில் நடந்த சூடான விவாதத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு காரணம் போதிய அளவு உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி செய்யாததுதான் என்று வாடிக்கையாளர்களான (பெரும்பாலும்) மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்ட மற்றொரு புறம் உற்பத்தியோ, நுகர்வோ பெரிய மாற்றமடையாதபோது போன வருடம் 70$ ஒரு பேரலாக இருந்த பெட்ரோல் இப்போது 140$ ஆக மாறக் காரணம் என்ன என்று பி.சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். இந்த சர்ச்சையில் தெரிய வந்தது என்னவென்றால், பெட்ரோலியத்தில் முதலீடு செல்லும் பண முதலைகளுக்கும் அதன் உடனடி பயன்பாட்டுக்கும் எந்த உறவும் கிடையா
து.
அமெரிக்காவைச் சார்ந்த பெரிய நிதி நிறுவனங்கள், ஓய்வுப் பண வைப்பு நிதி நிறுவனங்கள், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2 018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது. இழவு வீட்டில் பந்தலிலே பாவற்காய் என்று பாடுவது நினைவிற்கு வருகிறதல்லவா?

தெலுங்கானா ஆயுதப் போராட்ட வீரங்கணையின் தற்கால புரட்சிக் குரல்!

பதிவு செய்தவர்: வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம்
பதிவு நேரம்: 14 Jul 2008 01:03 pm
பெண்களும் ஆயுதமேந்தி போராடினோம்!
தெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி
1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட்டம் கொத்தகூடம் கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ்ஜியம் என்று பெயரிட்டார். எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார்.
1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூனிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம்மாவும் அதைப்படித்தார். அவர் ஆந்திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றினார்.
எங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ணனின் நடவடிக்கைகள் என்னைப்பதினான்கு வயதிலேயே புரட்சிக்காரியாக மாற்றியது. ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்டையால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயிகள் நிலம் கோரிப் போராடினர். கம்யூனிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர்.
நிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித்தது. தொட்டி குமரய்யா கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக்கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்தவும், சுடவும் பயிற்சியளித்தேன். தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகியோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார்.
சென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இடமளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர். பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன்.
எங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம். ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்றி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.
1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம்.
இந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது. 6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது. எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது. தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
வளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது. உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்பரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது.
மதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.
1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநிலக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.

இடதுசாரி அரசியலும் - நமது கடமையும்

டந்த 61 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏகபோக முதலாளித்துவ பாதை, இன்று ஒரு அபாயகரமான திருப்பத்தை அடைந்திருக்கிறது. இதற்கு மாற்று சக்தி என்று ஊடகங்களால் முன்னிறுத்தப் படும் பா.ஜ.க வின் வகுப்புவாத, குஜராத் "மாதிரி" (model) யும், சந்தர்ப்பவாத கர்நாடக "மாதிரி" யும் காட்டும் பாதை, நம் தேசத்தை பின்னோக்கி இழுத்து அழிவுக் குழியில் தள்ளுவதாக இருக்கிறது.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சற்று கவலையோடு கவனித்தால், எப்படியாவது, எல்லாவித சித்து விளையாட்டுக்களையும், குதிரை பேரங்களையும் செய்து, ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தின் "இளைய பங்காளியாக" இந்தியாவை மாற்றி, நமது தேசத்தின் சுயேச்சையான செயல்பாடுகளை காவு கொடுக்க துடிக்கிறது காங்கிரஸ். இந்த இக்கட்டான நிலையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி, நாட்டை அந்நியனிடம் அடகு வைப்பது மட்டுமில்லாமல், மக்களை வகுப்பு ரீதியாக பிரித்து அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து நிரந்தர அடிமை ஆக்கும் தனது "பாசிச" திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பா.ஜ.க.

இதுவரை அறிந்திராத எந்த ஒரு கொள்கைகளுக்காகவும் இவர்களை நாம் எதிர்க்க தேவை இல்லை,

பண வீக்கம் இரட்டை இலக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே , பெட்ரோலிய விலை உயர்வையும் மக்கள் மீது சுமத்தி ஒன்றும் தெரியாதவன் போல் "மந்திரக் கோல்" இல்லை என அறிவிக்கிறது காங்கிரஸ். இந்த செயல் பாடுகளுக்கு எந்த ஒரு எதிர்ப்போ , மாறு திட்டங்களோ சொல்லாத பா.ஜ.க, மக்கள் நலத் திட்டங்களையும் மத பிரச்சினை ஆக்கி எப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க. ஏழை நடுத்தர மக்களை கொஞ்சமும் சிந்திக்காத - இவர்களின் இந்த செயல்பாடுகளே போதும் இவர்கள் நம் எதிரிகள் என்று இனம் கண்டறிவதற்கு.

பண பலமும், அதிகார பலமும் கொண்ட இந்தக் கூட்டத்திடமிருந்து, ஏழை நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக அவர்களின் ஒவ்வொரு செயல் பாடுகளையும் ஆக்காவபூர்வமான வகையில் விமரிசித்தும், எதிர்ப்பு காட்டியும் வந்திருக்கிறார்கள். இன்று இந்த நிலை ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து நிற்கிறது. உலகம் முழுக்க இடதுசாரி அரசியலின் பக்கம் மக்களின் பக்கம் ஏழை நடுத்தர மக்கள் நம்பிக்கை வலுத்துவரும் நிலையில், இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத ஒரு மாற்று அரசியல் சக்தியாக அது வளரும் வாய்ப்புகளும் பிரகாசமாகிறது, எனவே பலரும் யார் அந்த இடதுசாரிகள் ஆர்வமோடு நோக்குவதும் தவிர்க்க முடியாதாகிறது.

பிரெஞ்சு புரட்சிக்கு பின் (1789) ஜனநாயக சக்திகள் முன்னேறிய காலத்தில், பிரெஞ்சு பாராளுமன்றம் காரசாரமான விவாதக் களமாக விளங்கியது. இந்த விவாதங்களில் பழமைவாதிகள் - சமுதாய மாற்றங்களை (முக்கியமாக தனிச் சொத்து மற்றும் அதன் அடிப்படையிலான மாற்றங்களை) கடுமையாக எதிர்த்தனர். அந்த பழைமைவாதிகள் சபாநாயகரின் வலது புற இருக்கைகளில் அமர்ந்தனர்.

இந்த சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே தவறு - அதனை அடிப்படையிலிருந்தே மாற்ற வேண்டும். மக்களுக்கு ஜனநாயம் கிடைக்க வேண்டும் என்றால் - அதிகாரம் படைத்தோர் - அடிமைகளை சுரண்டி சேர்த்த சொத்துகள் - மக்களுக்கு பொதுவான சொத்துக் களாக மாற வேண்டும் என்பது போன்ற புரட்சிகர கருத்துகளை முன்வைத்தவர்கள் சபாநாயகருக்கு இடது புறம் அமர்ந்தனர்.

புரட்சி எப்படி மன்னரை தூக்கி எறிந்ததோ - அது போலவே - மன்னரை ஒண்டி வாழ்ந்து மக்களை சுரண்டியவர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறை என்று எல்லாத்துறைகளையும் தூக்கி ஏறிய வேண்டும் என்று வாதாடினர் அந்த இடது பக்கக் காரர்கள் .

இந்தக் காரணங்களால் - அரசியலில் - வழக்கத்திற்கு மாறான சிந்தனை கொண்டவர்கள் இடது சாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்றைய கட்டுக்கோப்பை மாற்றாமல் சில அடிப்படை விசயங்களை மாற்றுவதன் மூலமே நல்ல உலகம் அமைக்க மடியும் என்ற மிதமான கோசங்கள் கொண்டவர்களும் இதில் அடங்குவர்.

ஆனால
"இன்றைய சமுதாய அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்"

என்று பகிரங்கமாகவே அறிவித்து செயல்படுபவர்கள் கம்யுனிஸ்ட்கள். ஒருவன் மற்றொருவன் உழைப்பை தெரிந்ததே சுரண்டுவதன் மூலமாக வளருவதையும் , தான் சுரண்டப்படுவது தனது தலைவிதி என்று மற்றவர்கள் நம்புவதையும் - அடிப்படையிலிருந்தே மாற்றி அமைப்பது, அதன் மூலம் ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கிச் செல்வதுதான் கம்யூனிஸ்ட்கள் லட்சியம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப் பட்ட அந்த நாளிலிருந்து கம்யூனிஸ்ட்கள் தங்கள் இலக்கை ஓர்போதும் மறைத்து வேடம் போட்டதில்லை.

அமைதியாகவோ, தேவைப்பட்டால் பலவந்தமாகவோ இலட்சியத்தை அடையத் தயாராக இருப்பது மட்டுமின்றி எண்ணற்ற தியாகங்களின் மூலம் வரலாற்றில் அதனை செயல் படுத்தியும் காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே - எல்லா கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளே.

உலகம் முழுக்க பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார காலனிகளாக நாடுகள் மாற்றப்படும் முயற்சிகளுக்கு - வலதுசாரிகள் பெரும் ஆதரவு அளித்து வரவேற்பதால், உலக ஏழை, நடுத்தர மக்களில் வாழ் நிலையே கேள்வி குறியாகி இருக்கிறது. இதன் காரணமாக இன்றைய (உலக மற்றும் இந்திய) அரசியலில் இடதுசாரி - மற்றும் கம்யூனிஸ்ட் மாற்றி நோக்கிய பார்வை தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய போதிலிருந்து அது தனது செயல் பாடுகளை மக்கள் நலன் அடிப்படையிலானதாகவே கொண்டு - தீரம் மிக்க தியாகங்கள் செய்து வளர்ந்ததாகவே இருக்கிறது.

"பிரிடிஷ் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம் இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் சதி செய்தோமென்று குற்றம் சாட்டினால் அதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்

ஆனால் நாங்கள் சதிகாரர் கள் இல்லை, பிரிடிஸ் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக சூளுரைத்து போராடிவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாங்கள்!
இந்த சதிக் குற்றச் சாட்டின்படி எங்களை தூக்கில் போட்டு கொன்று விடலாம் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! தூக்கு மேடை எங்களுக்கு துரும்பு!"


சென்னை உயர்நீதி மன்றத்தில் தோழர் பி.ராமமூர்த்தி சூளுரைத்த வாசகங்கள் அவை. இவ்வாறு சென்னை சதி வழக்கு கோவை சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதிவழக்கு .. என்று கட்சி துவங்கிய துவக்க காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி மீது போடப்பட்ட சதி வழக்குகளும் , அடக்கு முறைகளும் ஏராளம்.

காங்கிரஸ் போல் அல்லாமல் - கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்று ஆரம்பித்து - இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி முத்தாய்ப்பான கப்பல் படை எழுச்சியை காங்கிரஸ் எதிர்த்த போது - அந்த வீரர்களோடு களத்தில் இறங்கி உயிரையே பழி கொடுத்து சுதந்திர ஜோதியை காத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்

இறுதியில் கப்பல் படை வீரர்கள் சரணடையும் போது கூட
" நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம், இங்கிலாந்திடம் அல்ல"

என்று அறிவித்தார்கள். கம்யூனிஸ்ட்கள் உறவு தந்த கர்ஜனை அது.

சுத்திரத்திற்கு பிறகு , உண்டியல் கட்சி, வேலை நிறுத்தக் கட்சி என்று கிண்டலாகவும், ஏளனமாகவும் அடையாளப் படுத்தப் படும் இடதுசாரிகள் உண்மையிலேய அந்த ஏளனப் பேச்சுக்களுக்காக பெருமைப்படுகிறார்கள்.

பெரும்பான்மை ஏழை, நடுத்தர மக்களுக்கு சார்பான அரசாக அமைய வேண்டுமானால் - அந்த இயக்கம் பெரும்பான்மை மக்களின் உதவியோடு வளர்வதே சிறப்பு - அவர்கள் உண்டியல் ஏந்தி மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக சேகரித்து கட்சி நடத்துவதையும், ஏழை மக்களின் கண்ணீருக்காக அவர்களோடு வீதியில் இறங்கிப் போராடுவதையும் பெருமையாகக் கருதுவதும் - அந்த அரசு யாருக்காண அரசாக அமையும் என்பதன் வெளிப்பாடுகளே.

"சங்கமாக ஒன்று படு!
சளைக்காமல் போராடு!
சாணிப்பால் குடிக்க மறு
அடித்தால் திருப்பி அடி"


இதுதான் தஞ்சையில் கீழை தெருக்களில் - கீழ வெண்மணியில் விவசாய பணயார்களின் அடக்குமுறையை எதிர்த்த ஏழை மக்களுக்கு தோழர் சீனிவாசராவ் அளித்த போதனை. அவர்களின் கோரிக்கை
# சாணிப்பால், சவுக்கடி தண்டனை கூடாது
# அளவில் மோசடி செய்வதை தவிர்க்க முத்திரை இட்ட மரக்கால் பயன் படுத்த வேண்டும்


எங்களை மனிதனாக நடத்து என்று போராடிய அவர்களுக்கு கிடைத்த தண்டனையோ!

உலக வரலாறு பலமுறை கண்டது தான். ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக் குரல் எப்படி கொடூரமான முறையில் அடக்கப் படும் என்பதற்கு மற்றும் ஒரு சான்று. ஒரு கூட்டத்தின் அதிகார வெறிக்கு - இன்று இராக் அழிகிறதே - அதன் இந்திய சான்று

மொத்தமாக 40 பேர், மூன்று வயது குழந்தை முதல் 80 வயது கிழவன் வரை - ஒரே குடிசையில் கதறக் கதற உயிரோடு எரித்து சாம்பலாக்கப் பட்டார்கள்.

இன்று அந்த கோரங்கள் தொடர்கின்றன - கம்யூனிஸ்ட்கள் போராட்டங்களும் தொடருகின்றன. விமர் சனங்களும், சுய விமரிசனங்களுமாக அந்த இயக்கம் உலைக்களத்தில் இட்ட இரும்பாய் மெருகேறிக் கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளும் மூர்க்கமாக எதிர்த்த GATT (உலகமயம், தாராளமயம்) ஒப்பந்தம் இன்று வரலாறு காணாத விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலைஏற்றம் போன்ற நாசகர விளைவுகளை நம் மீது ஏற்படுத்தியதும், நமது அன்றாட வாழ்க்கை செலவுகளையே சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளியதும் நினைத்து பார்க்க தகுந்தது. மக்கள் விரோத ஆட்சியாளர்களின் ஒற்றை கையெழுத்துக்கு நம் அன்றாட வாழ்க்கை பலியாவதை எதிர்த்து உறுதியாகப் போராடும் இடதுசாரிகளின் பின் திரண்டு மக்கள் வாழ்வை காப்பாற்ற வேண்டியது இன்று ஜனநாயக ஆர்வலர்களின், தேசபக்தர்களின் முன் இருக்கும் அவசரக் கடமையாகும்.

இந்தியப் பிரதமருக்கு ஒரு சாமானியனின் கடிதம்

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு,

இந்தியா எனும் மகத்தான தேசத்தின் பிரதமாரான உங்களுக்கு ஒரு சாமானிய இந்தியப் பிரஜையின் வணக்கங்கள். பல
மதங்கள், பல இனங்கள் சேர்ந்து கட்டிய பூமாலையான நமது இந்தியாவில் வாழும் தேச பக்தன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனாலும் சமீப காலமாக நீங்கள் நடந்து கொள்ளும் விதம் என்னை சங்கடப் படுத்துகிறது.

மகாத்மா காந்தி படுகொலையில் ஆரம்பித்து இந்திய தேசத்தின் அமைதியை, அதன் ஒற்றுமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கு
வித்து, பிணங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜா.க வை கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அதன் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து வென்றீர்கள். உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியை இருந்தாலும் இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று இடதுசாரிகளும் உங்களுக்கு ஆதரவு தந்தார்கள்.

அதன் பிறகு உங்கள் தலைமையிலான அரசு மக்களின் வாழ்வா
தாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை” என சரியான பார்வையில் தான் ஒடிக் கொண்டிருந்தது. உங்கள் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது விமரிசனம் தந்துகொண்டிருந்த இடதுசாரிகளும் மக்கள் சார்பான நிலைப்பாடுகளையே தந்து வந்தார்கள். உண்மையை சொல்லவேண்டுமானால் நீங்கள் சரியான பாதையில் செல்வதற்க்கே அவர்களின் எச்சரிக்கைகள்தானே காரணம்?

அன்புக்குரிய பிரதமர் அவர்களே நாங்கள் வாங்கிகொண்டிருந்த 1/2 லிட்டர் பாலின் விலை 3.50 ரூபாயிளுருந்து 6.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. காய் சேர்ப்பது உடலுக்கு நல்லது என்று எனக்கு மருத்துவர் தினமும் அறிவுறுத்துகிறார். காய்-கரிகளோ பனை மரத்தில் காய்க்க ஆரம்பித்தது போல கைக்கு எட்டாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிர்க்கும் பணவீக்கம்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரியாததில்லை.

இந்தியாவில் புதிதாக 23,000 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். (அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் ,இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது) ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும், ரூ. 80க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 100 வருமானமுள்ள குடும்பமே இப்படி தள்ளாடும் என்றால் ஒரு நாளைக்கு வெறும் இருபது ரூபாயில் குடும்பம் தள்ளும் மக்களின் நிலை?

இப்போது நீங்கள் அணுசக்தி உடன்பாட்டுக்கு காட்டும் இந்த உறுதிப் பாட்டை "பெட்ரோல் விலை உயர்வின் மீதோ" அல்லது "விலைவாசி உயர்வின் மீதோ" காட்டியிருந்தால் நாங்கள் சந்தோசப் பட்டிருப்போம்.


இத்தனைக்கு பிறக்கும் "நான் எங்கள் மீது கரிசனம் காட்டுங்கள்" என்று கெஞ்சுவதர்க்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை.



டாக்டர்.ஏ.கோபால கிருஷ்ணன் - இந்திய அணுசக்தி விஞ்ஞானி கூறுகிறார். நாட்டின் எரிசக்தியை நமது நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு அமைத்துக்க் கொள்ளுவது முக்கியமானது என்று கூறுகிறார், நமது நாட்டுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தில் அதனை அமைத்துக் கொள்ளுவதே சிறந்தது என்றும் கூறுகிறார்.

அவர் சொல்லுவது போலவே 2006இல் 33 ஜிகாவாட
்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமைக்கப் பட்ட நீர் மின் உற்பத்தி நிலையாங்களை போல கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்து நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக நம் தேவையை பூர்த்தி செய்யலாமே. ?

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவே
றினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும். அதில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ளளவை அதிகரிக்க முடியுமில்லையா? அதோடு சேர்த்து ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளையும் கட்டுப்படுத்தலாமே ?

இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் திட்ட கமிசன் கண்டறிந்திருக்கிறது. இத்தனை கணக்கில் எடுத்துக்கொண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கலாமே ?

நம்மிடம் இந்த ஒப்பந்தம் போட துடிக்கும்
அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில்லை என்பது உங்களுக்கு தெரியாததில்லை? .

பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில், பல்துருவ உலகக் கோட்பாட்டை நோக்கிய சர்வதேச உறவுகள் அமைவதுதான் நமக்கு சாதகமாக அமையும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் விரும்பும் படி அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ மாற்றி அமைக்க முயற்சிக்கிறது, உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர காய் நகர்த்துகிறது. நீங்கள் நமது தேசத்தை அதற்க்கு பலியிடுகிறீர்கள். வளரும் நாடுகளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, உங்கள் தலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டை’த் திணித்தால், உலக அரசியலில் நமக்கு இருக்கும் தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். இது இடதுசாரிகளின் நியாமான கோரிக்கை.

இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையிலும் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கும் , நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும் உண்மைதானே?


இந்தியா என்ற வளம் மிகுந்த தேசத்தில் வாழ்வில் பசையற்றுப் போய் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும். நாட்டின் வீதிகளில் கண்ணீர் துளிகளோடு பசியால் குழந்தைகள் பலர் மாண்டு விழுந்த போதும். வேலையின்மை, அறியாமை, வறுமை போன்ற கொடுமையான
வியாதிகளால் இந்திய தேசம் பீடிக்கப் பட்டிருந்த போதும், கசியாத உங்கள் கண்கள், சிந்திக்காத உங்கள் இதயம் விலை வாசி பணவீக்கம் பற்றி இப்போது மட்டும் என்ன செய்யப்போகிறது.

மாண்பு மிகுந்த பிரதமர் அவர்களே, குறைந்த பட்சம் உயர்ந்த பதவிக்கான அந்த மான்பினையாவது காப்பாற்றுங்கள்,

மதர்ச்சார்பின்மை வேண்டும், சகோதரத்துவம் வேண்டும் என
்றுதான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள், இடதுசாரிகளும் அதற்காகத்தான் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் இன்று ஏகாதிபத்தியத்தின் கால்களில் நமது சுதந்திர செயல்பாடுகளை காவு கொடுக்கிறீர்கள். அதோடு சகோதரத்துவத்தையும் குழிதோண்டி புதைத்து மீண்டும் மதவெறியர்களை அரியணை அமர்த்தும் விதமாக நடந்துகொள்ளுகிறீர்கள்.

மீண்டும் சொல்லுகிறேன் இந்தக் கடிதம் கருணை வேண்டிப் போடப்
பட்ட மனுவல்ல, "நாளைய இந்தியா உங்களை 'துரோகி' என்று தூற்றும்" அதிலிருந்து பிழைக்க முயலுங்கள் என எச்சரிக்கத்தான் எழுதுகிறேன். குதிரை பேரங்களும், கத்தை நோட்டுகளும் இன்று சில அரசியல் ஆதாயங்களை தந்து, எம்.பி எண்ணிக்கையை உயர்த்தி உங்கள் அரசை நிலைக்க செய்யலாம், ஆனால் நாளைய வரலாறில் உங்கள் மீதான பழி என்றைக்கும் அகலாது.

ப்படிக்கு

செம்மலர் இரா சிந்தன்

இந்திய தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு சாமான்யன்

திமுக-பாமக அரசியல் விபச்சாரத்தில் இது புதிதல்ல....
திமுக-பாமக கட்சிகளிடையே என்ன பிரச்சனை என்று இதுவரை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. இதிலிருந்து ஏதோ உள்ளுக்குள் ஒரு பிரச்சனை நடக்கிறது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.
திமுக-பாமக ஆகிய இரு கட்சிகளுமே வன்முறைக்கு சளைத்தவர்கள் அல்ல. அரசியல் அயோக்கியர்களும் கூட. "யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை" என்பது இந்த இரு கட்சிகளுக்கும் பொருந்தும்.
இடதுசாரிகள் கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது தனி நபர் தாக்குதல் தொடுப்பதில்லை. பிரச்சனை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்யும் போது, பிரச்சனையை பேசுவதாக கூறி தனி நபர் தாக்குதல்தான் நடத்தி வந்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கருணாநிதியை விமர்சித்து வந்த போதும், அவரது கட்சிக்காரர்கள் தங்களுக்கு சேர வேண்டிய கட்டிங் பணத்தை சரியாக பெற்று வந்துள்ளனர். அதேபோன்று கூட்டணி கட்சி என்ற முறையில் ஜெயலலிதா போல் அல்லாமல் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கத்திரிகாய் முத்தினால் கடைத்தெருவுக்கு வரும் என்பார்கள். அரசியல் விபச்சாரிகளிடம்.............

கம்யூனிஸ்ட் புரட்சியும் - நாடாளுமன்றமும்

"தொழிலாளி வர்க்கத்திற்கும் - முதலாளி வகத்திர்க்கும் இடையில் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து நடை பெற்று வரும் போராட்டம் தான் மார்க்சிசத்தின் உயிர் "

இந்தப் போராட்டங்கள் மறை முகமாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும், மோதலாகவும் நடைபெறும்.

சம்பள உயர்வு, விலை ஏற்றம், அரசு அதிகாரிகள் - கம்பனி முதலாளிகளின் எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம்; ஜனநாயக உரிமைகளை நசுக்குகிற அரசுக்கு எதிரான ஜனநாயக போராட்டம், தொடர்ந்த தேர்தல் போராட்டங்கள் - கலாம் , காலம் - சூழ்நிலை மாறுதல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு தேர்தல் களையும் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் புறக்கணிக்கவேண்டிய இடத்தில் புறக்கணிப்பது. சூழ்நிலை பக்குவமடைகிறபோது மொத்த முதலாளித்துவ அமைப்பினை எதிர்க்கிற புரட்சிப் போராட்டம் - இவைகளை உள்ளடக்கியதுதான் பொதுவுடைமை வாதிகளின் யுத்த தந்திரங்கள்.

எனவே தந்திரமும் போர்முரையும் எப்போதும் ஒரே மாதிரியானது அல்ல.

தொழிலாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடுகளின் நாடாளுமன்ற அரசியலில் செயல்படுவது. "தன்னுடைய வர்க்க இலட்சியத்தையும் திட்டத்தையும் விளக்குவதற்க்கே". "ஆளும் வர்கத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் காட்சிகளுக்கு கிடைக்கும் உரிமைகள் தொழிலாளி வர்க்கத்திற்கு(அவர்களை பிரடிநிதித் துவப்படுத்தும் பொதுவுடைமை வாதிகளுக்கு) கிடைக்காது" என்பதை புரிய வைக்க இந்த அனுபவம் பயன் படும். இன்று இடதுசாரிகள் ஆட்சிபுரியும் மூன்று மாநிலங்களின் மக்களிடம் நாங்கள் அதையே செய்து வருகிறோம் - முதலாளித்துவத்திற்கு உ பட்டு செய்த சில சீர்திருத்தங்கள் தொழிலாளி வர்க்க மக்களை பொதுவுடைமையின் பக்கம் தொழிலாளி வர்க்கத்தை ஈர்க்க உபயோகப் படுத்தப் படுகிறது. அங்கெல்லாம் இடதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பதே தவறான வாதம் அதிகார மையமான எல்லா அடக்குமுறை கருவிகளும் நடுவண் அரசிடம் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

நாடாளுமன்ற அமைப்ப்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ஜெர்மாநியர்களிடம் லெனின் வைத்த வாதம் இன்னும் உபயோகமானது

