நாடாளுமன்ற தேர்தலும் உழைக்கும் வர்க்கமும்

ஆர்.சிங்காரவேலு

2004ல் 61 இடதுசாரி எம்.பிக்க ளின் ஆதரவுடன் அமைந்த ஐ.மு.கூ. அரசு, குறைந் தபட்ச பொதுத்திட்டத்தை அறிவித்தது. இதில் உழைப்பாளர் நலன் குறித்து என் னென்ன வாக்குறுதி அளிக் கப்பட்டது?

“அனைத்து தொழிலாளர்களின் குறிப்பாக முறைசாரா தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படும். சமூக பாதுகாப்பு, சுகாதார காப் பீடு திட்டம் விஸ்தரிக்கப்படும். முதலாளிகள் இஷ்டம்போல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும், துரத்துவதும் என்ற கொள்கை யை புறக்கணிக்கிறோம். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழிலாளர் சட்டங்களில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படும். இந்த மாறுதல்கள், தொழிற்சங்கங்களுடன் முழுமையாக கலந்தா லோசித்து கொண்டுவரப்படும். வேலை நிறுத்த உரிமை உட்பட அனைத்து உரிமை களும் பறிக்கப்படமாட்டாது. பொதுவாக லாப மீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டாது. கிராமப்புற, நகர்ப்புற ஏழை மற்றும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை உறுதிப்படுத்தப்படும்.

நடைமுறையில் மேற்கண்ட வாக் குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. கிரா மப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வறு மைக் கோட்டிற்கும் கீழுள்ளவர்க்கே வேலை என மசோதா இருந்தது. இடதுசாரிகள் நிர்ப் பந்தத்தால் இந்த ஷரத்து நீக்கப்பட்டது.

மத்திய அரசு மீது ஒரு குற்றப்பத்திரிகையே தொடுக்கலாம். உழைக்கும் மக்களின் நலன் கள் குறித்த, கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள்.

வேலை வாய்ப்பு பறிப்பு

கடந்த 5 ஆண்டுகளாக, வேலை நியமன தடைச்சட்டம் நீடிக்கிறது. ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகளில் ஏராளமான பணி யிடங்கள் நீக்கப்பட்டுவிட்டன. ரயில்வே துறையில் பல பணிகள் வெளியிடங்களுக்கு மாற்றப்படுகிறது; தனியார்களிடம் ஒப்படைக் கப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்களை நிறுத் திவிட்டு, அவர்களுக்கு பதிலாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்ற னர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகக்குறைவு.

தனியார்துறையில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தும் தொழில்களில் கூட காண்ட் ராக்ட் தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்ற னர். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி நிரந் தர வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியினால் கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் வேலைகள் இழக்கப் பட்டுள்ளன. தனியார்துறையில் நிலவும் உயர் சாதி ஆதிக்க மனோபாவத்தால், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்படவில்லை. இச்சட்டம் கொண்டுவரும் அரசியல் உறுதிப்பாடும் மைய அரசுக்கு இல்லை.

கோலோச்சும் அடிமைத்தனம்

தொழிலாளர் சட்டங்கள் எதுவும் அநேக மாக அமலாக்கப்படுவதில்லை. எதற்கெடுத் தாலும் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பு என் பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதேபோல் ஓவர்டைம் இரட்டிப்பு சம்பளம் இன்றி, 12 மணி நேர வேலை என்பது சாதாரணமாக அமலா கிறது. பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய ஆய்வாளர்கள் பணி நீக்கப்பட்டுவிட் டது. 30 கோடி உழைப்பாளிகள் தினசரி ரூ.50 கூட (ஒரு டாலர்) சம்பாதிக்க முடிவதில்லை என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கூறு கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர் உள்ள நிறுவனங்களில் பி.எப்., இஎஸ்ஐ, போன்ற சட்ட சலுகைகள் கொடுக்க வேண் டும் என்பதால், பல நிறுவனங்கள் 19 தொழி லாளரை பணியில் அமர்த்தியுள்ளதாக கணக்கு காட்டி, சட்ட சலுகைகளிலிருந்து தப்பித்துவிடுகின்றன. ஒரே காம்பவுண்டிற் குள், 2,3 நிறுவனம் செயல்படுவதாக ஜோடிக் கப்படுவதும் உண்டு.

முறைசாரா தொழிலாளர்க்கு பட்டை நாமம்

2008 டிசம்பரில் அகில இந்திய முறை சாரா தொழிலாளர் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தால் முறைசாரா தொழிலாளர்க்கு எந்த பயனுமில்லை. ‘அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’ என்பது போன்றதே இச்சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள், அர்ஜூன் சென் குப்தா தலை மையிலான கமிஷனின் பரிந்துரைகள், சமூக பாதுகாப்பு சட்டம் குறித்து தேசிய தொழிலாளர் நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கு இறுதிப் படுத்திய பரிந்துரைகள் அனைத்தும் புறக் கணிக்கப்பட்டன.

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் முழுமையாக அமலாக்கப்படும் என குறைந்தபட்ச பொதுத்திட்டம் கூறுகிறது. ஆனால் இதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்க ளுக்கு ஊட்டச்சத்து வழங்கிவரும் லட்சக் கணக்கான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், பென்சன் வழங்கப்படு வதில்லை.

கிராமப்புற சுகாதாரதிட்டம் அமலாக்கத் தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹளுழஹளு என்ற ஆயாக்களுக்கு மாதம் ரூ.600 ஊக்கத்தொகை என்று மட்டும் வழங்கப்படு கிறது. அலவன்ஸ், படிகள் எதுவும் இன்றி வஞ்சிக்கப்படுகின்றனர்.

சத்துணவு, மதிய உணவு ஊழியர் நிலை யும் துயரமாகவே உள்ளது.

பணியிடங்களில் பாலியல் பலாத்காரத் தை தடுப்பது குறித்து, சட்டம் இயற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் 12 ஆண்டு களுக்கு முன்பே வழிகாட்டியது. இத்தகைய சட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

தகவல் தொழில்நுட்ப துறையில் இரவு ஷிப்டில் பெண்கள் பணியாற்றும்போது பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் பாதுகாப்பு குறித்து சட்டம் இல்லை.

பி.எப்/பென்சன்

நாடு முழுவதும் 4 கோடி பி.எப் சந்தா தாரர்கள் உள்ளனர். பி.எப். சட்டம், 10 அல்லது அதற்குமேல் தொழிலாளர் உள்ள நிறுவனத் திற்கும் பொருந்தும் என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என அரசு அளித்த வாக் குறுதி, காகிதத்தில் உறங்குகிறது.

பி.எப். மீதான வட்டி 12 சதத்திலிருந்து 8.5 சதமாக குறைந்துவிட்டது. பி.எப் நிதி மற்றும் 1995 பென்சன் திட்டப்படி, நிறுவனங்களின் 8.33 சத ஊதிய பென்சன் பங்கு நிதி அரசின் ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டு அரசு கடந்த காலத்தில் 12 சத வட்டி வழங்கி வந்தது. பின்னர் இதை 8 சதமாக குறைத்துவிட்டது.

இடதுசாரிகள் மைய அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஆன பின்னர், பி.எப். நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற் காக, எச்எஸ்பிசி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ புருடன்சியல் ஆகிய தனியார் பி.எப் நிதி மேலாளர்களை அரசு நியமித்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில், மைய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகளின் சேவைகள்

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்திட எண்ணற்ற போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தியுள்ளன. இதனால் எந்த ஒரு நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமும் தனியார்மயமாக் கப்படவில்லை.

டில்லி, மும்பை விமான நிலையங்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பை மீறி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

பெல் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு மைய அரசு முயற்சித்தபோது, இடதுசாரிகள், ஐ.மு.கூ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிப்போம் என்ற முடிவை இடது சாரிகள் எடுத்ததால் பெல் பங்கு விற்பனை தடுக்கப்பட்டது.

நெய்வேலி, நேஷனல் அலுமினியம் கம் பெனிகளை, தனியார்மயமாக்க முயற்சிக்கப் பட்டதை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்டது.

வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் நேரடி அந்நிய முதலீடு அதிகரிக்க மைய அரசு எடுத்த முயற்சிகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அமெரிக்க நிதித்துறை நெருக்கடியினால், நமது நிதித்துறை பாதிக் கப்படாமல் பாதுகாக்க முடிந்தது.

‘வால்மார்ட்’ என்ற அமெரிக்க சில்லறை விற்பனை பகாசுர நிறுவனம் நம் நாட்டிற்குள் நுழை வதை இடதுசாரிகள் தடுத்து நிறுத் தினர்.

பென்சன் நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வகை செய்யும் சட்டம், இடதுசாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்தில், மூடிய ஆலை தொழிலாளர்க்கு மாத நிவா ரணம் ரூ.1000 அளிக்கப்படுகிறது. ரூ.5106 கோடி சிறப்பு திட்டத்தின் மூலம் கிலோ அரிசி ரூ.2, வீட்டு வசதி திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு 4 சத வட்டியில் கடன், 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நியமனம் ஆகியவை அமலாக்கப்படுகின்றன.

கேரளாவிலும், கிலோ அரிசி ரூ.2 திட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் உள்முக கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் திட்டம் அமலாக்கப் படுகிறது. வெளிநாடுகளில் வேலையிழந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்க்கு நிவாரணம் வழங்கும் நலத்திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மீட்கப்பட்டு, லாபமீட்டுபவையாக மாற்றப்பட்டன.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வும், பொதுத்துறைகளை பாதுகாக்கவும், முறைசாரா தொழிலாளர்க்கு உருப்படியான சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவும், இடதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆதர வுடன் போட்டியிடும் ஜனநாயக சக்திக ளுக்கு வாக்களிப்பதும், தேர்தல்களத்தில் முனைப்பாக தேனீக்கள் போல சுறுசுறுப்பாக ஈடுபடுவதும் தமிழக உழைப்பாளி மக்களின் கடமை.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்றாக, குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் மக்களை அவமதிக்கும் நடவடிக்கை

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

2009 மார்ச் 26 அன்று, அருணாச் சலப் பிரதேசத்தில் ஒரு தேர்தல் கூட் டத்தில் உரையாற்றிய எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை, ‘‘அமெ ரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் போன்று’’ இங்கும் நடத்துவது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்திற்குத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார். இது ஒன்றும் அப்பாவித்தனமான அழைப்பு அல்ல. இதற்கு முன் இவர் பேசும்போது, அமெ ரிக்காவில் இருப்பதைப்போலவே இங் கும் இரு கட்சி அரசியல்தான் என்று கூறினார். இவரது கூற்று, ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் ஓர் அங்க மாக இயங்கும் பாஜக, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை அமெரிக்காவில் இருப்பதுபோன்று ஜனாதிபதிக்கு அதி காரம் அளிக்கும் அமைப்பாக மாற்ற விரும்புவதை உறுதிப்படுத்துகிறது.


இந்தப் பிரச்சனை தொடர்பாக விவா தத்தை நாம் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அத்வானி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தங்கள் அணியின் சார்பில் அடுத்த பிரதமர் யார் என்று மதச்சார்பற்ற முன்னணி கூறவில் லையே என்று பேசி வருவது தொடர் பாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைத் தழுவியுள்ள நம்முடைய அரசியலமைப்பு முறையில், நாடாளுமன்றத்திற்குத் தங் கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந் தெடுத்து அனுப்பும் விதத்தில் மக்களே மகத்தான அதிகாரங்களைப் பெற்றிருக் கிறார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அரசாங் கத்தை அமைக்கிறார்கள். தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கி றார்கள். எனவே, பிரதமர் தேர்வு செய் யப்படுவதென்கிற பிரச்சனை, தேர்த லுக்குப் பின்தான் எழுகிறது. தற்சமயம் ஒரு கட்சியாலோ அல்லது ஒரு கூட்டணியாலோ, பிரதமராகச் சித்தரிக்கப் படும் நபர், அவர் போட்டியிடும் தொகுதி யில் உள்ள மக்களால் ஒதுக்கித் தள்ளப் படும் வாய்ப்பு உண்டு. பிரதமராக இருந்த காலத்திலேயே, 1977இல் ரேப ரேலி தொகுதியில் அப்போது மாபெரும் வல்லமை படைத்தவராகக் கருதப்பட்ட இந்திரா காந்தி, அத்தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டது கடந்த கால வரலாறு. ஆகையால், தேர்தலுக்கு முன் ஒருவரைப் பிரதமராகச் சித்தரிக்கும் செயல், மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நம்முடைய அரசியலமைப் புச் சட்டத்தால் மக்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மகத்தான அதிகாரத்தை மறுதலிப்பதுமாகும்.

நாட்டில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பைக் கொண்டு வர விரும்பும் பாஜக-வின் முயற்சிக ளுக்கு இப்போது நாம் வருவோம். பாஜக-வானது 1991 இல் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில், ‘‘தற்போதுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைவிட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித் திட ஓர் ஆணையம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது. இத்தகு அறி விப்பு அதன் 1996 மற்றும் 1998 தேர்தல் அறிக்கைகளில் மறுபதிப்பு செய்யப்பட வில்லை என்றபோதிலும், இன்றைய அரசியலமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற அதன் அவாவில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பானது எப்போ துமே, தற்போதைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பை விட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறையையே விரும்புகிறது. ஏனெனில், அதன் மூலமாக இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசு என்னும் வடிவத்தை, தன்னுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றி அமைத்திட வழிவகுக்கும் என்று அது நம்புகிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, அரசிய லமைப்புச் சட்டத்தில் உள்ள இப்போ தைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடிவமானது, ‘‘இந்து அல்ல’’ (ருn ழiனேர) என்று தொடர்ந்து கூறிவரு கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவ ராக இருந்த ராஜேந்திர சிங் எழுதி 1993 ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு கட்டு ரையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் நிலைபாட் டினைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில் அவர், ‘‘இந்நாட்டின் அரசியல மைப்புச் சட்டத்தில், நம் நாட்டின் பிரத்யேக அம்சங்கள் பிரதிபலித்திட வேண்டும். ‘பாரதம் என்கிற இந்தியா’ என்கிற இடத்தில், ‘இந்துஸ்தான் என்கிற பாரதம்’ என்று நாம் கூறியிருக்க வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணங் கள், ‘பன்முகக் கலாச்சாரம்’ என்று குறிப் பிடுகின்றன. ஆனால், நம்முடையது நிச்சயமாகப் பன்முகக் கலாச்சாரம் கிடையாது. கலாச்சாரம் என்பது உடை உடுத்துவதோ, மொழிகளைப் பேசுவதோ அல்ல. அடிப்படையில் நம்முடைய நாடு தனித்தன்மை வாய்ந்த கலாச்சார ஒருமை (ரniளூரந உரடவரசயட டிநேநேளள)யைக் கொண்டுள்ளது. எந்த நாடும் அது ஒரு நாடாக நீடித்திருக்க வேண்டுமானால் அது பல்வேறு அடுக்குகளாக இருந்திடக் கூடாது. இவை அனைத்தும் அரசியல மைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பதைக் காட்டுகின்றன. இந்நாட்டின் பண்புகள் மற்றும் மேதைமைக்கு (நவாடிள யனே பநnரைள)ப் பொருந்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியலமைப்புச் சட்டம் எதிர்காலத் தில் உருவாக்கப்பட வேண்டும்’’ என்று எழுதியிருந்தார். இவ்வாறு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையில் உள்ள ஒருமுகத்தன்மையை மறுதலித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்புகள் மற்றும் மேதைமைக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு முறையானது, அனைத்து அதிகாரங்களையும் ஒருவ ரின் கீழ் கொண்டுவருகிறது. அவர், நாடா ளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடப் பாடு இல்லாத நபர்களிடம் நாட்டை ஆளும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இத்தகைய முறையானது, ஆர்எஸ்எஸ் குறிக்கோளுக்கு வசதி செய்து தருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின்பே, அரசியல் நிர்ணய சபையானது, நாடாளு மன்ற அமைப்பு முறையைத் தேர்ந்தெ டுத்தது. ஏனெனில், இதன் மூலம்தான் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற் கும், இந்திய அரசியலமைப்பு முறையின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சேவை செய்திட முடியும் என்றும், அதே சமயத் தில், இந்திய சமூகத்தின் வேற்றுமைப் பன்முகத் தன்மைகளுக்கிடையிலான ஒருமுகத்தன்மையையும் பேணி வளர்த்திட முடியும் என்றும் கருதியது.

அத்வானி, அமெரிக்க பாணி, ஜனாதி பதி அமைப்பு முறை நம்நாட்டிற்கும் தேவை என்று சொல்வதன் மூலம், நம்முடைய இன்றைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பு முறையை, தங்களுடைய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக விரும்பும் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தக் கூடிய வகையில் மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்போது 2009இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங் கம் வகித்த கட்சிகள் அனைத்தும், பாஜ கவை கழட்டிவிட்டதை அடுத்து, பாஜக-வானது மீண்டும் அதே பல்லவியை - அதாவது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு மாற்றாக, அதனை சீர்குலையச் செய்து ஆர்எஸ்எஸ் விரும்பும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பு முறையைக் கொண்டு வர விழைகிறது.

தேர்தல்கள் நெருங்கி வந்துகொண் டிருக்கக்கூடிய நிலையில், பாஜக-வானது மதவெறியைக் கூர்மைப்படுத் தும் தன்னுடைய அரசியல் ஆதாயத்தை, மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் தொகு தியில், வருண் காந்தி கக்கிய மதவெறி விஷப்பிரச்சாரத்தை ஆதரித்து நிற்பது, கர்நாடக மாநிலத்தில் இளம் ஜோடி களிடையே அத்துமீறி நடந்து கொண்டி ருப்பது போன்ற நடவடிக்கைகள், அரசி யல் ஆதாயம் பெறுவதற்காக மதவெறிப் பிரச்சாரத்தைப் பரப்பிடும் முயற்சிக ளுக்குச் சான்றாகும்.

நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடி வத்தைச் சீர்குலைத்திட முயலும் இத் தகைய மதவெறி சக்திகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை, அதாவது பாரதத்தைக் காப்பதற்காக, தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

-தமிழில்: ச. வீரமணி