நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்றாக, குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் மக்களை அவமதிக்கும் நடவடிக்கை

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

2009 மார்ச் 26 அன்று, அருணாச் சலப் பிரதேசத்தில் ஒரு தேர்தல் கூட் டத்தில் உரையாற்றிய எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை, ‘‘அமெ ரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் போன்று’’ இங்கும் நடத்துவது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்திற்குத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார். இது ஒன்றும் அப்பாவித்தனமான அழைப்பு அல்ல. இதற்கு முன் இவர் பேசும்போது, அமெ ரிக்காவில் இருப்பதைப்போலவே இங் கும் இரு கட்சி அரசியல்தான் என்று கூறினார். இவரது கூற்று, ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் ஓர் அங்க மாக இயங்கும் பாஜக, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை அமெரிக்காவில் இருப்பதுபோன்று ஜனாதிபதிக்கு அதி காரம் அளிக்கும் அமைப்பாக மாற்ற விரும்புவதை உறுதிப்படுத்துகிறது.


இந்தப் பிரச்சனை தொடர்பாக விவா தத்தை நாம் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அத்வானி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தங்கள் அணியின் சார்பில் அடுத்த பிரதமர் யார் என்று மதச்சார்பற்ற முன்னணி கூறவில் லையே என்று பேசி வருவது தொடர் பாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைத் தழுவியுள்ள நம்முடைய அரசியலமைப்பு முறையில், நாடாளுமன்றத்திற்குத் தங் கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந் தெடுத்து அனுப்பும் விதத்தில் மக்களே மகத்தான அதிகாரங்களைப் பெற்றிருக் கிறார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அரசாங் கத்தை அமைக்கிறார்கள். தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கி றார்கள். எனவே, பிரதமர் தேர்வு செய் யப்படுவதென்கிற பிரச்சனை, தேர்த லுக்குப் பின்தான் எழுகிறது. தற்சமயம் ஒரு கட்சியாலோ அல்லது ஒரு கூட்டணியாலோ, பிரதமராகச் சித்தரிக்கப் படும் நபர், அவர் போட்டியிடும் தொகுதி யில் உள்ள மக்களால் ஒதுக்கித் தள்ளப் படும் வாய்ப்பு உண்டு. பிரதமராக இருந்த காலத்திலேயே, 1977இல் ரேப ரேலி தொகுதியில் அப்போது மாபெரும் வல்லமை படைத்தவராகக் கருதப்பட்ட இந்திரா காந்தி, அத்தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டது கடந்த கால வரலாறு. ஆகையால், தேர்தலுக்கு முன் ஒருவரைப் பிரதமராகச் சித்தரிக்கும் செயல், மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நம்முடைய அரசியலமைப் புச் சட்டத்தால் மக்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மகத்தான அதிகாரத்தை மறுதலிப்பதுமாகும்.