"ஆளைத் தொழிலாளர்களில் ஓர் சிறுபான்மையோர் முதலாளித்துவ நிலபிரத்துவ வாதிகளை பின்பர்றுவார்கலானால் அதன் பொருள் இன்னும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு காலாவதியாக வில்லை என்பது தான் தன்னுடைய வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினருக்கு போதிக்கவும், அறியாமையிலும், வறுமையிலும் ஆழ்ந்துள்ள மக்களை தட்டி எழுப்பவும் - தொழிலாளி வர்க்கம் நாடாளுமன்ற அமைப்புகளில் போராட வேண்டும். முதலாளித்துவத்தின் அமைப்புகளை உடைக்கும் வலிமை தங்களுக்கு வராதவரை நீங்கள் இப்படித்தான் செயல் படவேண்டும். ஏன்? முதலாளித்துவ அமைப்பின் மீது மயக்கப் பட்ட - கிராம நிலப் பிரபுத்துவ சூழலில் கரட்தட்டி போன தொழிலாளி மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதாலே தான். இத்தனை செய்யா விட்டால் நீங்கள் வெறும் வாயாடிகலாகவே இருப்பீர்கள். புரட்சிகரப் பாதையில் அதிகாரத்தை கைப் பற்ற நினைக்கும் தொழிலாளி வர்க்கம் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் அதன் பின்னணியில் நிற்க வேண்டிய தொழிலாளிகளுக்கு உயர்ந்த வர்க்க உணர்வு வேண்டும். அதனை ஏற்படுத்த நாடாளுமன்ற நடைமுறை அனுபவத்தை நாம் பெறவேண்டும்"

கம்யூனிசம் எனது பார்வையில்


கட்டுரையாளர் - தோழர் குழலி

கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, Unethical முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

நடுநிலை மேதாவிகள்

நடுநிலை மேதாவிகள்

ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)
தமிழாக்கம் - செம்மலர் இரா சிந்தன்


ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . .
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மத்திய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாதத்தின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்த
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்

கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்யானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை
..........

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகலிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தொட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த

அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது !

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

தியாக சீலரா எடியூரப்பா?

கர்நாடக தேர்தல் முடிவு எடியூரப்பாவின் தியாகத்திற்கும், கவுடா - குமாரசாமி குடும்பத்தின் துரோகத்திற்க்கும் கிடைத்த முடிவு என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவும், தேவ கவுடா கட்சியும் ஆளுக்கு பாதி என்ற அடிப்படையில் ஆட்சியமைத்தன. முதலில் முதல்வரான குமாரசாமி தமது பதவிக் காலம் முடிந்தவுடன் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தார்.
எடியூரப்பா உடனடியாக பதிவியை தியாகம் செய்கிறேன் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் சென்று தேவகவுடா குடும்பத்தின் மீது மணல் வாரி தூற்றினார். இனிமேல் பாஜகவினர் கோயிலுக்கு செல்லும் பொழுது, தேவகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இடையில் கவுடா கட்சி திடீரென்று பல்டி அடித்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. உடனடியாக ' தியாக சீலர் ' எடியூரப்பா ஓடோடிச் சென்று முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். ஒரு வார காலம் தான் அவரது ஆட்சி நீடித்தது. ஒரு நாளேனும் முதல்வராக இருந்தால் போதும் என்று ஆலாய்ப் பறந்தவர் எப்படி தியாக சீலர் ஆனார் என்று புரியவில்லை. சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடிக்கு சென்றது கவுடா கட்சி மட்டும் அல்ல பாஜகவும் தான்.
எடியூரப்பா குறுகிய காலம் ஆட்சியில் இருந்த போதும், அந்த இடைக்காலத்தில் புரிந்த சாதனையை மக்கள்
அங்கீகரித்துள்ளனர் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி என்ன எடியூரப்பா ஒரு வார காலத்தில் சாதனை செய்தார் என்பது தான் புரியவில்லை. அடுத்ததாக நம்மூர் இல. கணேசன் "கர்நாடக முதல்வராக பொறுப் பேற்றுள்ள எடியூரப்பா ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் என்றும், அவர் நிச்சயம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு இடையூறு செய்யமாட்டார் என்று கூறுகிறார். ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தம் என்று முதன் முதலாக கிளப்பி விட்டதே எடியூரப்பா தான். அப்போது இல. கணேசன் " பாவம் எடியூரப்பா விபரம் தெரியாதவர், அவரை யாரோ ஓகே நக்கலுக்கு சுற்றுலா போகலாம் என்று அழைத்து வந்து விட்டார்கள் என்று கூறினார்.
இப்படி யார் கூப்பிட்டாலும் எங்கு வேண்டுமானாலும் சென்றும் போராட்டம் நடத்தும் எடியூரப்பா நாளை குஜ்ஜார் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ராஜஸ்தான் சென்றாலும் ஆச்சரியம் இல்லை. பாவம் கர்நாடக மக்கள்.

பொருளாதாரம்

கச்சாஎண்ணை-விலைஉயர்வு-மாற்று தீர்வு

(இடதுசாரிகள் விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல. மாற்று திட்டத்தை முன்வைப்பவர்கள்)

பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட் ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். டீசல் விலையில் 1 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.360 கோடி கிடைக்கும். கேஸ், சிலிண்டர் விலையில் 10 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.58 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஆனால், தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப் போகும் வருமானம் ரூ.1380 கோடி என்பது கவனிக்கத்தக்கது. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஓராண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும்.

கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும். இதே போல பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் சுங்க வரி தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் மிகப்பெரும் அளவிற்கு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.


தற்போது விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரியை குறைத்தாலே விலை உயர்வு தானாக தவிர்க்கப்பட்டு விடும்.

மக்களை மறந்த மத்திய அரசு இதனை கண்டு கொள்ள மறுக்கிறது. மக்களை திரட்டுவோம்-வெற்றிபெறுவோம்.

சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம்- மக்களின் வாழ்வாதரம் கருத்தில் கொள்ளுமா? தினமணி

(சில தினங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் அராபத் ஏரி பகுதியில், பயன்படாத நிலத்தில் இருந்த குடியிருப்புகளை வருவாய்துறை அகற்றியது. இதனை அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. இந்த பகுதியை தொடர்ந்து வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை முயற்சித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாட்டால், நடத்திய போராட்டத்தினால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினமணியில் வந்துள்ள செய்திக்கு விளக்கம் என்ற வகையில்.............)

மே-21 நாளிதழில் ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?’ என்று தலைப்பிட்ட செய்தி ஒன்றை தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது.“நீர் நிலை புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின்னணி கொண்ட ரியல் எகுடேட் அதிபர்களே, கட்சித் தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக...” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த ரியல் எகுடேட் அதிபர் எந்த தலைவரை அழைத்து வந்தார் என்பதை கூற வேண்டியதுதானே? அந்த இடங்களை வளைத்து, விற்ற ரியல் எகுடேட் அதிபர்கள், அதற்கு துணைபோன வருவாய், பத்திரப்பதிவு, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினமணி வலியுறுத்த மறுப்பது ஏன்?

“மக்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணியை பாதிப்பதாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்” என்று கூறும் தினமணி, இவ்வளவு பாதிப்புக்கும் காரணம் இந்த வருவாய் துறையினர்தான் என்பதை எங்கும் குறிப்பிடாதது வர்க்கப் பாசத்தைதான் காட்டுகிறது.

மேலும் அந்த பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் விந்தை தினமணிக்கு தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் வராது.

ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடிய திருமுல்லைவாயல் அராபத் ஏரி, அம்பத்தூர் கொரட்டுர் ஏரி, திருவேற்காடு அயனம்பாக்கம் ஏரி, பல்லாவரம் ஏரி ஆகியவை இதுவரை குடிநீருக்காக பயன்படுத்தாத பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளை மண் பரிசோதனை செய்த அதிகாரிகள், இந்த நீர்நிலைகளை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்று கூறியதை எப்படி தினமணி மறந்ததோ தெரியவில்லை.

ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களில் நீர்நிலை என்று குறிப்பிட்டுள்ளவைகளில், பெரும்பாலானவை தனது பயன்பாட்டை இழந்துள்ளன பல காலங்கள் ஆகின்றன. அந்த இடங்களில் 30-40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களிடமிருந்து அனைத்து வகையான வரிகளையும் வசூல் செய்து, அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது சென்ற காலி செய் என்றால் எங்கு செல்வது? மாற்று இடம் என்ற பெயரில் இருக்கும் இடத்தை விட்டு 75 கிலோமீட்டர் தூரம் செல்லச் சொன்னால் வாழ்வாதரம் பாதிக்காதா?

சென்னை நகரில் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதில் உள்ள சிரமங்களை புரிந்து கொண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதேபோல் 5ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு குடியிருப்புகளை இடிப்பது மனிதாபிமான செயலா?

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும், பயன்படாத நீர்நிலைப் பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

ஏதோ அரசுக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்) இடையே உள்ள பிரச்சனை என்பதுபோல் செய்தி உள்ளது. இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனையல்ல: மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதை தினமணி நாளேடு உணர வேண்டு