நாட்டில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பைக் கொண்டு வர விரும்பும் பாஜக-வின் முயற்சிக ளுக்கு இப்போது நாம் வருவோம். பாஜக-வானது 1991 இல் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில், ‘‘தற்போதுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைவிட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித் திட ஓர் ஆணையம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது. இத்தகு அறி விப்பு அதன் 1996 மற்றும் 1998 தேர்தல் அறிக்கைகளில் மறுபதிப்பு செய்யப்பட வில்லை என்றபோதிலும், இன்றைய அரசியலமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற அதன் அவாவில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பானது எப்போ துமே, தற்போதைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பை விட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறையையே விரும்புகிறது. ஏனெனில், அதன் மூலமாக இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசு என்னும் வடிவத்தை, தன்னுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றி அமைத்திட வழிவகுக்கும் என்று அது நம்புகிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, அரசிய லமைப்புச் சட்டத்தில் உள்ள இப்போ தைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடிவமானது, ‘‘இந்து அல்ல’’ (ருn ழiனேர) என்று தொடர்ந்து கூறிவரு கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவ ராக இருந்த ராஜேந்திர சிங் எழுதி 1993 ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு கட்டு ரையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் நிலைபாட் டினைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில் அவர், ‘‘இந்நாட்டின் அரசியல மைப்புச் சட்டத்தில், நம் நாட்டின் பிரத்யேக அம்சங்கள் பிரதிபலித்திட வேண்டும். ‘பாரதம் என்கிற இந்தியா’ என்கிற இடத்தில், ‘இந்துஸ்தான் என்கிற பாரதம்’ என்று நாம் கூறியிருக்க வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணங் கள், ‘பன்முகக் கலாச்சாரம்’ என்று குறிப் பிடுகின்றன. ஆனால், நம்முடையது நிச்சயமாகப் பன்முகக் கலாச்சாரம் கிடையாது. கலாச்சாரம் என்பது உடை உடுத்துவதோ, மொழிகளைப் பேசுவதோ அல்ல. அடிப்படையில் நம்முடைய நாடு தனித்தன்மை வாய்ந்த கலாச்சார ஒருமை (ரniளூரந உரடவரசயட டிநேநேளள)யைக் கொண்டுள்ளது. எந்த நாடும் அது ஒரு நாடாக நீடித்திருக்க வேண்டுமானால் அது பல்வேறு அடுக்குகளாக இருந்திடக் கூடாது. இவை அனைத்தும் அரசியல மைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பதைக் காட்டுகின்றன. இந்நாட்டின் பண்புகள் மற்றும் மேதைமைக்கு (நவாடிள யனே பநnரைள)ப் பொருந்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியலமைப்புச் சட்டம் எதிர்காலத் தில் உருவாக்கப்பட வேண்டும்’’ என்று எழுதியிருந்தார். இவ்வாறு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையில் உள்ள ஒருமுகத்தன்மையை மறுதலித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்புகள் மற்றும் மேதைமைக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு முறையானது, அனைத்து அதிகாரங்களையும் ஒருவ ரின் கீழ் கொண்டுவருகிறது. அவர், நாடா ளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடப் பாடு இல்லாத நபர்களிடம் நாட்டை ஆளும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இத்தகைய முறையானது, ஆர்எஸ்எஸ் குறிக்கோளுக்கு வசதி செய்து தருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின்பே, அரசியல் நிர்ணய சபையானது, நாடாளு மன்ற அமைப்பு முறையைத் தேர்ந்தெ டுத்தது. ஏனெனில், இதன் மூலம்தான் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற் கும், இந்திய அரசியலமைப்பு முறையின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சேவை செய்திட முடியும் என்றும், அதே சமயத் தில், இந்திய சமூகத்தின் வேற்றுமைப் பன்முகத் தன்மைகளுக்கிடையிலான ஒருமுகத்தன்மையையும் பேணி வளர்த்திட முடியும் என்றும் கருதியது.

அத்வானி, அமெரிக்க பாணி, ஜனாதி பதி அமைப்பு முறை நம்நாட்டிற்கும் தேவை என்று சொல்வதன் மூலம், நம்முடைய இன்றைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பு முறையை, தங்களுடைய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக விரும்பும் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தக் கூடிய வகையில் மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்போது 2009இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங் கம் வகித்த கட்சிகள் அனைத்தும், பாஜ கவை கழட்டிவிட்டதை அடுத்து, பாஜக-வானது மீண்டும் அதே பல்லவியை - அதாவது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு மாற்றாக, அதனை சீர்குலையச் செய்து ஆர்எஸ்எஸ் விரும்பும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பு முறையைக் கொண்டு வர விழைகிறது.

தேர்தல்கள் நெருங்கி வந்துகொண் டிருக்கக்கூடிய நிலையில், பாஜக-வானது மதவெறியைக் கூர்மைப்படுத் தும் தன்னுடைய அரசியல் ஆதாயத்தை, மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் தொகு தியில், வருண் காந்தி கக்கிய மதவெறி விஷப்பிரச்சாரத்தை ஆதரித்து நிற்பது, கர்நாடக மாநிலத்தில் இளம் ஜோடி களிடையே அத்துமீறி நடந்து கொண்டி ருப்பது போன்ற நடவடிக்கைகள், அரசி யல் ஆதாயம் பெறுவதற்காக மதவெறிப் பிரச்சாரத்தைப் பரப்பிடும் முயற்சிக ளுக்குச் சான்றாகும்.

நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடி வத்தைச் சீர்குலைத்திட முயலும் இத் தகைய மதவெறி சக்திகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை, அதாவது பாரதத்தைக் காப்பதற்காக, தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

-தமிழில்: ச. வீரமணி

கருத்துகள் இல்லை: